Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 5 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
யாரெல்லாம் மஞ்சள் பால் குடிக்கக்கூடாது தெரியுமா?
மஞ்சள் சூடான பண்புகளைக் கொண்டதால், உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் பாலை குடிக்கவே கூடாது. இது தவிர வேறு சிலரும் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது.
பொதுவாக சளி அல்லது இருமல் போன்ற உடல்நலம் சரியில்லாத போது மஞ்சள் பால் குடிக்க நமது பாட்டிமார்கள் எப்போதும் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் மஞ்சள் பாலில் உடலினுள் ஏற்படும் காயங்களை விரைவில் குணப்படுத்தும் சக்தி உள்ளது. அதே வேளையில், சளி பிடித்திருக்கும் போது மஞ்சள் பால் குடித்தால் விரைவில் குணமாகிவிடும். மஞ்சளானது சூடான பண்புகளைக் கொண்டது. எனவே தான் சளி பிடித்திருக்கும் போது மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும் போது, சளி கரைந்து வெளியேறுகிறது.
மஞ்சள் சூடான பண்புகளைக் கொண்டதால், உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் பாலை குடிக்கவே கூடாது. இது தவிர வேறு சிலரும் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது. இப்போது யாரெல்லாம் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் மஞ்சள் கலந்த பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது. மஞ்சள் பால் மிகவும் சூடாக இருக்கும். கல்லீரல் பிரச்சனையோடு மஞ்சள் பாலைக் குடிக்கும் போது, அது கல்லீரல் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கிவிடும். எனவே தான் கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் மஞ்சள் பாலைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைப் பெற்று கொள்ள நினைக்கும் ஆண்கள்
புதிதாக திருமணமாகி குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் ஆண்கள் மஞ்சள் பாலைக் குடிக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பாலைக் குடிப்பது ஆரோக்கியமான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது. இது தவிர, மஞ்சள் பால் விந்தணுக்களின் செயல்பாட்டில் பெரும் குறைவை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட ஆரம்பித்து, குழந்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும்.
சூடான உடலைக் கொண்டவர்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் வெப்பநிலை வேறுபட்டிருக்கும். ஒருவரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, ஒருபோதும் மஞ்சள் பால் குடிக்கக்கூடாது. சூடான விளைவைக் கொண்ட மஞ்சள் பாலை குடிக்கும் போது, அது உடல் வெப்பநிலையை மேலும் அதிகரிக்கும். இதன் விளைவாக அவர்கள் பரு பிரச்சனைகள், அமைதியின்மை போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் மஞ்சள் பாலை ஒருபோதும் குடிக்கக்கூடாது. ஒருவேளை குடித்தால், அவர்களின் வயிற்றில் வெப்பம் அதிகரித்து, கருவில் உள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே தான் கர்ப்பிணி பெண்களை மஞ்சள் பால் குடிக்கக்கூடாது என்று கூறுகின்றனர். குறிப்பாக கர்ப்பமான ஆரம்ப காலத்தில் குடிப்பது சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.