For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடிகைகளை திருமணம் செய்துக் கொண்ட இந்திய இயக்குனர்கள்!

இங்கு, நடிகைகளை திருமணம் செய்துக் கொண்ட இந்திய இயக்குனர்களை பற்றி காண்போம்.

By Viswa
|

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல.

அதில் பலருக்கு தெரிந்தது பாக்யராஜ்-பூர்ணிமா, குஷ்பு-சுந்தர்.சி, அமலா பால்-விஜய், சீதா-பார்த்திபன், தேவயாணி-ராஜகுமரன் போன்றோர் தான். ஆனால் இன்னும் பலர் உள்ளனர்.

இங்கு, அப்படி நடிகைகளை திருமணம் செய்துக் கொண்ட இந்திய இயக்குனர்களை பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குஷ்பூ - சுந்தர் சி

குஷ்பூ - சுந்தர் சி

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களை பெயர்களை கொண்டே அவ்னி சினி மேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களுது திருமணத்திற்கு முன்பு குஷ்பூவும் - நடிகர் பிரபுவுக்கும் இடையே ஏதோ காதல் இருப்பதாகவும். ஏன் சிலர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் எண்டும் கூட பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இது எந்தவளவு உண்மை என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே வெளிச்சம். இப்போது குஷ்பூ முழுநேர அரசியல்வாதியாக இருக்கிறார்.

ரோஜா - செல்வமணி!

ரோஜா - செல்வமணி!

ரோஜாவும், செல்வமணியும் நீண்ட காலம் காதலித்து வந்தனர். ஆனால், திருமண பந்தத்தில் இணைய இவர்கள் இருவரும் நிறைய நேரம் எடுத்து யோசித்து பின்னரே இணைந்ததாக அறியப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். ரோஜா தெலுங்கு அரசியலில் முழுநேர பணியாக செய்து வருகிறார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் - விஜய்

அமலா பால் - விஜய்

எ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தார் அமலா பால். அதில் தெய்வ திருமகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்குள்ளும் காதல் பூத்தது. பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். மிக இளம் வயதில், காதலித்த வேகத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டார். அதே வேகத்தில் இந்த ஜோடி விவாகரத்தும் செய்துக் கொண்டது. திருமணமான இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகாரத்து பெற்று பிரிந்தனர்.

MOST READ: பெண்ணின் கால் விரல்கள் இப்படி இருந்தால் அவர்கள் காமத்தில் அதிக நாட்டம் உள்ளவர்களாம் தெரியுமா?

கல்கி கோச்லின் - அனுராக் காஷ்யப்

கல்கி கோச்லின் - அனுராக் காஷ்யப்

கல்கி கோச்லின், அனுராக் ஜோடி கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் ஊட்டியில் நடந்தது. இவர்கள் இருவரும் தேவ் டி என்ற படத்தில் பணியாற்றும் போது தான் சந்தித்துக் கொண்டனர். இவர்கள் திருமணமான இரண்டே ஆண்டில் தங்கள் பிரிவை குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். மும்பை நீதிமன்றத்தில் இவர்கள் 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தேவயாணி - ராஜகுமாரன்

தேவயாணி - ராஜகுமாரன்

ராஜகுமாரன் உடன் ஏழு வருடங்கள் படங்களில் பணியாற்றியவர் தேவயாணி. இவர்களது பெற்றோர் காதலை ஏற்கவில்லை என்பதால், வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு குழந்தைகள். தற்சமயம் தேவயாணி சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்று அறியப்படுகிறது.

ஆதித்யா சோபா - ராணி முகர்ஜி

ஆதித்யா சோபா - ராணி முகர்ஜி

இரண்டு தலைமுறையாக சினிமா தயாரிப்பில் இருந்து வருகிற ஆதித்யா சோப்ராவின் குடும்பம். இவர் ஏற்கனவே திருமணமானவர். முதல் மனைவியை 2009ல் விவாகரத்து செய்த இவர், 2014ம் ஆண்டு நடிகை ராணி முகர்ஜியை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இத்தாலியில் இரகசியமாக இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு ஆதிரா சோப்ரா என்ற மகள் இருக்கிறாள்.

ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ணா வம்சி

ரம்யா கிருஷ்ணன் - கிருஷ்ணா வம்சி

மிக இளம் வயதில் இருந்து நடித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தனது 13, 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருக்கிறார் என்று அறியப்படுகிறது. பல விருதுகள் வாங்கி குவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு பட இயக்குனரான கிருஷ்ணா வம்சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் இருக்கிறார். காதலித்து வந்த போது ஓராண்டு காலம் சண்டையிட்டு பேசாமல் இருந்ததாகவும், அதன் பிறகு மீண்டும் காதலில் இணைந்து திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறும் ரம்யா கிருஷ்ணன். இந்த காலத்தில் எப்படி பிரேக்-அப் ஆனால் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.. இது விசித்திரமாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

மணிரத்னம் - சுகாசினி!

மணிரத்னம் - சுகாசினி!

சுகாசினி சாருஹாசனின் மகள். இவரது பூர்வீகம் பரமக்குடி. இவரும் இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னமும் கடந்த 1988ல் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற மகனும் இருக்கிறார். தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை இல்லாத நபராக வெளிப்படுத்திக் கொள்ளும் சுகாசினி, தனக்கு கோவிலுக்கு சென்று கடவுளை கும்பிடவும், தன் குடும்பத்திற்கு சந்தோஷத்தை அளிக்க வேண்டும் கெஞ்சவும் விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறார்.

MOST READ: கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

சோனாலி பிந்த்ரே - கோல்டி பேஹி

சோனாலி பிந்த்ரே - கோல்டி பேஹி

என்ன விலை அழகே.. என்று குணால் காதலித்து வந்த ரோஜா... சோனாலி பிந்த்ரே இயக்குனர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்ட கோல்டி பேஹியை 2002ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார் இவர்களுக்கு ரன்வீர் என்ற மகன் இருக்கிறார்.

உதிதா கோஸ்வாமி - மோஹித் சுரி

உதிதா கோஸ்வாமி - மோஹித் சுரி

உதிதா கோஸ்வாமி இந்தி பட நடிகை இவர் மோஹித் சுரி எனும் இந்தி சினிமா இயக்குனர்கை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் ஒன்பது ஆண்டு காலம் காதல் உறவில் இருந்தனர். கடைசியாக 2013 ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உதிதா நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. இவர்களுக்கு தேவி என்ற மகள் இருக்கிறாள்.

மகேஷ் பட் - சோனி

மகேஷ் பட் - சோனி

மகேஷ் பட் பாலிவுட் இயக்குனர், இவர் ஆலியா பட்டின் அப்பா. லாரன் பிரைட் என்ற பெண்ணை தனது 20 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்ட மகேஷ் பட், பிறகு சோனி ரஸ்தான் என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். முதல் மனைவி மூலம் ஒரு மகளும், ஒரு மகனும் கொண்டுள்ள இவர், சோனி மூலம் இரண்டு மகளால் பெற்றார். அவர்களில் ஒருவர் தான் ஆலியா பட்.

தீப்தி நவால் - பிரகாஷ் ஜா

தீப்தி நவால் - பிரகாஷ் ஜா

தீப்தி நவால் திரைப்பட இயக்குனர் பிரகாஷை சாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் திஷா எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். பிறகு தீப்தி மற்றும் பிரகாஷ் ஜா விவாகரத்து செய்துக் கொண்டனர்.

செல்வராகவன் - சோனியா அகர்வால்

செல்வராகவன் - சோனியா அகர்வால்

பஞ்சாபை சேர்ந்தவர் சோனியா அகர்வால். இவரை அறிமுகம் செய்ததே செல்வராகவன் தான். இவரது இயக்கத்தில் காதல் கொண்டேன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை என்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார் சோனியா. இந்த காலக்கட்டத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நடுவே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 2006ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், இவர்களது இல்லற வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

ப்ரியஷர்ஷன் - லிஸி

ப்ரியஷர்ஷன் - லிஸி

ப்ரியதர்ஷன் பிரபல நடிகை லிஸியை காதலித்து திருமணம் செய்திக் கொண்டார். இவர்கள் இருவரும் 1990ல் இல்லற பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகு லிஸி நடிப்பை விட்டு ஒதுங்கினார். இவர்கள் லக்ஷ்மி என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்தனர். மேலும், இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார்.

MOST READ: சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க (செய்முறை உள்ளே)

சுதிர் மிஸ்ரா - சுஷ்மிதா முகர்ஜி!

சுதிர் மிஸ்ரா - சுஷ்மிதா முகர்ஜி!

