Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 2 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைநத பழனிச்சாமி!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உள்ளாடைகளை துவைத்த பிறகு ஏன் அயர்ன் செய்து உடுத்த வேண்டும் என தெரியுமா?
உள்ளாடைகளை துவைத்த பிறகு ஏன் அயர்ன் செய்து உடுத்த வேண்டும் என தெரியுமா?
வெளிநாடுகளில் துணிகள் துவைக்க பொது வாஷிங் மெஷின் இடங்கள் இருக்கும். அங்கே சென்று நீங்கள் துவைக்க எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும், துணிகளின் எடைகளுக்கும் நீங்கள் பணம் கொடுத்து துவைத்து வரலாம். இது போன்ற சிஸ்டம் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற இடங்களிலும் நாம் காண முடியும்.
இது போன்ற இடங்களில் அதிகப்படியானோரின் உடைகள் ஒரே மெஷினில் துவைக்கும் வழக்கம் இருக்கும். இவர்கள் ஒரு வாரத்திற்கு ஓரிரு முறை தான் வாஷிங் மெஷின்களை சுத்தம் செய்வார்கள். ஆகையால் உங்கள் உடைகளில் கிருமிகளின் தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
நிபுணர்கள்!
சுத்தம் மற்றும் சுகாதாராம் சார்ந்த நிபுணர்கள் நமது வீட்டின் வாஷிங் மெஷினாக இருந்தாலுமே கூட, அதிகப்படியான உடைகளை ஒரே நேரத்தில் துவைக்க கூடாது. அதே போல, உள்ளாடை, வெளியாடைகளை தனித்தனியாக துவைக்கும் பழக்கம் கொண்டிருக்க வேண்டும் என அறிவுரைக்கிறார்கள்.
ஒருசிலருக்கு அந்தரங்க உறுப்புகளில் தொற்று இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அவர்களின் உள்ளாடைகளில் இருந்து நோய் கிருமிகள் மற்றவருடைய உடைகளிலும் பரவும் வாய்ப்புகள் இருக்கிறதாம்.
நோய் தொற்றுகள்!
ஈஸ்ட் மற்றும் ஃபங்கல் தொற்றுகள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களது உள்ளாடைகளை தனியாக துவைக்கும் பழக்கம் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இல்லையேல், ஈரப்பதத்தில் கிருமிகள் அதிகளவில் பற்றவருடைய ஆடையில் பரவ வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும், ஈஸ்ட் தொற்று இருக்கும் பெண்கள் தங்கள் உள்ளாடை சுகாரத்தில் அக்கறையாக இருக்க வேண்டியதும் அவசியம்.
ஏன் அயர்ன் செய்ய வேண்டும்?
துணி துவைப்பதால் மட்டும் உங்கள உள்ளாடைகளில் இருந்து கிருமிகள் மொத்தமாக நீங்கிவிடாது. உள்ளாடை துவைத்து நல்ல வெயில் படும் இடத்தில் காய வைக்க வேண்டும்.
மேலும், ஈஸ்ட் போன்ற தொற்று உள்ளவர்கள் துணை காய்ந்த பிறகு உபயோகிக்கும் முன்னர் அயர்ன் செய்து உடுத்துவதால் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்படும் என கூறுகிறார்கள்.
சூரிய ஒளி!
முக்கியமாக கூச்சம் காரணமாக சிலர் உள்ளாடைகளை பாத்ரூம்களில் காய வைக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இது மிகவும் தவறு, சூரியனின் வெயில் படும் இடத்தில் காயவைத்து பழகுங்கள். இதனால் முற்றிலும் ஆடைகளில் அண்டியிருக்கும் கிருமிகள் அழிக்கப்படும்.