Just In
- 10 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தினமும் ஒரு கப் கறிவேப்பிலை டீ குடிப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
கறிவேப்பிலை பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம்.
தென்னிந்தியாவில் அன்றாட சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தும் ஒர் பொதுவான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும். இத்தகைய கறிவேப்பிலை ஆரோக்கியமானது என்பதை அனைவருமே அறிவோம். இருப்பினும், அதை மென்று சாப்பிட பிடிக்காது. எனவே சமையலில் சேர்க்கும் இந்த கறிவேப்பிலையை பெரும்பாலானோர் தூக்கி எறிவதுண்டு.
கறிவேப்பிலை உடலில் பல மாயங்களை செய்யக்கூடியது. நமக்கு தெரிந்தது எல்லாம் கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது மட்டுமே. ஆனால் கறிவேப்பிலை உடலில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பழங்காலம் முதலா பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரியுமா? ஆம், முந்தைய காலத்தில் சில உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிப்பார்களாம். உங்களுக்கு அந்த கறிவேப்பிலை டீயை எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கறிவேப்பிலை டீயின் செய்முறை மற்றும் கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
கறிவேப்பிலை டீ தயாரிப்பது எப்படி?
* முதலில் ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையை போட்டு, அரை மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
முக்கியமாக கறிவேப்பிலை டீயின் முழு பலனைப் பெற வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்போது கறிவேப்பிலை டீ குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.
புற்றுநோய் அபாயம் குறையும்
உடலில் ப்ரீ-ராடிக்கல்கள் அதிகம் இருந்தால், அது புற்றுநோய் போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே கறிவேப்பிலை டீயைக் குடிக்கும் போது, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடல் செல்கள் சேதமடைமடைவதைத் தடுக்கின்றன.
சர்க்கரை நோய் கட்டுப்படும்
கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். கறிவேப்பிலையினது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களைத் தூண்டிவிட்டு, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், மருத்துவரின் அனுமதியைப் பெற்று கறிவேப்பிலை டீயைக் குடிக்கலாம்.
மலச்சிக்கல் நீங்கி, செரிமானம் மேம்படும்
கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள செரிமான நொதிகள், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் கறிவேப்பிலையில் மலமிளக்கி பண்புகள் உள்ளதால், இது குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைப் போக்கும். மேலும் இந்த டீயைக் குடிப்பதன் மூலம் வாய்வுத் தொல்லை பிரச்சனை நீங்கும்.
காலை சோர்வு
கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் காலைச் சோர்வு அல்லது காலை சுகவீனம். ஆனால் கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், கர்ப்பிணிகள் வாந்தி, குமட்டல் மற்றும் காலைச் சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஆனால் இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தலைமுடி பிரச்சனைகள்
கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டீன் மற்றும் புரோட்டீன் உள்ளது. இவை இரண்டுமே தலைமுடிக்கு மிகவும் இன்றியமையாத சத்துக்களாகும். எனவே கறிவேப்பிலை டீயைக் குடிப்பதன் மூலம், இது பொடுகுத் தொல்லை, தலைமுடி உதிர்வு, முடி ஒல்லியாவது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது.
கொழுப்புக்களைக் குறைக்கும்
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவே கறிவேப்பிலை டீயை தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் சுத்தமாக இருப்பதோடு, தொப்பையும் குறைவதைக் காணலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்கும்
கறிவேப்பிலையின் மணம் ஒரு நல்ல மன அழுத்த நிவாரணியாக செயல்படுகிறது. தற்போது மன அழுத்தம் தான் மக்கள் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாக உள்ளது. ஆகவே கறிவேப்பிலை டீயை தினசரி குடிப்பதன் மூலம், மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.