For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல தண்ணீர் ஏன் அதிகமாக குடிக்கணும்? அப்படி குடிக்கலைனா என்ன நடக்கும் தெரியுமா?

குளிர்காலம் அடிக்கடி உடலில் இரத்தத்தின் சரியான விநியோகத்தைத் தடுக்கிறது மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் தசைகளின் விறைப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. உடலில் இரத்த விநியோகத்தை பராமரிக்க நீர் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும்.

|

குளிர்காலம் தொடங்கிவிட்டது. தற்போதுள்ள வானிலை காரணமாக மழையும் குளிரும் ஒன்றாக சேர்ந்து நம்மை வாட்டுகிறது. இதனால், வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. இக்காலத்தில் ஒரு கப் சூடான தேநீர் அல்லது சூடான சூப், நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி தேடும் ஒரு விஷயமாக இருக்கிறது. குளிர் மழைக்காலங்களில் நாம் தண்ணீர் அதிகமாக குடிப்பதில்லை. பொதுவாக தாக்கம் எடுக்காது. குளிர்கால மாதங்களில், தாகம் குறைவதால், மக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்கான தண்ணீரை எடுத்துக்கொள்ள தவறவிடுகின்றனர். இதனால் உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் நீரிழப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

Why You Should Drink Enough Water During The Winter Season in tamil

ஒரு ஆய்வின்படி, குளிர்காலம் அல்லது குளிர்ந்த காலநிலையில் உடல் திரவ இழப்புகள் வெப்பமான காலநிலையில் இருப்பதைப் போலவே இருக்கும். எனவே, தேவையான அளவு தண்ணீரை உட்கொள்ளாவிட்டால் நீரிழப்பு ஏற்படலாம். மேலும், காபி அல்லது தேநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பானங்கள் டையூரிடிக்ஸ் மற்றும் உடலில் நீரேற்றத்திற்குப் பதிலாக தண்ணீரை இழப்பதை ஏற்படுத்தும். இக்கட்டுரையில், குளிர்காலத்தில் அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில அற்புதமான நன்மைகளைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களை சூடாக வைத்திருக்கும்

உங்களை சூடாக வைத்திருக்கும்

குளிர் மற்றும் வெப்பமான காலநிலையில் நீர் இழப்பு ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏனென்றால், கோடையில் வெப்பமான காலநிலை உடலில் இருந்து நீர் இழப்பை ஏற்படுத்துகிறது. உடல் உழைப்பு, கடுமையான குளிரின் வெளிப்பாடு, சுவாச நீர் இழப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகள் குளிர்காலத்தில் உடல் திரவ இழப்பை ஏற்படுத்தும் மற்றும் உடலின் தெர்மோர்குலேஷன் தொந்தரவுக்கு வழிவகுக்கும். குளிர்காலத்தில் தேவையான அளவு தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடலின் வெப்பநிலையை பராமரிப்பதன் மூலம் உடலை சூடாக வைத்திருக்க முடியும்.

சோம்பலை விரட்டுகிறது

சோம்பலை விரட்டுகிறது

குளிர்காலத்தில், உடலின் முக்கிய செயல்பாடுகளைச் செய்ய ஆற்றல் சேமிப்பு முறைக்குச் செல்வதால், உடல் பெரும்பாலும் சோம்பேறித்தனமாகவும் ஆற்றல் குறைவாகவும் இருக்கும். உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் இழப்பை நிரப்புவதன் மூலம் நீர் ஒருவரை ஆற்றலுடன் உருவாக்க உதவுகிறது. நீரிழப்புக்கான முக்கிய அறிகுறிகளான சோர்வு போன்ற அறிகுறிகளைத் தடுக்கவும் இது உதவும்.

நச்சுக்களை வெளியேற்றுகிறது

நச்சுக்களை வெளியேற்றுகிறது

தண்ணீர் ஒரு சிறந்த சிஸ்டம் கிளீனராக உள்ளது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கழிவுகளை நீர் நேரடியாக நடுநிலையாக்கவில்லை என்றாலும், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல்கள் தண்ணீரின் உதவியுடன் நச்சுகளை வடிகட்ட பயன்படுத்துகின்றன. எனவே, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது, அதன் செயல்பாடு தடைப்பட்டு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, குளிர்காலம் அல்லது கோடை காலம் எதுவாக இருந்தாலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வடிகட்ட தண்ணீர் அவசியம்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்

குளிர்காலத்தின் குளிர்ந்த காற்று மற்றும் வெப்பநிலையானது சருமத்தில் இருந்து அதிக தண்ணீரை உறிஞ்சி, வறண்ட சருமம், குளிர்கால தடிப்புகள், செதில்களாக தோல் அல்லது வெடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். வறண்ட சருமம் தொடர்பான பிரச்சனைகள் வலி மற்றும் எரிச்சலூட்டும், தோற்றத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, உடல் இந்த நீர் இழப்பைச் சமாளிக்கவும், தோல் வறட்சியைத் தடுக்கவும், ஆரோக்கியமான தண்ணீரை உட்கொள்வது அவசியம். ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்க உதவும்.

மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

வைட்டமின் டி குறைபாடு மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். குளிர்காலத்தில், இந்த வைட்டமின் குறைபாடு மோசமாகிறது. ஒருவேளை பகல்நேரம் குறைவாக இருப்பதும் மற்றும் குளிரால் அடுக்கடுக்கான ஆடைகளை அணிவதன் காரணமாக இருக்கலாம். நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்கவும் சிகிச்சை செய்யவும் தண்ணீர் உதவும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது செரிமானத்தை எளிதாக்கவும், மலத்தை மென்மையாகவும், தளர்வாகவும் மாற்ற உதவுகிறது. இதனால் அது எளிதில் வெளியேறும், இதனால், மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இது குளிர்காலத்தில் குடிநீரை அத்தியாவசியமாக்குகிறது.

குளிர்கால எடை அதிகரிப்பைத் தடுக்கிறது

குளிர்கால எடை அதிகரிப்பைத் தடுக்கிறது

உடலின் சரியான நீரேற்றம் முக்கியமாக லிபோலிசிஸ் மூலம் உடல் கொழுப்புகளை இழப்பதால் உடல் எடை குறைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இது வளர்சிதை மாற்ற செயல்முறையாகும், இதில் கொலஸ்ட்ரால்கள் நீராற்பகுப்பு மூலம் உடைந்து செல்கள் ஆற்றல் மற்றும் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன. குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதால், சீசனில் அடிக்கடி ஏற்படும் எடை அதிகரிப்பைத் தடுக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும். சிறந்த முடிவுகளுக்கு, நிபுணர்கள் வெதுவெதுப்பான நீரை குடிக்க பரிந்துரைக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு அமைப்பு, சில வழிகளினால், குளிர்காலத்தில் பாதிக்கப்படுகிறது. இது ஒரு நபரின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதை கடினமாக்குகிறது. நீரேற்றம் நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிக அளவில் பாதிக்கிறது. இது முக்கியமாக உடலின் வெப்பநிலை, இரசாயன எதிர்வினைகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் போக்கு போன்ற உட்புற உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இது உமிழ்நீர் உருவாக்கம், மூட்டுகள், முதுகுத் தண்டு, சளி சவ்வுகள் மற்றும் கண்களுக்கு இடையே உயவூட்டல் ஆகியவற்றிற்கும் உதவுகிறது. உடலின் பெரும்பாலான உள் செயல்பாடுகள் நன்றாக வேலை செய்யும் போது, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது

சுவாச பிரச்சனைகளுக்கு உதவுகிறது

குளிர்ந்த வெப்பநிலையானது உடலின் முக்கிய வெப்பநிலையைக் குறைத்து, சுவாசக் குழாயில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதற்கும், சுவாசப் பாதை நோய்த்தொற்றுகளின் ஆபத்தை அதிகரிப்பதற்கும், சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. நீர் இரத்த நாளங்களுக்குள் அழுத்தத்தை உருவாக்குகிறது மற்றும் அதன் வடிவத்தை பராமரிக்க உதவுகிறது. இது சுவாசக் கோளாறுகள் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

மூட்டு வலி மற்றும் தசை விறைப்புக்கு சிகிச்சையளிக்கிறது

மூட்டு வலி மற்றும் தசை விறைப்புக்கு சிகிச்சையளிக்கிறது

குளிர்காலம் அடிக்கடி உடலில் இரத்தத்தின் சரியான விநியோகத்தைத் தடுக்கிறது மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் தசைகளின் விறைப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. உடலில் இரத்த விநியோகத்தை பராமரிக்க நீர் ஒரு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். மேலும் மூட்டுகள் மற்றும் குருத்தெலும்புகளில் திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. குளிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற இது எளிதான வழிகளில் ஒன்றாகும்.

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராட உதவுகிறது

இருமல் மற்றும் சளியை எதிர்த்துப் போராட உதவுகிறது

குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளி அடிக்கடி வரும். நீர், குறிப்பாக வெதுவெதுப்பான நீர், சுவாசக்குழாய் மற்றும் நாசி குழியில் உள்ள சளியைக் கரைத்து, அதை அகற்ற உதவும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இருமல் மற்றும் சளி வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது, இதனால் இந்த அறிகுறிகளை விடுவிக்கிறது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

குளிர்காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியத்தை மக்கள் பெரும்பாலும் உணரவில்லை என்றாலும், அதன் நுகர்வில் சமரசம் செய்யக்கூடாது. எல்லா காலங்களிலும் தண்ணீர் அவசியம். சில நேரங்களில் நீங்கள் அதை சூடான சூப்கள் அல்லது மூலிகை தேநீர் மூலம் எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், உடலின் சரியான செயல்பாடு மற்றும் பருவத்தை சமாளிக்க தேவையான அளவு தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Drink Enough Water During The Winter Season in tamil

Here's Why You Should Drink Enough Water During The Winter Season in tamil.
Desktop Bottom Promotion