Just In
- 13 min ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 27 min ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 1 hr ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 2 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Movies Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வறுமை உங்கள வாட்டி எடுக்குதா? அப்ப அதுக்கு உங்க வீட்டுல இருக்குற இந்த பொருட்கள் தான் காரணம்...
வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும்.
ஒரு வீட்டில் வாழ்வோர் மகிழ்ச்சியோடும், செழிப்போடும் இருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் வாஸ்து சரியாக இருக்க வேண்டும். அதோடு வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி வைத்திருக்க வேண்டும். அப்படியானால் தான் குடும்பம் முன்னேறும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் நிலவும். ஆனால் எப்போது ஒருவரது வீட்டில் பிரச்சனைகளும், குழப்பங்களும் நிறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருக்கிறதோ, அந்த வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.
ஒருவேளை வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும். இல்லையெனில், வீட்டில் பிரச்சனைகளுடன் வறுமையும் வாட்டி எடுத்துவிடும். இப்போது வாஸ்துப்படி வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.
நடராஜர் சிலை
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் குழப்பத்தை உண்டாக்கும். அதோடு வீட்டில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தான் வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. உங்கள் வீட்டில் நடராஜர் சிலை இருந்தால், உடனடியாக அதை வீட்டில் இருந்து அகற்றுங்கள்.
போர் படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் போர் புரிவது போன்ற புடங்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான படங்கள் குடும்ப உறுப்பினர்களை மோசமாக பாதிக்குமாம். எனவே போர் படங்களை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
முட்கள் நிறைந்த செடி
இன்று பலருக்கும் வீட்டில் செடிகளை வளர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி வீட்டில் வளர்க்கும் போது வாஸ்துப்படி எந்த மாதிரியான செடிகளை வளர்க்கலாம், எதை வளர்க்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்துப்படி, ரோஜா செடிகளைத் தவிர, வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது. இம்மாதிரியான செடிகள் வீட்டில் எதிர்மறை உருவாக்குகிறது.
எதிர்மறையான படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தில், கப்பல் மூழ்குவது, வேட்டையாடுவது, கத்திச் சண்டை, பிடிபட்ட யானைகள் அல்லது அழுவது போன்ற படங்களை வைத்திருப்பது தவறு என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இம்மாதிரியான படங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை தங்க வைத்து, குடும்பத்தின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கும். ஆகவே வீட்டில் எப்போதும் நேர்மறையான படங்களை வைத்திருக்க முயலுங்கள்.
சூரிய அஸ்தமனம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் சூரியன் உதிக்கும் படியான படத்தை வைத்திருக்கலாம். ஆனால் சூரியன் மறையும் படியான போட்டோவை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இது குடும்ப முன்னேற்றத்தை தடுக்கும்.