Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 4 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஏலக்காய் நீரை தினமும் குடிப்பதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது.
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றத்துடன் இருப்பது மட்டுமின்றி, பல ஆரோக்கிய பிரச்சனைகளையும் சமாளிக்க உதவுகிறது. குறிப்பாக இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இப்படிப்பட்ட தண்ணீருடன் ஒருசில பொருட்களை சேர்த்துக் குடித்தால், அதனால் கிடைக்கும் பலன்களோ ஏராளம்.
அதுவும் அந்நீரில் ஏலக்காயை பயன்படுத்தினால், அது குடிக்கும் நீரின் பலனை இரட்டிப்பாக்கும். ஏலக்காய் பொதுவாக உணவின் சுவைக்காகவும், மணத்திற்காகவும் பயன்படுத்தும் ஓர் மசாலாப் பொருள். அதோடு இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உள்ளன. எனவே இந்த ஏலக்காயை நீரில் ஊற வைத்துக் குடிப்பது என்பது மிகவும் நல்லது. இப்போது ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது மற்றும் அந்நீர் எவ்வளவு நன்மைகளை வழங்குகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
ஏலக்காய் மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பொருள். இதில் ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், அத்தியாவசிய எண்ணெய்கள், டயட்டரி நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளன. இச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏலக்காய் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை எரிப்பதைத் தவிர, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டது. இப்போது அந்த நன்மைகளைக் காண்போம்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
ஏலக்காய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து போன்ற பண்புகள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு ஏற்ப வேலை செய்கிறது. இதில் உள்ள டயட்டரி நார்ச்சத்து கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும், இரத்த உறைவு உருவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
ஏலக்காயில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள அதிகப்படியான மாங்கனீசு, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாது என்று நினைத்தால், ஏலக்காய் நீரைக் குடியுங்கள்.
சளி மற்றும் இருமலை சரிசெய்யும்
ஏலக்காயில் ஆன்டிடூசிவ் மற்றும் மியூகோலிடிக் பண்புகள் உள்ளன. இது சளி உருவாகி சேர்வதைத் தடுக்க உதவுகிறது மற்றும் சளி மற்றும் இருமலை நீக்குகிறது. மேலும் இது நுரையீரலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
செரிமான பிரச்சனைகளை நீக்கும்
அறிக்கையின் படி, ஏலக்காயில் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் கூறுகள் உள்ளன. ஏலக்காயை தினமும் உட்கொள்வது செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க உதவுகிறது. மேலும் இது பல் சொத்தையாவதைத் தடுக்க உதவுகிறது.
ஏலக்காய் நீரை எப்படி தயாரிப்பது?
முதலில் 5 ஏலக்காயை எடுத்து உரித்து, இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை வேகமாக குறையும். ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு லிட்டர் வரை ஏலக்காய் நீரைக் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- ஏலக்காய் நீர் சருமத்திற்கு நல்லதா?
ஏலக்காயில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், இது சருமத்தில் ஏற்படும் வெடிப்புக்களை குணப்படுத்தும் மற்றும் இது சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை சுத்தப்படுத்தி தெளிவான மற்றும் சீரான நிறத்தை கொடுக்க உதவும். மேலும் இது மென்மையான சருமத்தைப் பெறவும் உதவுகிறது.
- ஏலக்காய் விந்து எண்ணிக்கையை குறைக்குமா?
நிறைய ஆய்வுகளின் படி, அதிகப்படியான ஏலக்காயை உட்கொள்வது ஆண்மைக் குறைவு பிரச்சனையை ஏற்படுத்துவதைக் காட்டுகிறது. மேலும் ஏலக்காயை சாப்பிடுவதால் பாலுணர்வு குறைவதாக பலர் புகாரளிக்கின்றனர்.
- ஒரு நாளைக்கு எவ்வளவு ஏலக்காய் சாப்பிடலாம்?
புத்துணர்ச்சியான சுவாசம் மற்றும் நல்ல செரிமானத்திற்கு ஒருவர் ஒரு நாளைக்கு 2-3 பச்சை ஏலக்காயை சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால் 250 மிகி எடுக்கலாம்.
- யாரெல்லாம் ஏலக்காய் சாப்பிடக்கூடாது?
பித்தப்பை கல் உள்ள நோயாளிகள் ஏலக்காயை கட்டாயம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஏலக்காயை சற்று அதிகம் சாப்பிட்டாலும், அது பித்தப்பை வலியை பெரிதும் அதிகரிக்கும். மேலும் பித்தப்பை நோயாளிகள் ஏலக்காய் சாப்பிடுவது தொற்றுகள் மற்றும் இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
- ஏலக்காயின் பக்கவிளைவுகள் என்ன?
ஏலக்காயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது கல்லீரல் பிரச்சனைகள், பசியின்மை, அறுவை சிகிச்சைக்குப் பின் குமட்டல் மற்றும் வாந்தி, வாய்ப்புண் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.