இந்தி சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். இவர் கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சுஷ்மிதா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

சேகர் கபூர் - சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி

சேகர் கபூர் - சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி

சேகர் கபூர் 1997ம் ஆண்டு சுசித்திரா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். இவர் வெறும் நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு எழுத்தாளர், ஓவியர் மற்றும் பாடகரும் கூட. இவர்கள் இருவருக்கும் காவேரி கபூர் என்ற மகள் இருக்கிறார். இவர்கள் பின்னாளில் விவாகரத்து செய்துக் கொண்டனர்.

குல்சர் - ராக்கி!

குல்சர் - ராக்கி!

குலசர், நடிகை ராக்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மேக்னா என்ற மகள் இருக்கிறார். இவர்களது மகள் நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்தவர் ஆவார். மேக்னா குல்சர் சில படங்களையும் இயக்கி இருக்கிறார்.

பொன்வண்ணன் - சரண்யா!

பொன்வண்ணன் - சரண்யா!

பல படங்களில் துணை நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமா துறையில் பணியாற்றி இருக்கிறார் பொன்வண்ணன். இவர் தனது சக நடிகையான சரண்யா அவர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலம் நடிப்புக்கு இடைவேளை விட்டிருந்த சரண்யா மீண்டும் அம்மா நடிகையாக பெரும் புகழ் பெற்றிருக்கிறார். தற்போது அம்மா வேடங்களுக்கு அதிக சம்பளம் வாங்கு நடிகை என்றும் கூறப்படுகிறார்.

பார்த்திபன் - சீதா

பார்த்திபன் - சீதா

சீதா தமிழ் நடிகர் மோக பாபு மற்றும் கன்திரவதியின் மகள். இவர் இயக்குனர் நடிகர் பார்த்திபன் மீது காதல்வயப்பட்டு 1990ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு விவாரகத்து செய்துக் கொண்டனர்.

பிறகு சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவரை 2010ல் திருமணம் செய்துக் கொண்ட சீதா அவரையும் 2016ல் விவாகரத்து செய்துவிட்டார்.

MOST READ: கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய மரணம் பற்றிய மூன்று ரகசியங்கள் இதுதான்...!

சுரேஷ் மேனன் - ரேவதி

சுரேஷ் மேனன் - ரேவதி

நடிகை ரேவதி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான சுரேஷ் மேனனை 1986ல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லை. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2002ம் ஆண்டு பிரிந்து வாழ துவங்கினார்கள். பிறகு 2013ல் இவர்கள் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.

பாக்யராஜ் - பூர்ணிமா

பாக்யராஜ் - பூர்ணிமா

பாக்யராஜ் கோபிசெட்டிபாளையம் பூர்வீகமாக கொண்டவர். முதலில் பர்வீனா என்ற நடிகையை திருமணம் செய்திருந்தார் பாக்யராஜ் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். பிறகு 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த ஜோடிக்கு சாந்தனு மற்று சரண்யா என்று இரண்டு குழந்தைகள். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் நடிகர், நடிகையாக நடித்துள்ளனர்.

 ஹரி - ப்ரீத்தி!

ஹரி - ப்ரீத்தி!

நடிகர் விஜய குமாரின் மகள் ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இயக்குனர் ஹரி. வேகவேகமாக படம் எடுக்கும் திறன் கொண்டவர் ஹரி. இவரது வேலை மட்டுமல்ல படங்களும் வேகமாக தான் நகரும். இந்த ஜோடிக்கு மூன்று மகன்கள். மூன்றாவது மகன் இவர் சேவல் என்ற படத்தை இயக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் பிறந்தார்.

ஷோபா - பாலு மகேந்திரா

ஷோபா - பாலு மகேந்திரா

நடிகை ஷோபா பாலு மகேந்திரா அவர்கள் ஒளிப்பதிவு மற்றும் இயக்கிய பல படங்களில் நடித்திருக்கிறார். பாலு மகேந்திராவின் கோகிலா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் ஷோபா நடித்திருந்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக பாலு மகேந்திரா அவர்களை திருமணம் செய்துக் கொண்ட பிறகு தனது 17வது வயதில் ஷோபா தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

MOST READ: தர்பூசணி விதைய தூக்கி வீசாதீங்க... அத வெச்சு இத்தன நோயை குணப்படுத்தலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Actresses who Married Directors in Real Life

Did you know we were able to find 14 heroine-director pairs who married each other after falling in love? Read on to know more.
Desktop Bottom Promotion