For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளை மருந்துகள் இல்லாமல் எப்படி குணப்படுத்துவது தெரியுமா?

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது, அவை 48 மணி நேரம் வரை நீடிக்கும். இருப்பினும், அவை சற்று அசெளகரியமாகவும், விரும்பத்தகாததாகவும் இருக்கும்.

|

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது மற்றும் 45+ வயது பிரிவில் உள்ள பலர் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற வரிசையில் நிற்கிறார்கள். தடுப்பூசி ஆபத்தான தொற்றுநோய் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நம்பிக்கையை எழுப்பியுள்ள நிலையில், தடுப்பூசியின் பின் விளைவுகள் பற்றியும் சில கவலைகள் உள்ளன.

How To Manage COVID Vaccine Side Effects Without Painkillers

ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் ரியாகோஜெனிக் மற்றும் லேசான காய்ச்சல், குமட்டல், குளிர், உடல்நலக்குறைவு, உடல் வலி போன்ற சில பின் விளைவுகளைத் ஏற்படுத்துகின்றன, மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஊசி போடும் இடத்தில் வலி மற்றும் விறைப்பு ஏற்படுகிறது. இது COVID கை என்று அழைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தடுப்பூசியின் பக்க விளைவுகள்

தடுப்பூசியின் பக்க விளைவுகள்

தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பானது, அவை 48 மணி நேரம் வரை நீடிக்கும். இருப்பினும், அவை சற்று அசெளகரியமாகவும், விரும்பத்தகாததாகவும் இருக்கும், மேலும் உங்களை ஒரு வலி நிவாரணி மருந்தை நாட வைக்கும். ஆனால் அது அனைவரின் விருப்பமான தேர்வாக இருக்காது மற்றும் சில மருந்துகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம் அல்லது மிதமான பயன்பாடு தேவைப்படலாம்.

வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டுமா?

வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டுமா?

வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துவது தடுப்பூசியின் செயல்பாட்டைத் தவிர்க்கலாம் அல்லது கடுமையான விளைவுகளைத் தூண்டக்கூடும் என்பதை ஆதரிக்கும் எந்த ஆராய்ச்சியும் இல்லை. இருப்பினும், எந்தவொரு மருந்தையும் போல, கண்மூடித்தனமான பயன்பாடு சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்வதற்க்கு முன்னும் பின்னும் எடுக்கப்படும் சில வலி நிவாரணிகள் நோயெதிர்ப்பு சக்தியை மங்கச் செய்யலாம் என்பதையும் மருத்துவர்கள் கவனித்துள்ளனர். இந்த கட்டத்தில், உங்கள் தடுப்பூசிக்குப் பிறகு உடனடியாக உங்கள் வலி நிவாரணி மருந்தை உட்கொள்வது நல்லது அல்ல.

காய்ச்சலைப் போக்க ஈரத்துணியைப் பயன்படுத்துங்கள்

காய்ச்சலைப் போக்க ஈரத்துணியைப் பயன்படுத்துங்கள்

லேசான காய்ச்சலை உருவாக்குவது தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் அழற்சியின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். தடுப்பூசி எடுத்துக்கொண்டு முடிந்த சில மணிநேரங்களுக்கு நீடிக்கும் லேசான காய்ச்சலை உணருவது முற்றிலும் இயல்பானது. இருப்பினும், உங்கள் காய்ச்சலைக் குறைக்க நீங்கள் மருந்து அல்லாத வழிகளைத் தேடுகிறீர்களானால், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பயன்படுத்துவது நல்ல மாற்றாக இருக்கும், இது வெப்பநிலையை குறைத்து காய்ச்சலை நன்கு நிர்வகிக்கும். இதே வைத்தியம் தலைவலியை குறைக்கவும் உதவும். நீங்கள் நன்றாக தூங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், உங்கள் காய்ச்சலின் தீவிரத்தை குறைப்பதற்கும், நன்கு குணமடைவதற்கும் போதுமான ஓய்வு எடுப்பதை உறுதி செய்வது முக்கியம்.

MOST READ: ஹாலிவுட் படங்களை மிஞ்சிய தலைசுற்ற வைக்கும் உலகில் நடந்த வினோதமான பேரழிவுகள்... ஷாக் ஆகாம படிங்க...!

