Just In
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 5 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 10 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
தொடர்ந்து பிளாப் படங்கள்.. கீர்த்திக்கு கைக் கொடுக்காத சொந்தப் படம்.. எப்பதாங்க ஹிட் கொடுப்பீங்க?
- News
காலேஜ்ல டான் பட ஹீரோ மாதிரி நான்! எங்கப்பா படிக்க வேண்டாம்ணு சொல்லிட்டார்! கே.என்.நேரு கலகல!
- Finance
ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நீங்க தினமும் சாப்பிடுற இந்த நான்கு உணவுகளால் உங்களுக்கு புற்றுநோய் வர ஆபத்து அதிகமாம்...!
ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்ப்பதும் முக்கியம். ஏனெனில், நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. உங்கள் தட்டில் ஆரோக்கியமான காய்கறிகளை நிரப்புவதைப் போலவே, எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிவது முக்கியம். உண்மையில், சில உணவுகளைத் தவிர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும். எவருக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாக்கலாம் என்றாலும், அந்த ஆபத்தில் அதிகம் உள்ளவர்கள் தங்கள் உணவின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
புற்றுநோய் அபாயத்தைத் தீர்மானிப்பதில் உணவுப் பழக்கம் என்பது சர்ச்சைக்குரியது. ஆராய்ச்சியின் படி, சில உணவுப் பொருட்கள் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. புற்றுநோயின் அபாயத்துடன் தொடர்புடைய தினசரி பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள்
இது உணவு உற்பத்தியாளர்களால் உணவுகளை நீண்ட காலத்திற்கு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள் புரோஸ்டேட் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த எண்ணெய்களில் படிந்திருக்கும் டிரான்ஸ் கொழுப்புகளே இதற்குக் காரணம். டிரான்ஸ் கொழுப்புகள் மிக மோசமான கொழுப்பு வகைகளில் ஒன்றாகும். அவை புற்றுநோய், இதய நோய் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு பிரச்சினைகளுக்கு பங்களிப்பதாக அறியப்படுகிறது.

உடல் பருமன் அதிகரிக்கும்
உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் காய்கறி மற்றும் விதை எண்ணெய்களை மிதமாக சாப்பிடுவது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும், கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களில் அதிக கலோரிகள் உள்ளன. மேலும் அவை கேக், பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகின்றன. அதிக கலோரி கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு பங்களிக்கும். குறைந்தபட்சம் 12 வெவ்வேறு புற்றுநோய்களின் அபாயம் உள்ளது என்று சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

உப்பு உணவுகள்
இரைப்பை புற்றுநோயை வளர்ப்பதற்கு உப்பு அதிகம் உள்ள உணவுகள் குறிப்பிடத்தக்க காரணியாக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உப்பு வயிற்றின் புறணியை சேதப்படுத்தும் மற்றும் சேதமடைந்த உடல் திசுக்களின் பகுதிகளான புண்களை ஏற்படுத்தும். வளர விட்டுவிட்டால், இந்த எதிர்வினை வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். மேலும், இது உடல்நல அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உயர் இரத்த அழுத்தம்
உணவில் அதிக உப்பு சேர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் சமைக்கும் உணவில் அதிக உப்பைச் சேர்க்காவிட்டாலும், நீங்கள் உட்கொள்ளும் உப்பின் பெரும்பகுதி பீட்சா, பைகள், சாஸ்கள், ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்கள் போன்ற பேக் செய்யப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லும் உணவுகளில் இருந்தும் உங்களுக்கு வருகிறது. ஒரு உணவில் இன்னும் உப்பு அதிகமாக இருக்கும் மற்றும் உப்பு சுவை இருக்காது என்பதை நீங்கள் கவனிப்பது அவசியம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்பது கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் சோளம் போன்ற உணவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இயற்கை சர்க்கரையின் பதப்படுத்தப்பட்ட வடிவமாகும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையின் பதப்படுத்தப்பட்ட தன்மை புற்றுநோய் செல்களை உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஒரு நபருக்கு உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

ஆராய்ச்சி கூறுவது
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது மற்ற வகை சர்க்கரை புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று யுகே புற்றுநோய் ஆராய்ச்சி கூறுகிறது. ஆயினும்கூட, நம்முடைய உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியமான எடையை வைத்திருப்பதை கடினமாக்குகிறது மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது பல உடல்நல அபாயங்களோடு தொடர்புடையது.

பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு
மற்றொரு கவலைக்குரிய மூலப்பொருள் பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு, இது பேஸ்ட்ரிகள், ரொட்டிகள் மற்றும் பிற அன்றாட மளிகைப் பொருட்களில் காணப்படுகிறது. மாவை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமான குளோரின் வாயுவைக் கொண்டு மாவு வெளுக்கப்படுகிறது.

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்
பதப்படுத்தப்பட்ட வெள்ளை மாவு அதன் அதிக கிளைசெமிக் வீதத்தின் காரணமாக இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ஒரு நபரின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், புற்றுநோய் கட்டிகள் உடலில் வளர்வது எளிது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது இன்சுலின் எதிர்ப்பிற்கு வழிவகுக்கிறது. இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் சிறுநீரக புற்றுநோய் போன்ற பிற புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.