For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30+ கடந்தும் விர்ஜினாக வாழ்ந்து வரும் இந்திய நடிகைகள்!

By John
|

திருமணம் தான் ஒருவரது வாழ்வில் நறுமணம் பொங்க வைக்கும் என்று கூறுவார்கள். ஆனால், இதெல்லாம் வேண்டாம் சரிப்பட்டு வராது என்று திருமணத்தை இன்று வரை தவிர்த்து வரும் நடிகைகள் பலர் இருக்கின்றனர்.

பாலியல் சார்ந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்!!!

இதில் வேதனை என்னவெனில் இவர்கள் அனைவரும் இவர்களது இளம் வயதில் பல ஆண்களின் மனதை கொள்ளையடித்த நடிகைகள். அழகையும், கவர்ச்சியையும் பாலும், தேனுமாய் காட்டி, ஊட்டி ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு பின் திருமணத்திற்கு மட்டும் "நோ" சொல்லிவிட்டனர் இவர்கள்.

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

இப்படி 30+ கடந்தும் விர்ஜினாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்ம ஊர் நடிகைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நக்மா

நக்மா

பாட்ஷாவின் நாயகியாக தொண்ணூறுகளில் உச்சத்தில் இருந்தார் நக்மா. கங்குலியின் காதலி என சில காலம் புகழாரமும் சூடிக்கொண்டார். ஜோதிகாவின் அக்காவான இவர் இன்று வரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

கௌசல்யா

கௌசல்யா

"ஒரு மணி அடித்தால் பெண்ணே உன் ஞாபகம்" என்ற முரளியை பித்து பிடிக்க வைத்தவருக்கு, இன்று வரை யார் மேலும் பித்து பிடிக்கவில்லையாம். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷோபனா

ஷோபனா

உண்மையில் இவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையாம். நாட்டிய பேரொளி பத்மினிக்கு இவர் மகள் முறை. ஆனால் எத்தனை முறை சொல்லியும் தனது முடிவை மட்டும் இவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.

சதா

சதா

ஜெயம், அந்நியன் காலகட்டத்தில் எப்போதும் இந்த சதா பேச்சாக தான் இருந்தது. ஆனால், மிக விரைவிலேயே சதா சாதா ஆகிவிட்டார். இப்போது சின்ன, சின்ன படங்களில் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா!!! இந்த பெயர் சொன்னாலே பல இளவட்ட இதயங்கள் "கிர்ர்" என்று ஆகிவிடும். முப்பதை கடந்தாலும் நயன்தாரா இன்றும் லேடி சூப்பர்ஸ்டாராக தான் இருக்கிறார். வயதாக, வயதாக இவர் அழகும் கூடிக் கொண்டே போகிறது.

அனுஷ்கா

அனுஷ்கா

தெரியாத்தனமாக ஒரு படத்திற்காக விக்ரம் போல உடல் எடையை கூட்டிக் குறைக்கிறேன் என போய், இன்னும் உடல் எடை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார்.

தபு

தபு

கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேனில் மட்டும் காதலை கண்டுகொண்டவர், வேறு எங்கும் காதலை கண்டுக் கொள்ளவில்லை போல, திருமணமும் செய்துக் கொள்ளவில்லை.

சுஷ்மிதாசென்

சுஷ்மிதாசென்

பலர் நெஞ்சங்களை ஆட்டிப்படைத்த பிரபஞ்ச அழகி, நாற்பதை தாண்டிவிட்ட இவர் திருமணத்திற்கு நோ சொல்லி, சிங்கிள் பேரண்டாக இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Actress Who All 30 Plus and Still Unmarried

How said marriage is the only thing to realize the true happy. These bollywood divas still unmarried and lives happily even after thrity.
Desktop Bottom Promotion