Just In
- 18 min ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 42 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 5 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
Don't Miss
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Movies வடிவேலு பற்றி என்ன தெரியும்?.. அவரால்தான் கஞ்சி குடிக்கிறேன்.. பாவா லட்சுமணன் ஓபன் டாக்
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க..
வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய அலையை விட இரண்டாம் அலையில் கோவிட் தொற்று மிகவும் வேகமாக மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ஆரம்ப காலத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது பரவும் கொரோனாவால் பலர் உயிரை இழக்கிறார்கள். அதோடு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்தே, கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து வருகிறார்கள். இப்படி ஒருவரது வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் போது, வீட்டில் உள்ளோர் நோயாளியைக் கவனித்துக் கொள்வதைத் தவிர, நோய்த்தொற்றிக் கொள்ளாமல் இருக்க பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
MOST READ: இரத்தத்தில் போதுமான ஆக்சிஜன் இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!
அதற்கு ஒருசில பாதுகாப்பான விஷயங்களை வீட்டில் உள்ளோர் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். கீழே அதுப்போன்ற விஷயங்களின் பட்டியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மாஸ்க் அணியவும்
உங்கள் வீட்டில் கோவிட் நோயாளி தனிமைப்படுத்திக் கொண்டு, தனியாக ஒரு அறையில் இருந்தால், வீட்டில் உள்ளோர் அனைவருமே நாள் முழுவதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அதோடு தேவையில்லாமல் மாஸ்க்கை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மாஸ்க்கை கழற்றிய பின், தவறாமல் கைகளைக் கழுவ வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவவும்
ஆக்சிஜன் அளவைக் கண்காணிப்பது முதல் உணவு மற்றும் மருந்து கொடுப்பது வரை, பல வழிகளில் கொரோனா நோயாளிக்கு உதவ வேண்டியிருக்கலாம். ஆகவே அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய தவறாதீர்கள். முக்கியமாக தேவையில்லாமல் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
தனி பாத்திரத்தைப் பயன்படுத்தவும்
வீட்டில் கொரோனா நோயாளி இருந்தால், அவர்களுக்கு என்று தனி பாத்திரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை மற்ற பாத்திரங்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டாம். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை தனியாக கழுவுங்கள். முக்கியமாக அந்த பாத்திரங்களைக் கழுவும் போது மாஸ்க் அணிந்து கொள்வதோடு, கையில் கையுறை அணியுங்கள் மற்றும் சுடுநீரால் அவர்களுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களைக் கழுவுங்கள். இறுதியாக பாத்திரங்களைக் கழுவிய பின் தவறாமல் உங்கள் கைகளை நன்கு சுத்தமாக கழுவுங்கள்.
மேற்பரப்புகளை சுத்தம் செய்யவும்
நீங்கள் அடிக்கடித் தொடும் மேற்பரப்புகளான ஸ்விட் போர்டு, டேபிள் டாப், ரிமோட், கதவு கைப்பிடி, குழாய் போன்றவற்றை தினமும் சுத்தம் செய்யுங்கள். சொல்லப்போனால் ஒரு நாளைக்கு பல முறை அந்த மேற்பரப்புகளை சுத்தம் செய்ய முயலுங்கள்.
ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும்
நீங்கள் ஒரு கோவிட் நோயாளியைக் கவனிக்கும் போது, உங்களது ஆரோக்கியத்தையும் தவறாமல் கண்காணிக்க வேண்டும். இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற எந்த அறிகுறிகளை அனுபவிக்கிறீர்களா என்பதை கவனிக்கவும். ஒருவேளை நீங்கள் அவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தால், நீங்களும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும்.