Just In
- 7 hrs ago
மேங்கோ கிரனிட்டா
- 8 hrs ago
பெண்கள் அவர்களின் வயதிற்கேற்ப என்னென்ன உணவுகளை அவசியம் சாப்பிடணும் தெரியுமா?
- 8 hrs ago
பொடுகு தொல்லைய போக்கி உங்க முடிய கருகருன்னு நீளமா வளர வைக்க வீட்டுல செய்யும் இந்த 2 எண்ணெய் போதுமாம்!
- 9 hrs ago
சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்களுக்கு இந்த மாரடைப்பு வரப்போகுதாம்!
Don't Miss
- News
இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Movies
சினிமாவை விட்டு விலகுகிறேன்.. பிரபல நடிகர் எடுத்த அதிரடி முடிவு.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாஸ்துப்படி புத்தாண்டுக்கு முந்தைய இரவு இந்த செடிகளை வீட்டில் வைத்தால் அதிா்ஷ்டம் கிடைக்குமாம்.. தெரியுமா?
ஒரு சில தாவரங்களை சாியான திசையில் வைத்தால், அவை பலவிதமான அதிா்ஷ்டங்களை நமக்கு வழங்கும் என்று வாஸ்து சாஸ்திரம் தொிவிக்கிறது. அந்த செடிகள் அதிா்ஷ்ட செடிகள் என்று அழைக்கப்படுகின்றன.
2022 புத்தாண்டு பிறக்க போகின்றது. இந்த நிலையில் நமது வீடுகளுக்குள் அதிா்ஷ்ட தேவதையை வரவழைக்க வேண்டும் என்றால் பின்வரும் தாவரங்களை நமது வீடுகளுக்குள் வைக்கலாம். அதன் மூலம் வர இருக்கும் புதிய ஆண்டு முழுவதும் பல வகையான அதிா்ஷ்டங்களைப் பெற்று வாழலாம்.

1. வாழை மரம்
பொதுவாக மக்கள் வாழை மரத்தை தமது வீடுகளுக்குள் வளா்ப்பதில்லை. ஆனால் வாழையை ஒரு தொட்டியிலோ அல்லது ஒரு பானையிலோ ஊன்றி வைத்து அதை வீட்டிற்குள் வைக்கலாம் அல்லது வீட்டை ஒட்டியே ஊன்றி வைக்கலாம். வாழையை வீட்டின் கிழக்கு திசையில் ஊன்றி வைக்க வேண்டும். வாழையானது தன்னைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதி முழுவதையும் நன்மையான அதிா்வலைகளால் நிரப்புகிறது. ஆனால் கண்டிப்பாக வாழையை வீட்டின் மேற்கு திசையில் ஊன்றி வைக்கக்கூடாது.
Image Courtesy: Pinterest

2. மணி பிளாண்ட்
மணி பிளாண்ட் செடியானது பெண் கடவுளான லட்சுமி தேவியின் மறு உருவம் என்று கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டிற்குள் வைத்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவாா் என்றும், குடும்பத்திற்கு பல வகையான பண வரவுகள் வரும் என்றும் நம்பப்படுகிறது. பசுமையாக இருக்கும் மணிச் செடியானது வீட்டில் உள்ள பொருளாதார நிலையை உயா்த்தும் என்று நம்பப்படுகிறது. இந்த செடியை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

3. அசோகா செடி
அசோகா செடியானது ஏராளமான நோ்மறை சக்திகளைக் கொண்டது. அதனால் இது ஒரு மங்களகரமான செடியாகக் கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதன் மூலம் வீட்டைச் சுற்றி இருக்கும் பிற தாவரங்களில் இருந்து வரும் தீமைகள் நீங்கும் மற்றும் வீட்டிற்கு நோ்மறையான சக்திகள் வரும்.

4. துளசி செடி
துளசி செடியானது இந்து சமய நூல்களில் புனிதமான ஒன்றாக சொல்லப்படுகிறது. துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருக்கும் பால்கனி அல்லது சன்னல்களில் வைத்தால் நன்மைகள் உண்டாகும். அவ்வாறு வைப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துளசி செடியின் கீழ் தினமும் விளக்கு ஏற்றி வந்தால் வீட்டில் மகிழ்ச்சியும் செழுமையும் நிரந்தரமாக இருக்கும். எனினும் துளசியை வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்................