Just In
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 3 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
முதல் டோஸ் தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்யணும் தெரியுமா? இரண்டாவது டோஸ் போடலாமா?
கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் சில பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமாக கருதப்படுகிறது. இருப்பினும், தடுப்பூசிகளுக்கு தீவிரமான அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்கும் மற்றும் கவனம் தேவைப்படும் குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளனர
கொரோனா வைரஸ் தடுப்பூசி மூலம் சில பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமாக கருதப்படுகிறது. இருப்பினும், தடுப்பூசிகளுக்கு தீவிரமான அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்கும் மற்றும் கவனம் தேவைப்படும் குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளனர். பயனாளிகள் பொதுவான மற்றும் அசாதாரண தடுப்பூசி அறிகுறிகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தடுப்பூசி ஒவ்வாமையை ஏற்படுத்துவது விரைவாக தீவிரமான ஒரு திருப்பத்தை அடையலாம் மற்றும் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே சிக்கலின் அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது மற்றும் எப்போது உதவி பெற வேண்டும் என்பதை அறிவது முக்கியம். முதல் ஷாட்டிற்குப் பிறகு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் உண்மையில் என்ன நடக்கும்? நீங்கள் இன்னும் இரண்டாவது டோஸ் எடுக்கலாமா? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துவது எது?
கோவிட் -19 தடுப்பூசி அல்லது ஏதேனும் தடுப்பூசிக்கு ஒவ்வாமை எதிர்வினை ஏற்படுவதால், தடுப்பூசியில் உள்ள ஒன்று அல்லது மற்ற பொருட்களுக்கு உணர்திறன் உள்ள ஒருவர் அனாபிலாக்ஸிஸுக்கு வழிவகுக்கும் ஒரு விரும்பத்தகாத எதிர்வினையை உருவாக்குகிறார். தடுப்பூசிக்குப் பிறகு யார் அதை பெறலாம் என்பதைத் தீர்மானிப்பது எளிதல்ல என்றாலும், ஏற்கனவே ஒவ்வாமை வரலாற்றைக் கொண்டவர்கள் விரும்பத்தகாத எதிர்விளைவுகளை உருவாக்கும் அதிக ஆபத்தைக் கொண்டுள்ளார்கள். தடுப்பூசியால் தீவிர ஒவ்வாமை எதிர்வினைகள் ஒரு அரிய பக்க விளைவாக கருதப்பட்டாலும். எல்லோருக்கும் அது ஏற்படுவதில்லை. ஒவ்வாமை எதிர்வினைகளுக்கு அதிக கவனம் தேவைப்படுவதால், தடுப்பூசி பெற்றவர்கள் அவற்றின் பக்க விளைவுகளுக்காக கண்காணிக்கப்படுவது மிகவும் முக்கியம்.
இது பாதகமான எதிர்வினையிலிருந்து வேறுபட்டதா?
ஒவ்வாமை எதிர்வினைகள் பாதகமான எதிர்விளைவுகளிலிருந்து சற்று வித்தியாசமானது. தடுப்பூசிக்கு ஒரு பாதகமான எதிர்வினை ஒரு தீவிர எதிர்வினை என வரையறுக்கப்படுகிறது, பெரும்பாலும் தடுப்பூசி மருந்தை எடுத்துக் கொள்ளும்போது உயிருக்கு ஆபத்தான பக்க விளைவாக இது இருக்கும். ஒவ்வாமை உடனடி நோயெதிர்ப்பு சக்தியால் அடையாளம் கொள்ளப்படும்போது, ஒரு பக்க விளைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, இரத்த உறைவு அல்லது மாரடைப்பு, 'தீவிரமான' எதிர்வினைகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் தடுப்பூசிக்குப் பிறகு 7-20 நாட்கள் இடைவெளியில் இதைக் காணலாம்.
MOST READ: இழந்த கண்பார்வையை மீண்டும் பெறுவதற்கு இந்த சுவையான பொருளை அடிக்கடி சாப்பிட்டால் போதுமாம்...!
தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தடுப்பூசிக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளின் நேரம் மற்றும் நிகழ்வை உண்மையில் கணிக்க முடியாது என்பதால், அனைத்து பயனாளிகளும் அதன் அறிகுறிகளை அறிந்திருப்பது முக்கியம். இருப்பினும், தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் உங்களுக்கு சில விரும்பத்தகாத எதிர்வினைகள் ஏற்பட்டால், உடனடியாக சுகாதார வழங்குநர்களை எச்சரிக்கவும். உடனடி ஒவ்வாமை எதிர்வினை தடுப்பூசிக்கு பிந்தைய 4 மணிநேரம் வரை தாக்கும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது உதவியாக இருக்கும். எதிர்வினைகளைப் பொறுத்தவரை, நீங்கள் பெறும் எதிர்வினை வகைக்கு எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் இடத்தில் சொறி வந்தால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். சில ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் ஒவ்வாமை மருந்துகள் அதற்காக வழங்கப்படலாம். அனாபிலாக்ஸிஸ் (உங்களுக்கு மயக்கம், வியர்வை ஏற்படலாம்) போன்ற கடுமையான எதிர்வினை இருந்தால், சுகாதாரப் பணியாளர்கள் உங்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம், அங்கு மதிப்பீடுகள் குறைந்தது பல மணிநேரங்கள் தொடர்ந்து நடக்கலாம். ஒவ்வாமை எதிர்வினைகளை சரியான நேரத்தில் கண்டறிந்தால் நன்கு நிர்வகிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?
- தோல் எதிர்வினைகள் (படை நோய், கொப்புளங்கள், சிவத்தல், வீக்கம் போன்றவை)
- உயர் இரத்த அழுத்தம்
- வியர்வை
- பலவீனமான, விரைவான துடிப்பு, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்
- குமட்டல் மற்றும் வாந்தி
- குழப்பம் மற்றும் தலைவலி
- மூக்குதல், மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இருமல்
- முந்தைய அனாபிலாக்டிக் எதிர்வினை கொண்டவர்கள்
- ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை வரலாறு
- தடுப்பூசிகளில் இருக்கும் ஒன்று அல்லது மற்ற பொருட்களுக்கு உணர்திறன்.
ஏதேனும் ஆபத்து காரணிகள் உள்ளதா?
சிலர் தடுப்பூசிகளிலிருந்து பாதகமான எதிர்விளைவுகள் மற்றும் தீவிர ஒவ்வாமை எதிர்விளைவுகளை உருவாக்கும் அபாயத்தில் இருக்கலாம்:
MOST READ: எடைக்குறைப்பு பற்றிய தலைசுற்ற வைக்கும் கட்டுக்கதைகள்... நாம நம்பிகிட்டு இருந்த எல்லாமே பொய்தான்...!
இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளலாமா?
ஒரு அலர்ஜியை உணர்வது இரண்டாவது ஷாட்டைப் பெற பல தயக்கங்களை அல்லது பயத்தை ஏற்படுத்தலாம், குறிப்பாக முதல் ஷாட்டிற்குப் பிறகு அவர்கள் கடுமையான ஒன்றை எடுத்தால். இருப்பினும், இரண்டாவது ஷாட்டின் தேவை அல்லது தவிர்ப்பு சில காரணிகளைப் பொறுத்தது. நீங்கள் தீவிரமற்ற எதிர்வினையைப் பெற்றால், கையில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன், நீங்கள் இன்னும் ஷாட் பெற அறிவுறுத்தப்படலாம். தீவிரமான எதிர்விளைவுகள் இருக்கும் போது, ஒரு நபரின் வரலாறு மற்றும் உணர்திறனைப் பொறுத்து இரண்டாவது ஷாட் சில நேரங்களில் மறுக்கப்படலாம். ஒவ்வாமை எதிர்வினைக்கு உட்பட்ட ஒருவருக்கு திட்டமிடப்பட்ட ஷாட் கிடைத்தால், ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். முந்தைய வரலாற்றைக் கொண்ட ஒருவர் தடுப்பூசிக்கு முன்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தவோ அல்லது இடைநிறுத்தவோ கூடாது.