Just In
- 22 min ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 44 min ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 1 hr ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 2 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த நோய் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...!
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் அதிகம் காணப்படுகிறது. இது உங்களை சோர்வாகவும் பலவீனமாகவும் உணரக்கூடும்.
ஒவ்வொரு ஊட்டசத்தும் நம் உடலுக்கு இன்றியமையாதது. எல்லா ஊட்டசத்து அளவுகளும் உடலில் சரியாக இருக்கும்போது, எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே, ஊட்டசத்து குறைபாடுகள் ஏற்பட்டால், அது உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த வகையில் இரும்பு சத்து குறைவாக இருந்தால், உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சனை என்ன தெரியுமா? அது எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி தெரியுமா? ஆம். இது உங்களுக்கு இரத்த சோகையை ஏற்படுத்தும். இரத்த சோகை தானே என்று நீங்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஏனெனில், இது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
இரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையோ அல்லது ஹீமோகுளோபீனின் அளவோ எப்போதும் இருப்பதை விட குறைந்திருக்கும் நிலை இரத்தச் சோகை நோய் அல்லது அனீமியா என்று அழைக்கப்படுகிறது. இரத்த சோகை என்பது ஒரு உடல்நிலை. இதில் நம் உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யாது. இதனால், பல சுகாதார நிலைமைகள் இரத்த சோகைக்கு வழிவகுக்கும், ஆனால் இரும்புச்சத்து குறைபாட்டிலிருந்து, இரத்த சோகை மிகவும் பொதுவானது. இரும்பு சத்து குறைவினால் ஏற்படும் இரத்த சோகை பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இரத்த சோகை
ஆரோக்கியமாக இருக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு உட்கொள்வது முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஊட்டச்சத்துக்களில் ஏதேனும் ஒரு குறைபாடு நம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இரும்பு விஷயத்தில் அதே விஷயம் நடக்கும். உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்குவதற்கு இரும்புசத்துதான் பொறுப்பு. உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல போதுமான சிவப்பு இரத்த அணுக்களை உடல் உற்பத்தி செய்யாதபோது அது இரத்த சோகையாக மாறும்.
யாருக்கு அதிகம் காணப்படுகிறது?
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் அதிகம் காணப்படுகிறது. இது உங்களை சோர்வாகவும் பலவீனமாகவும் உணரக்கூடும். இரத்த சோகை அதன் காரணத்தைப் பொறுத்து லேசான அல்லது கடுமையான, தற்காலிக அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
MOST READ: கொரோனாவால் ஏற்பட போகும் வேலை இழப்புகள்... உங்கள எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி இழுக்கப்போகிறது தெரியுமா?
இரத்த சோகைக்கான காரணங்கள்
- மூன்று முக்கிய காரணங்களால் இரத்த சோகை ஏற்படலாம்.
- இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைதல்
- அதிகப்படியான இரத்தப்போக்கு
- அதிகளவில் இரத்த சிவப்பு அணுக்களை அழிதல்
- மூச்சடைப்பு
- தலைசுற்றல்
- தலைவலி
- கை கால்கள் குளிர்தல்
- தோல் வெளிறுதல்
- நெஞ்சுவலி
இரத்த சோகையின் அறிகுறிகள்
இரத்தச் சோகையின் மிகவும் பொதுவான அறிகுறி உடல் சோர்வும் பலவீனமுமே ஆகும். பின்வருவனையும் இரத்த சோகைக்கான பிற அறிகுறிகள்.
எவ்வளவு ஆபத்தானது?
இரும்புச்சத்து அளவை அதிகரிப்பதன் மூலமோ அல்லது கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ இரும்புச்சத்து குறைபாட்டை எளிதில் சரிசெய்ய முடியும். இருப்பினும், சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
MOST READ: குழந்தைகள் மூலம் பெரியவர்களுக்கு கொரோனா பரவுமா? ஆய்வு என்ன சொல்லுகிறது?
ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பற்றாக்குறை இருப்பதால், உங்கள் இதயம் அதிக இரத்தத்தை செலுத்த வேண்டும். இது ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் தீவிர நிகழ்வுகளில், ஒரு நபர் இதய செயலிழப்பு அல்லது விரிவாக்கப்பட்ட இதய நோயால் பாதிக்கப்படலாம். இது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
கர்ப்ப சிக்கல்கள்
இரத்தச் சோகையுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகாலத்திற்கு முன்னும் பின்னும் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பேறுகாலத்திற்குப் பின்னான மனவழுத்தம் ஏற்படவும் கூடும். மேலும், கர்ப்பிணிப் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு ஒரு குழந்தையின் முன்கூட்டிய பிறப்பு அல்லது குறைந்த எடையுடன் பிறக்க வழிவகுக்கும்.
வளர்ச்சி பாதிப்பு
இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியை தாமதப்படுத்தியிருக்கலாம் மற்றும் தொற்றுநோய்க்கு அதிக வாய்ப்புள்ளது.
MOST READ: எப்பவும் சாப்பிட்டுகிட்டே இருக்கீங்களா? இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்கு...உஷாரா இருங்க..!
உடல் சோர்வு
இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை ஒருவரை சோர்வாகவும் சோம்பலாகவும் (ஊக்கமின்மை) மாற்றி விடும். இதன் விளைவாக வேலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் செயலாற்றல் குறைந்தவராக மாறிவிடுவார்.
நோய்த்தடுப்பு அமைப்பு
இரத்த சோகை நோய்த்தடுப்பு மண்டலத்தைத் தாக்கலாம் (உடலின் இயற்கையான நோய்த்தடுப்பு அமைப்பு). இது ஒருவரை நோய்க்கும், தொற்றுநோய்க்கும் எளிதில் பலியாகுமாறு பலவீனமாக்கிவிடும்.
இரும்பு ஆதாரங்கள்
இரும்பு சத்து நிறைந்த உணவு உட்கொள்ளலை அதிகரிக்க இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இறைச்சி, பீன்ஸ், பூசணிக்காய், ஸ்குவாஷ் விதைகள், பச்சை இலை காய்கறிகள், திராட்சை, உலர்ந்த பழம் மற்றும் முட்டை ஆகியவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.