Just In
- 43 min ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 1 hr ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 3 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
Don't Miss
- News அண்ணாமலையா? தமிழகத்தில் இந்த பாஜக வேட்பாளர் வென்றால் ரொம்ப மகிழ்ச்சி.. சு.சாமி வைத்த ட்விஸ்ட்
- Movies கில்லி ரீ ரிலீஸ்.. ஆல் ஏரியாலயும் மாஸ்.. முதல் நாளில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா?
- Sports எல்லை மீறிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்.. பிசிசிஐ தண்டனை அறிவிப்பு.. இனி ஏமாற்று வேலை செய்ய முடியாது
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க நிபுணர்கள் பரிந்துரைக்கும் 'இந்த' பொருளை டீ-யில் சேர்த்துக்கோங்க!
அதிமதுரம் அல்லது முலேதி சுவாசக் குழாயை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் அறியப்படுகிறது. இது இருமல், சளி மற்றும் மார்பு நெரிசலை எதிர்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கு பின்னர் இயங்குவதை விட இயற்கையாகவே நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை தொற்றுநோய் நமக்குக் கற்பித்துள்ளது. தடுப்பு முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு மக்கள் இப்போது தங்கள் ஆரோக்கியமான உணவு முறைக்கு திரும்பி வருகிறார்கள்.
மேலும் இயற்கையான பொருட்களை உணவில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். உண்மையில், இந்த நோய்த்தொற்று சூழ்நிலையில் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) ஆகியவற்றின் தினசரி பணக்கார மூலிகை நிரம்பிய பானங்களை அருந்த நிபுணர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கப் தேநீரோடு ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கிய பூர்வீக மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அதிமதுரம்
அதிமதுரம் அல்லது முலேதி சுவாசக் குழாயை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் அறியப்படுகிறது. இது இருமல், சளி மற்றும் மார்பு நெரிசலை எதிர்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நுண்ணுயிரிகள், மாசுபடுத்திகள் மற்றும் ஒவ்வாமை பொருட்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. முலேதியில் மலச்சிக்கலை போக்க மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவும் செயலில் சேர்மங்கள் உள்ளன. நல்ல குடல் ஆரோக்கியம் ஒரு வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை அமைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
MOST READ: கொரோனாவிலிருந்து உங்கள விரைவாக மீட்க 'இந்த' பொருள் போதுமாம்... அது என்ன தெரியுமா?
பிராமி
இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆயுர்வேத மூலப்பொருளில் ஒன்றாகும். இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களைத் தடுக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டு உடலை வளர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதனால், பிராமியின் வழக்கமான நுகர்வு ஒரு வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
துளசி
துளசியில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது என்று நாம் அனைவருக்கும் தெரியும். இதில், வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது நோய்த்தொற்று இல்லாததாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இதில் பைட்டோ கெமிக்கல்கள், பயோஃப்ளவனாய்டுகள் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலவைகள் உள்ளன. இது சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பு முகவர்.
MOST READ: உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க 'இத' செஞ்சா போதுமாம்..!
இஞ்சி
இஞ்சியில் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் ஊட்டச்சத்து பண்புகள் காரணமாக, ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக மருத்துவ நோக்கங்களுக்காக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது. இந்த நன்மைகள் இஞ்சியை ஒரு சரியான நோயெதிர்ப்பு ஊக்கியாக மாற்றுகிறது.
ஏலாக்காய்
ஏலக்காய் இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய மசாலா ஆகும். மேலும் இது உலகின் மிக விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இந்த சுவை மாங்கனீசை கொண்டிருக்கிறது, இது உடலில் வைரஸ்-சண்டை செல்களை அதிகரிக்க உதவும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை, இது செரிமான பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது.