Just In
- 48 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த இரண்டு மசாலா பொருட்கள வச்சி நீங்க இப்படி பண்ணா... உங்க வீட்டிலுள்ள தீய சக்தி ஓடிப்போயிடுமாம்!
பிரியாணி இலைகளை எரிக்கும்போது, வெளிப்படும் புகை இரசாயனங்களின் கலவையை வெளியேற்றுகிறது. இது ஒரு நபருக்கு அமைதியான உணர்வைத் தூண்டுகிறது. இது உங்கள் மனதை நிம்மதியடை வைக்கிறது.
'ஆற்றல்' என்ற சொல் 'வேலை செய்யும் திறன்' என வரையறுக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் பல வடிவங்களில் உள்ளது. ஆற்றல், இயக்கம், வெப்பம், மின்சாரம், இரசாயனம் மற்றும் அணுக்கரு வரை, இந்த ஆற்றல்கள் மிகவும் சக்திவாய்ந்தவை மற்றும் மனதில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் ஆன்மீக சிந்தனை ஓட்டம் ஆற்றலை நேர்மறை அல்லது எதிர்மறையாக வரையறுக்கிறது. மனிதர்களிடமும், இடங்களிலும், விஷயங்களிலும் கூட இந்த ஆற்றல்களை நாம் உணர்கிறோம். நேர்மறை ஆற்றல்கள் நம் வாழ்க்கையை நேர்மறையான முறையில் பாதிக்கும். அதே வேளையில், எதிர்மறை ஆற்றல்கள் யாருடைய வாழ்க்கையிலும் அழிவை ஏற்படுத்தும்.
உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கலாம். அது பல நேரங்களில் அமானுஷ்யமாகக் கூட உங்களுக்கு தோன்றலாம். உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலைத் தடுக்கப் பயன்படும் ஒரு எளிய தீர்வைப் பற்றி நீங்கள் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள். இந்த செயல்முறை உங்கள் வீட்டில் உள்ள எந்த எதிர்மறையையும் அகற்ற உதவும் எனக் கூறப்படுகிறது.
வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலின் அறிகுறிகள் என்ன?
எதிர்மறை ஆற்றலின் சில அறிகுறிகளை உங்கள் வீட்டிலும் வீட்டில் உள்ளவர்களிடத்தும் நீங்கள் காணலாம். தொடர்ந்து மற்றவர்களை விமர்சிப்பது மற்றும் சண்டை போடுவது, உங்கள் கோபத்தை மற்றவர்கள் மீது தொடர்ந்து வெளிப்படுத்துவது உங்களுக்குள்ள எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாகும். இது முதலில் நன்றாக உணரலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு, அது கவலையை மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் உறவுகளை பாதிக்கலாம்.
அம்மாவாசை இரவு
உங்கள் வீட்டை எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து பாதுகாக்க இந்த எளிதான தீர்வை நீங்கள் முயற்சி செய்யலாம். இது அமாவாசை இரவில் செய்யப்பட வேண்டும். இந்த சடங்கு செய்ய, நீங்கள் ஒரு விளக்கை எடுத்து, அதில் 11 கிராம்புகள் 1 பிரியாணி இலை மற்றும் 7 கற்பூரம் துண்டுகளுடன் சேர்க்க வேண்டும். இந்த இரண்டு மசாலாப் பொருட்களையும் கற்பூரத்துடன் சேர்த்து எரித்து, உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் அதன் வாசனை மற்றும் தீப்பிழம்புகள் சூழ செய்யவும். இந்த சடங்குக்குப் பிறகு, உங்கள் வீடு நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பிரியாணி இலைகளின் பயன்பாடு
பிரியாணி இலைகளை எரிக்கும்போது, வெளிப்படும் புகை இரசாயனங்களின் கலவையை வெளியேற்றுகிறது. இது ஒரு நபருக்கு அமைதியான உணர்வைத் தூண்டுகிறது. இது உங்கள் மனதை நிம்மதியடை வைக்கிறது. மேலும், இந்த புகையை உள்ளிழுத்த 10 நிமிடங்களுக்குள் அந்த எரிந்த இலைகளின் விளைவுகளை நீங்கள் உணரும்போது, உங்கள் மனதிலும் நேர்மறை எண்ணங்கள் ஏற்படும். உங்கள் வீட்டிலும் நேர்மறையான விளைவுகளே நடக்கும் என நம்புவீர்கள்.
கிராம்பு பயன்பாடு
கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு மசாலா பொருள். இது புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜோதிட ரீதியாக, இது உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகளைத் தடுக்கப் பயன்படும் மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும்.
வாஸ்து சாஸ்திரப்படி கூறுவது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிராம்பு எப்போதும் கற்பூரத்தால் எரிக்கப்படுகிறது. ஏனெனில் அவை ஒரு இடத்தில் இருக்கும் காற்றை சுத்திகரிக்கின்றன மற்றும் அனைத்து பாக்டீரியாக்களையும் அழிக்கின்றன. அதுமட்டுமின்றி, வாஸ்து அறிவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மசாலாவின் புகை சில நிலைகளில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை கூட அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.