Just In
- 32 min ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 1 hr ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 2 hrs ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
Don't Miss
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டிற்கு வடக்கு திசை ஜன்னல் வைப்பதன் அவசியம் என்ன? - வாஸ்து குறிப்புகள்!
வாஸ்து குறிப்பு: வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் வருமானம் பெருகுமா?என்பது பற்றி இங்க கூறப்பட்டுள்ளது.
வடக்கு பக்கமாக ஜன்னல் வைத்து அமைத்து கட்டப்பட்ட வீடுகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும், முக்கியமாக, வடக்கு பக்கமாக குறைந்த பட்சம் இரண்டு அடி காலியான இடம் விட்டு காம்பவுண்ட் கட்டும் வீடுகளுக்கு சிறப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை. குபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.
நிதி குவியல்கள்!
மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன.
கோடீஸ்வர பூதங்கள்!
சங்கநிதி, பத்மநிதி என்பவர்கள் தஞ்சை பெரிய கோவிலும் நுழைவாயில் பகுதியில் இருபுறமும் அமைந்திருக்கும் கோடீஸ்வர பூதங்கள் ஆவர்கள். இதை எளிதாக நீங்கள் கவனிக்க முடியும்.
கோயில் வழக்கம் !
கோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.
அதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாரம்!
வடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக் கொள்வது போல. இது எந்த திசை நோக்கி வாசல் கொண்டிருக்கும் வீடுகளுக்கும் பொருந்தும்.
வடக்கில் ஒளிவீச வேண்டும்!
நீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும். இதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.