டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா கவுச்சர் வீக்கின் மூன்றாம் நாளில் பிரபல டிசைனர் ரோஹித் பால் அவர்களின் ஆடைகளும் வெளியிடப்பட்டன. இவர் ஆண் மற்றும் பெண் இருபலருக்கும் மிகவும் அருமையான உடைகளை வடிவமைத்து வெளியிட்டுள்ளார். அதிலும் இவர் வடிவமைத்த உடைகள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். இங்கு மூன்றாம் நாள் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த ரோஹித் பால் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மற்றும் கோல்டன் கலந்த உடைகள்
ரோஹித் பால் இந்த முறை வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ஆடைகளை வெளியிட்டார்.
மாடல்களுடன் ரோஹித் பால்
இது தான் வடிவமைத்த ஆடைகளை உடுத்திய மாடல்களுடன் சேர்த்து ரோஹித் பால் கொடுத்த போஸ்.
டீப் நெக் உடைகள்
ரோஹித் பால் பெண்களுக்கு வடிவமைத்த உடைகள் அனைத்திலும் டீக் நெக் கொண்டிருக்கும்.
அழகான பிரிண்ட்டுகள்
ரோஹித் பாலின் உடைகள் அனைத்திலும் ஒரே நிறத்தில், ஆனால் வெவ்வேறு டிசைன்களில் அழகான பிரிண்ட்டுகள் இருக்கும்.
அதிகப்படியான ஆபரணங்கள்
பொதுவாக ரோஹித் பால் டிசைன் செய்து உடைகளுக்கு ஆபரணங்களே தேவையில்லை. ஆனால் இவரோ மாடல்களுக்கு அதிக அளவில் ஆபரணங்கள் அணிவித்து ராம்ப் வாக் கொண்டு வந்தார்.
ஆண் மற்றும் பெண்
ரோஹித் பால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வடிவமைத்த உடைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போடும் அளவில் அசத்தலாக இருக்கும்.
ஆண்களுக்கான பலவண்ண உடைகள்
ரோஹித் பால் வெறும் வெள்ளை நிற உடைகள் மட்டுமின்றி, பல வண்ணங்களிலும் ஆண்களுக்கு பந்த்கலாக்களை வடிவமைத்து வெளியிட்டார்.
பூப்பிரிண்ட் போட்ட பந்த்கலா
குறிப்பாக ஆண்களுக்கு வடிவமைத்த பந்த்கலாக்களில் பல டிசைன்களில் பூப்பிரிண்ட் போடப்பட்டிருக்கும்.
தலைப்பாகை
ரோஹித் வெறும் ஆடைகள் மட்டுமின்றி, ஆண்களுக்கு தலைப்பாகைகளையும் டிசைன் செய்து வெளியிட்டார்.