நீரேற்றத்துடன் நன்கு சாப்பிட வேண்டும்

நீரேற்றத்துடன் நன்கு சாப்பிட வேண்டும்

வீக்கமும் ஒரு பக்க விளைவாக ஏற்படலாம், தடுப்பூசிக்குப் பிறகு உங்கள் உடல் சோர்வு மற்றும் வறண்டதாக உணர்கிறது. உடல்நலக்குறைவு மற்றும் மந்தநிலையை எதிர்கொள்ளும் ஒரு நிலையான உணர்வு பொதுவாக ஏற்படுகிறது. இந்த பக்க விளைவுகளை சமாளிப்பதற்கான சிறந்த வழி, உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மிதப்படுத்துவதும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குவதும்தான். உங்கள் தடுப்பூசி போடும் நாளுக்கு முன்பு, மன அழுத்தம் மற்றும் மோசமான தூக்கத்தால் ஏற்படும் மோசமான பக்க விளைவுகளை குறைக்க நல்ல தூக்கத்தைப் பெறுங்கள். நன்றாக சாப்பிடுவது தடுப்பூசிக்குப் பெறுவதற்கு முன் மற்றும் பின் வலி நிவாரணிகளை தேடாமல் நீங்கள் சோர்வு மற்றும் உடல்வலியை வெல்வதை உறுதி செய்யும்.

COVID கையை செயல்பாட்டில் வைக்கவும்

COVID கையை செயல்பாட்டில் வைக்கவும்

COVID கை என்பது தடுப்பூசி போடப்பட்ட கையாகும், அதில் ஊசி குத்தப்பட்டு விறைப்புத்தன்மையை உருவாக்குகிறது, இது ஒரு தடுப்பூசி பயனாளிக்கு தனது கையை நகர்த்துவது கடினம். மிகவும் கடுமையான மற்றும் சங்கடமான இந்த பக்க விளைவைச் சமாளிக்க, செய்ய எளிதான தீர்வு என்னவென்றால், ஒரு சில மென்மையான பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளின் உதவியுடன் அந்தக் கையை நகர்த்துவது. இது விரைவாக மீண்டும் செயல்பட உதவும். அதேபோல அந்த இடத்தில் ஏற்படும் அரிப்பை ஐஸ்கட்டிகளின் உதவியுடன் குறைக்கலாம். ஆனால் இந்த இடத்தைச் சுற்றி மசாஜ் செய்யக்கூடாது, ஏனெனில் இது அறிகுறிகளை மோசமாக்கும்.

சூடான நீர் குளியல்

சூடான நீர் குளியல்

தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு நீங்கள் தசை வலி, பலவீனம் மற்றும் உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், சூடான நீரில் குளிப்பது உங்களுக்கு உதவக்கூடும். தடுப்பூசி கையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் போது நோயெதிர்ப்பு எதிர்விளைவு காரணமாக புண் மற்றும் வலி ஏற்படுகிறது. சூடான நீர் வீக்கத்தைத் தணிக்கும் மற்றும் வலியைக் குறைக்கும்.

MOST READ: இந்த அளவிற்கு மேல் உப்பு சாப்பிட்டால் இதயக்கோளாறு வருமாம்... உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி தகவல்!

குமட்டலை சமாளிக்க மசாலா பொருட்கள்

குமட்டலை சமாளிக்க மசாலா பொருட்கள்

பெண்களைப் பொறுத்தவரை தடுப்பூசியின் பக்க விளைவுகளாக காய்ச்சலுடன் குமட்டலை அனுபவிக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால், பெரும்பாலான நேரங்களில், குமட்டலை உங்கள் உணவை மாற்றியமைப்பதன் மூலமோ அல்லது சில இயற்கை மசாலாப் பொருட்களால் திறம்பட கட்டுப்படுத்தலாம். உங்கள் உடலுக்கு நோயைச் சமாளிக்க இஞ்சி, மிளகு, எலுமிச்சை போன்றவை உதவும். மேலும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்கள் குமட்டல், வயிற்றுப் பிடிப்பை மோசமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Manage COVID Vaccine Side Effects Without Painkillers

Read to know how to manage coronavirus side effects without painkillers.
Desktop Bottom Promotion