Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 10 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெருங்காயத்தை ஏன் தினமும் நீங்க ஏன் சாப்பிடனும்னு தெரியுமா? தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க...!
ஆயுர்வேத கூற்றுப்படி, இந்த மசாலா மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது.
இந்திய உணவுகளில் பெருங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மசாலாப் பொருட்கள் மருத்துவ பண்புகள் கொண்டவை. செரிமானம் ஆவதற்கு கடினமாக உள்ள உணவுகளில் பெருங்காயத்தை சேர்த்துக் கொள்ள மருத்தவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெருங்காயம் இந்திய உணவு வகைகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். வலுவான நறுமணத்துடன், இது பருப்புகள் மற்றும் கறிகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.
ஆயுர்வேத கூற்றுப்படி, இந்த மசாலா மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது. நீங்கள் ஏன் தினமும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை உட்கொள்ள வேண்டும் என்று இக்கட்டுரையில் உங்களுக்கு சொல்கிறோம்.
செரிமானத்திற்கு நல்லது
அஜீரணம், வயிற்று வீக்கம் முதல் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி வரை, ஒவ்வொரு செரிமான பிரச்சினைக்கும் பெருங்காயம் நல்லது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வயிற்றில் இருந்து காற்றை விடுவிக்கவும் உதவுகிறது.
MOST READ: உங்க வயிற்று பிரச்சனைகள சரிசெய்ய மூன்னே நிமிஷத்துல தயாரிக்க கூடிய இந்த டீயை குடிங்க...!
இரத்த அழுத்த அளவை நிர்வகிக்கிறது
நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், பெருங்காயம் உங்கள் மீட்பராக இருக்கலாம். இது கூமரின் என்ற சேர்மத்தில் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, இருமல் மற்றும் சளி ஆகியவை தினமும் இருக்கும். ஆதலால், பெருங்காயத்தை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச மண்டலத்தை எளிதில் வைத்திருக்கின்றன.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
பெருங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், முடி மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
MOST READ: எடை குறைப்பு பத்தி நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள் என்னென்ன தெரியுமா?
தலைவலியைக் குறைக்கிறது
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளை, சிறிதளவு தண்ணீரை சூடாக்கி ஒன்றாக கலக்க வேண்டும். இந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், தலைவலியிலிருந்து விடுபடலாம்.
மாதவிடாய் வலியை நீக்குகிறது
அடிவயிறு மற்றும் முதுகில் மாதவிடாய் வலி மற்றும் பிடிப்பைக் குறைக்க பெருங்காயம் உதவியாக இருக்கும். இது இயற்கையான இரத்த மெல்லியதாகும், இது இரத்தத்தை சீராக ஓட உதவுகிறது.
சரும நோய்கள்
சந்தையில் கிடைக்கும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காயங்கள் நீங்கும்.
MOST READ: உங்களுக்கு இந்த உணவுகள சாப்பிடணும்னு தோணுதா? அப்ப உடம்புல இந்த பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்காம்!
ஆண்மை குறைவு
சமையல் பொருளான பெருங்காயம் ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.
நரம்பு கோளாறு நீங்கும்
வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயத்திற்கும் உள்ளது. நரம்புக் கோளாறுகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்து. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.