For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களோட இந்த சாதாரண பழக்கம்தான் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கிறதாம்…உஷார இருங்க…!

ஒரு புற்றுநோய் கட்டி மிகவும் வீரியம் மிக்கது, அதாவது இது வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது.

|

சில மோசமான பழக்க வழக்கங்களால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. கொடுமையான நோய்களில் புற்றுநோயும் ஒன்று. மரபணு மாற்றங்கள் உங்கள் உடலில் உள்ள உயிரணுப் பிரிவின் ஒழுங்கான செயல்முறையில் குறுக்கிட்டு, செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து, கட்டி எனப்படும் புற்றுநோயை உருவாக்குகிறது. ஒரு புற்றுநோய் கட்டி மிகவும் வீரியம் மிக்கது, அதாவது இது வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியம் மிக்கது.

Habits that can cause cancer

புகைபிடிப்பதைத் தவிர புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில ஆபத்தான பழக்கங்கள் எனென்ன என்று உங்களுக்கு தெரியுமா? சில மோசமான பழக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், எனென்ன மோசமான பழக்கவழக்கங்கள் உங்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறப்புக்கு முக்கிய காரணம்

இறப்புக்கு முக்கிய காரணம்

புற்றுநோய் நோயறிதலுக்கு அப்பால் வாழும் மக்களின் எண்ணிக்கை 2014 இல் கிட்டத்தட்ட 14.5 மில்லியனை எட்டியது, மேலும் இது 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புற்றுநோயானது உலகளவில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணமாகும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் 8.8 மில்லியன் இறப்புகளுக்கு காரணமாக இருந்தது. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு சில பழக்கவழக்கம் மற்றும் உணவு அபாயங்களால் ஏற்படுகிறது. இதில் அதிக உடல் நிறை குறியீட்டு எண், குறைந்த பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளல், உடல் செயல்பாடு இல்லாதது, புகையிலை மற்றும் அதிகப்படியான ஆல்கஹால் ஆகியவை அடங்கும்.

MOST READ: புகைப்பிடிப்பது பற்றிய கட்டுக்கதைகளும் அதனை பற்றிய உண்மைகளும் உங்களுக்கு தெரியுமா?

அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பது

அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பது

ஆல்கஹால் உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் பல ஆய்வுகள் ஒரு நாளைக்கு இரண்டு முறை மது அருந்துவதால் உணவுக்குழாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. வயிற்று அமிலங்களின் உற்பத்தியை ஆல்கஹால் ஊக்குவிக்கிறது, இது இரைப்பைக் குழாயின் புறணிக்கு தீங்கு விளைவிக்கும்.

ஏர் ஃப்ரெஷனர்களைப் பயன்படுத்துதல்

ஏர் ஃப்ரெஷனர்களைப் பயன்படுத்துதல்

இன்றைய காலகட்டத்தில் ஏர் ஃப்ரெஷனர்கள் அத்தியாவசிய வீட்டு பராமரிப்பு தயாரிப்புகளாக மாறியுள்ளன. இந்த ஏர் ஃப்ரெஷனர்கள் எந்த வகையிலும் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில்லை, அவை துர்நாற்றத்தை மறைக்கின்றன. இது உங்களுக்கு தவறான சுகாதார உணர்வைத் தருகிறது. அவை தீங்கு விளைவிக்கும் புற்றுநோயை உண்டாக்கும் பொருள்களைக் கொண்டுள்ளன. அவை உங்களைச் சுற்றி தெளிக்கும்போது மூக்கின் வழியாக நுழையும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

கார் புகை வெளிப்பாடு

கார் புகை வெளிப்பாடு

டீசல் எரிபொருட்களில் இருந்து (டிரைவர்கள், மெக்கானிக்ஸ் போன்றவை) தொடர்ந்து வெளிப்படும் புகையை நுகரும் நபர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற சுவாச நோய்கள் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் (பெட்ரோல்) பென்சீன் உள்ளிட்ட நச்சு கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன்களை வெளியிடுகின்றன.

MOST READ: இந்த பழங்கள் புற்றுநோய் மற்றும் இதய பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்குமாம்...!

