Just In
- 30 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 5 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 10 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- Movies தனுஷை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. அய்யய்யோ ரஜினி உறவினர் என்ன இப்படி சொல்லிட்டாரு
- News மோடி, அமித் ஷா மேடை மேடையாக பேசியதை! ஒரே பேச்சில் புரட்டி போட்ட ப்ரியங்கா! காங்கிரஸின் மாஸ்டர்பிளான்
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனாவால் இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உடனே டாக்டர பாருங்க!
COVID-19 சுவாச நோய்த்தொற்றாகத் தொடங்கும் போது, அது உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மிகவும் பாதிக்கப்படும் உறுப்புகள் நுரையீரலும், இதயமும்தான்.
COVID-19 சுவாச நோய்த்தொற்றாகத் தொடங்கும் போது, அது உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மிகவும் பாதிக்கப்படும் உறுப்புகள் நுரையீரலும், இதயமும்தான். இரண்டாவது அலையின் போது, நிறைய பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர், COVID க்கு சிகிச்சையளிக்கப்படுகையில், வைரஸைக் கட்டுப்படுத்துவதன் பின் விளைவுகள் முன்னர் கருதப்பட்டதை விட நீண்ட காலம் தொடரலாம் என்று கருதப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் மருத்துவர்களின் கணிப்பின்படி, இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய, ஆரோக்கியமான நபர்களின் எண்ணிக்கையில் நம்பமுடியாத உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
COVID-19 மாரடைப்பை எவ்வாறு ஏற்படுத்துகிறது?
கொரோனாவில் இருந்து மீண்ட சில நோயாளிகள் மூச்சுத் திணறல், மார்பு வலி, பலவீனமாக உணர்தல் போன்ற பிரச்சினைகளை குணமடைந்த பின்னரும் சில வாரங்களுக்கு அனுபவிக்கின்றனர். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஜமா ஆய்வில், 70% க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். மயோர்கார்டிடிஸ் அல்லது இதய அழற்சி என்பது COVID க்கு பின்னால் ஏற்படும் மிகவும் பொதுவான சிக்கல்களில் ஒன்றாகும், இது வைரஸால் ஏற்படும் பிரபலமற்ற சைட்டோகைன் காரணமாக ஏற்படலாம். COVID தீவிரமடையும் போது ஏற்படும் பொதுவான ஆபத்து காரணி ஆக்ஸிஜன் பற்றாக்குறையாகும். ஆரோக்கியமான ஆக்ஸிஜனேற்ற இரத்தத்தில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வீக்கம் மற்றும் இதய தசைகள் பலவீனமடைந்து பிரச்சினைகளைத் தூண்டும்.
வைரஸால் ஏற்படும் இரத்த உறைவு ஆபத்தானது
COVID-ல் குணமடைந்த பிறகு இரத்த உறைதல் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர், அதாவது COVID என்பது நுரையீரலைப் போலவே லிம்பிக் அமைப்பு, இரத்த நாளங்கள் போன்றவற்றுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில், வைரஸ் இரத்தக் கட்டிகளை உருவாக்குவதற்கும், உள் இரத்த நாளங்களின் சேதங்களை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்றும், இது இதயக்கோளாறுகள் இல்லாதவர்களுக்குக் கூட மாரடைப்பு மற்றும் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறைகள் சிக்கல்களை மேலும் மோசமாக்கும். COVID-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் கவலை உடலை அதிக இரத்தத்தை செலுத்துவதற்கும் இதய துடிப்பு மற்றும் அழுத்தத்தை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
மார்பில் கனம்
மார்பு குழிக்குள் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அசௌகரியம், இறுக்கம், அழுத்தம், வலி அல்லது கனத்தை அனுபவிப்பது கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும். பல நோயாளிகள் மார்பில் வலிக்கும் உணர்வை உணர்ந்ததாக விவரிக்கிறார்கள், இது பெரும்பாலும் கைகள், கழுத்து வரை பரவக்கூடும். வயிற்று வலி மற்றும் பதட்டமும் எதிர்பார்க்கப்படலாம்.
MOST READ: தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான மற்றும் அருவருப்பான பாலியல் சட்டங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!
மூச்சுத்திணறல்
உங்களுக்கு எப்போதும் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலும்,பேச முடியாமல் போனாலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தின் போதுமான ஓட்டம் இல்லாதபோது சுவாசப் பிரச்சினைகள், மூச்சுத் திணறல் போன்ற பொதுவான சிக்கல் ஏற்படலாம்.
ஆக்சிஜன் அளவு குறைவது
மருத்துவர்கள் நோயாளிகளை ஆக்சிமீட்டரை வைத்துக்கொள்ள பரிந்துரைக்க பல காரணங்கள் இருக்கலாம். திடீர், ஆக்ஸிஜன் அளவுகளில் தீவிர ஏற்ற இறக்கங்கள் கவலைக்குரிய அடையாளமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியான இருமல், விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் டிஸ்ப்னியாவின் அறிகுறிகள் ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது. COVID க்குப் பின் நல்ல இதய பராமரிப்புக்கான ஆக்ஸிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்க இதுவும் ஒரு காரணம்.
லேசான தலைவலி அல்லது திடீர் தலைச்சுற்றல்
மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி தலைச்சுற்றல் வடிவத்தில் தாக்கக்கூடும். சோர்வு அல்லது எந்த வேலையையும் நின்றோ, உட்கார்ந்தோ செய்ய முடியாமல் போவது, வேலை செய்வதற்கான குறைவான திறனைக் கொண்டிருப்பது போன்ற பிரச்சினைகள் இதய தசைகள் சோர்வடைந்து, உடல் பலவீனமாக செயல்படும்போது ஏற்படலாம்.
MOST READ: இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜயோகத்துடன் பிறந்தவர்களாம்... உங்க நட்சத்திரம் என்ன?
அதிகப்படியான வியர்வை
அதிகப்படியான வியர்வை மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். உடலில் நிறைய இரத்த உறைதல் இருக்கும்போது, அடைபட்ட தமனிகளில் இருந்து இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் அதிக நேரம் எடுக்கும் மற்றும் கூடுதல் சோர்வு காரணமாக ஏற்படும் உடல் வெப்பநிலையை சீராக்க வியர்வை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் இருந்தால் கவனமாக இருங்கள் மற்றும் விரைவில் மருத்துவ உதவியை நாடுங்கள்.