Just In
- 2 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 4 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 9 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'இந்த' இரண்டு காய்கறிகளையும் சேர்த்த ஜூஸ் கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்குமா?
இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனால், இந்த ஆரோக்கிய பானத்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சி உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. நாளுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த இரண்டாவது அலை நாடு முழுவதும் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. அதனால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருப்பது முக்கியம்.
அதற்கான சிறந்த வழி அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் இயற்கை மூலங்களில் ஈடுபடுவதுதான். இதைக் கருத்தில் கொண்டு, நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய எளிதான பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் செய்முறையை நீங்கள் இங்கே தெரிந்துகொள்ளுங்கள். மேலும் வைரஸ் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு இது நல்லது. செய்முறையையும் அதன் நன்மைகளையும் அறிய இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
கேரட்-1
பீட்ரூட்-1
கறிவேப்பிலை 8-10
இஞ்சி 1 அங்குலம்
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
MOST READ: கொடிய கொரோனா உங்க நுரையீரல மட்டுமில்ல 'இந்த' உறுப்புகளையும் கடுமையா பாதிக்குமாம் தெரியுமா?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானம் செய்வது எப்படி?
நீங்கள் செய்ய வேண்டியது கேரட் மற்றும் பீட்ரூடை நன்கு கழுவ வேண்டும். பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். அடுத்து, அனைத்து பொருட்களையும் ஒரு ஜூஸரில் கலந்து பின்னர் ஒரு கிளாஸில் ஊற்றி, உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலக்கவும். இப்போது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவையான பானம் தயார்.
சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்
பீட்ரூட்டில் இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராடுகிறது. இது உடலுக்கு ஒரு கேடயத்தை உருவாக்க உதவும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. மறுபுறம், கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன, அவை ஒன்றாக ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன மற்றும் நோயெதிர்ப்பு செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கேரட்டில் வைட்டமின் பி 6 உள்ளது. இது ஒரு உகந்த நோயெதிர்ப்பு சக்திக்கு அவசியம்.
தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது
இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனால், இந்த ஆரோக்கிய பானத்தில் இஞ்சி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சி உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளிலும் நிறைந்துள்ளது. இது தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.