Just In
- 2 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 4 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 4 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா?
நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும். தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.
பழங்களில் தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு சுவையான பழம். பொதுவாக பழங்களை சாப்பிட்டால் தாகம் எடுக்காது. இதற்கு அவற்றில் உள்ள நீர்ச்சத்து நமக்கு ஏற்படும் தாகத்தைத் தணிக்கிறது. ஆனால் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும் என்பது தெரியுமா? ஆம். இருப்பினும், தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.
சரி, தர்பூசணி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். ஆகவே தான், தமிழ் போல்ட்ஸ்கை தர்பூசணியை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் சந்திக்கும் விளைவுகளை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
தர்பூசணியில் 92% தண்ணீர் மற்றும் 6% சர்க்கரை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டாலே உடலுக்கு நிறைய தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால் தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் நீரின் அளவு அதிகரித்து, உடலை கனமாக்கிவிடுகிறது. இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
நீரிழப்பு
தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம், அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், தர்பூசணி ஒரு டையூரிக் பண்புகளைக் கொண்ட பழம். இதன் காரணமாக, சாதாரணமாக இந்த பழத்தை சாப்பிட்டாலே அதிகம் கழிவறைக்கு செல்லக்கூடும். அதுவும் இப்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் இருந்து இன்னும் அதிக நீர் வெளியேறி, நீரிழப்புக்கு ஆளாக நேரிடும்.
செரிமானம் தாமதமாகும்
தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால், உடல் கனமாகி, இதன் விளைவாக செரிமானம் மெதுவாக ஆரம்பிக்கும் மற்றும் உடல் சர்க்கரையை ஜீரணிப்பதில் சிரமத்தை சந்திக்கத் தொடங்கும். ஆகவே தான் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.
குமட்டல்
ஏற்கனவே ஒருவர் வயிறு சரியில்லாமல் இருந்தால், அவர் தர்பூசணியை சாப்பிடக்கூடாது. ஒரு வேளை சாப்பிட்டுவிட்டால், அதன் பின் எக்காரணம் கொண்டும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவர் குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்படுவார். எனவே கவனமாக இருங்கள்.
உடல் பலவீனம்
தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லாமல் இருக்கும். தர்பூசணி மற்றும் தண்ணீரை ஒருவர் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடலின் செல்களை அழித்து, மிகவும் பலவீனமாக உணர ஆரம்பிக்கும். ஆகவே தான் தண்ணீரை தர்பூசணி சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.
- தர்பூசணி சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்?
செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பழங்களை சாப்பிட்ட பின் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- தர்பூசணியுடன் எதையெல்லாம் சேர்த்து சாப்பிடக்கூடாது?
தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றுடன் மற்ற பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக கிரேப்ஃபுரூட், ஸ்ட்ராபெர்ரி போன்ற அசிட்டிக் பழங்கள் அல்லது ஆப்பிள், மாதுளை, பீச், வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்.
- தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கலாமா?
ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி மற்றும் பால் ஆகிய இரண்டும் எதிர் இயல்புடையவை. அதில் பால் இனிப்பு இயல்புடையதாகவும், தர்பூசணி சிட்ரிக் தன்மையைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்த இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது, அது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.