Just In
- 1 hr ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 2 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 4 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பட்டாசுக்களால் தரையில் ஏற்பட்ட கறைகளைப் போக்க சில வழிகள்!!!
தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் பல்வேறு பட்டாசுக்களை விட்டு குதூகலமாக இருந்திருப்போம். அப்படி சந்தோஷமாக பட்டாசுக்களை வீட்டின் முன்பும், மாடியிலும் வெடித்ததால் தரையில் கருப்பாக கறைகளானது படிந்திருக்கும். இதனால் தரையே கேவலமாக இருக்கும். மேலும் அப்படி படிந்துள்ள கறைகளை வெறும் நீர் கொண்டு போக்குவது என்பது சுலமானது அல்ல.
ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைப் பயன்படுத்தி தரையை சுத்தம் செய்தால், பட்டாசுக்களால் ஏற்பட்ட கறைகளை எளிதில் நீக்கலாம். இங்கு தரையில் ஏற்பட்ட பட்டாசுக் கறைகளைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
சோப்புத் தண்ணீர்
சில நேரங்களில் வெறும் தண்ணீரைக் கொண்டு தரையை சுத்தம் செய்தாலும் கறைகளானது போகாமல் இருக்கும். அந்த சமயங்களில் கறைப் படிந்த இடத்தில் சோப்பு நீரை தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை
கறைகளானது கடுமையாக இருந்தால், எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சையில் உள்ள அமிலமானது, கடுமையான கறைகளையும் எளிதில் நீக்கும்.
ப்ளீச்சிங் பவுடர்
ப்ளீச்சிங் பவுடர் கூட அருமையான ஒரு பொருள். எனவே கறைப் படிந்த இடத்தில் ப்ளீச்சிங் பவுடரை தூவி 2-3 மணிநேரம் கழித்து, துடைப்பம் கொண்டு நன்கு தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.
மண்ணெண்ணெய்
தரையில் படிந்துள்ள கடுமையான கறைகளை எளிதில் நீக்க மண்ணெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மண்ணெண்ணெயை கறையுள்ள இடத்தில் தெளித்து துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மேலும் சிலர் மண்ணெண்ணெயை மற்ற கறைகளைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துவார்கள்.