எரிந்த உணவை உண்ணுதல்

எரிந்த உணவை உண்ணுதல்

மீன், கோழி, இறைச்சி போன்ற உணவுப் பொருட்களை நீங்கள் வறுக்கும்போது, அவை சற்று எரிந்து, சில பகுதிகள் கருகிவிடும். இதிலுள்ள ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (பிஏஎச்) என அழைக்கப்படும் சேர்மங்கள் வயிறு, பெருங்குடல் மற்றும் கணைய புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

பாக்கெட் உணவுகளை உண்ணுதல்

பாக்கெட் உணவுகளை உண்ணுதல்

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் ஆரோக்கியமற்றவை மற்றும் ஆபத்தானவை. ஏனென்றால் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் நிறைந்த பிளாஸ்டிக் பூச்சுடன் கூடிய உலோகக் கொள்கலன்களில் உணவுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை உண்பதால் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் டி.என்.ஏ மாற்றங்களுக்கு வழிவகுக்கும். அவை மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

சோடா குடிப்பது

சோடா குடிப்பது

பொதுவான சோடா பிராண்டுகளில் பல 4-மெத்திலிமிடசோல் (4-எம்ஐ), அறியப்பட்ட புற்றுநோயாகும் என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. டயட் சோடாவில் செயற்கை இனிப்புகள் உள்ளன. அவை கணைய புற்றுநோய் மற்றும் பிற வகை புற்றுநோய்களை அதிகரிக்கின்றன. பல ஆய்வுகள் டயட் சோடா சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டிகளுக்கும் வழிவகுக்கிறது.

MOST READ: காலில் வரக்கூடிய இந்த மோசமான நோயை தடுக்க இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்...!

சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்

சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல்

தோல் புற்றுநோய் மற்றும் பிற தோல் பாதிப்புகளைத் தடுக்க, பெரும்பாலான மக்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சன்ஸ்கிரீன்களில் துத்தநாக ஆக்ஸைடு எனப்படும் ஒரு மூலப்பொருள் இருப்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இது டி.என்.ஏ சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைத் தூண்டும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது.

வாசனை பயன்படுத்துதல்

வாசனை பயன்படுத்துதல்

மெழுகுவர்த்திகள் பாரஃபின் மெழுகிலிருந்து வெளியாகும் தீப்பொறிகளில் புற்றுநோய்கள் உருவாகும் பிற புதைபடிவ எரிபொருள் கூறுகள் உள்ளன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வழக்கமாக பாரஃபின் மெழுகுவர்த்தி ஏற்றிய இரவு உணவிற்குச் சென்றால் அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, தூய தேன் மெழுகுவர்த்தியை எரிக்கவும், ஏனெனில் இது உங்கள் உடலை சேதப்படுத்தாது. தூபத்தை எரிப்பது புற்றுநோய் அபாயத்தையும் தூண்டும்.

வாய்வழி உடலுறவில் ஈடுபடுவது

வாய்வழி உடலுறவில் ஈடுபடுவது

ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வாய்வழி முதல் பிறப்புறுப்பு தொடர்பு வரை பெறப்பட்ட HPV நோய்த்தொற்றினால் ஓரோபார்னீஜியல் புற்றுநோய்களின் உயர்வு விகிதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வாய்வழி செக்ஸ் கூட்டாளர்களைக் கொண்டிருப்பது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

MOST READ: செக்ஸ் ஏன் ஒரு உறவில் அவசியமானதாகிறது? அது உங்க வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா?

இரவு நேர வேலை

இரவு நேர வேலை

இரவு நேர வேலையும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இரவு நேரத்தில் வேலை செய்வது ஒரு நபரின் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது பெரும்பாலும் மெலடோனின் ஒடுக்கம் காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்க்கை

ஆரோக்கியமான வாழ்க்கை

ஒரு கிளாஸ் கோக்கை பருகுவது அல்லது எரிந்த உணவை ஒரு சிறிய துண்டு சாப்பிடுவது உங்களில் புற்றுநோயின் அபாயத்தைத் தூண்டாது. ஆனால், இந்த பழக்கங்களை நீங்கள் வழக்கமாக கொண்டு வரும்போது, அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆதலால், உடலுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளையும், சில விஷயங்களையும் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை மூலம் புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Habits that can cause cancer

Here we are talking about the dangerous habits that can cause cancer.
Story first published: Friday, March 13, 2020, 17:04 [IST]
Desktop Bottom Promotion