Just In
- 46 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 3 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நெய்யை இந்த 5 உணவுகளுடன் சாப்பிட்டால் மாரடைப்பு, சர்க்கரை நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வராதாம்..!
நெய் பல நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால் இந்த நெய்யை ஒருசில பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அதனால் இருமடங்கு நன்மைகள் கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் நெய். இந்த நெய்யை தினந்தோறும் சாப்பிடும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இத்தகைய நெய்யை தோசை, ரொட்டி, கிச்சடி, பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். நெய்யானது சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, சில உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யவும் பயன்படுகிறது.
நெய் பல நன்மைகளை உள்ளடக்கியது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்களால் இதயத்திற்கு நல்லது. ஆனால் இந்த நெய்யை ஒருசில பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அதனால் இருமடங்கு நன்மைகள் கிடைக்கும்.
மஞ்சள்
நெய்யைப் போலவே மஞ்சளும் ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் பயன்படுத்தப்படும் பொருளாகும். மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு இயற்கையான பைட்டோ கெமிக்கல். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குர்குமின் மூட்டு வலிக்கு எதிரான விளைவுகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட மஞ்சளை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது, உடல் வலி குறைகிறது மற்றும் உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.
துளசி
துளசி இலைகளில் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது தவிர கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆய்வுகளின் படி, துளசி இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் லிப்பிட்டுகளின் அளவை இயல்பாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்சியோலிடிக் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இத்தகைய துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது நெய் சேர்த்து கலந்து, அந்நீரைக் குடிப்பது இன்னமும் நல்லது.
பட்டை
பட்டை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை போக்க வல்ல சக்தி வாய்ந்த மசாலா பொருளாகும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியல் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. ஆய்வுகளிலும் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டையை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நெய் சேர்த்து கலந்து இறக்கி, குளிர வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். இதனால் இருமடங்கு பலன் கிடைக்கும்.
பூண்டு
பூண்டு மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். இந்த பூண்டை நெய்யில் வறுத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் நல்ல சுவையாக இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தும், இதய ஆரோக்கியம் மேம்படும், சருமம் சுத்தமாகும், நல்ல லிப்பிட்டுகளின் அளவு மேம்படும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும்.
கற்பூரம்
கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து கிடைப்பது தான் கற்பூரம். இது செரிமானத்திற்கு நல்லது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு உதவுகிறது. அதுவும் கற்பூர எண்ணெய் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கற்பூரத்தை 2 துண்டு எடுத்து நெய்யுடன் சேர்த்து 5 நிமிடம் சூடேற்றி, அதை குளிர வைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வலியுள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் வலியில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.