Just In
- 34 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குறட்டை விடாம தூங்கணுமா? அப்ப நைட் தூங்குறதுக்கு முன்னாடி இத குடிங்க...
நாம் சுவாசிக்கும் போது காற்றானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது அந்த பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது வரும் சப்தம் தான் குறட்டை.
குறட்டை ஒரு பொதுவான பிரச்சனை. சிலர் படுத்ததுமே குறட்டை விட்டு நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். குறட்டை விடுபவர்களுக்கு அந்த சப்தத்தால் ஏற்படும் தொந்தரவு தெரியாது, அவர்கள் அருகில் தூங்குபவர்களுக்கு தான் தெரியும். சரி, குறட்டை எதனால் வருகிறது என்று தெரியுமா?
நாம் சுவாசிக்கும் போது காற்றானது மூக்கு, வாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது அந்த பாதையில் ஏதேனும் தடை ஏற்படும் போது வரும் சப்தம் தான் குறட்டை. பொதுவாக தூங்கும் போது தொண்டை சதைகள் தளர்ந்து ஓய்வெடுக்கும். அந்நேரம் மூச்சுப் பாதையின் அளவு குறுகி இருக்கும். இந்த குறுகலான பாதையில் சுவாசிக்கும் காற்று செல்லும் போது சப்தம் வரும்.
MOST READ: கொரோனாவின் வேறு புதிய 3 அபாய அறிகுறிகள்!
குறட்டை வருவதற்கான காரணங்கள் என்ன?
ஒருவருக்கு குறட்டை பல காரணங்களால் வரலாம். அதில் சளியுடனான மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, தொண்டை சதை வளர்ச்சி, மூக்கு சுவர் வளைந்து இருப்பது, உடல் பருமன், தைராய்டு பிரச்சனை போன்றவை அடங்கும். அதோடு புகைப்பழக்கம் மற்றும் மது பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டை வரக்கூடும்.
குறட்டையைத் தடுப்பது எப்படி?
குறட்டை பிரச்சனையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் சளியை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்ப்பதுடன், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். மேலும் ஒருசில பானங்களும் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். கீழே குறட்டை பிரச்சனையைத் தடுக்க உதவும் ஒரு அற்புதமான பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* ஆப்பிள் - 2
* கேரட் - 2
* எலுமிச்சை - 1/2
* இஞ்சி - 1 துண்டு
செய்முறை:
* முதலில் ஆப்பிள், கேரட், இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்து, ஒரு டம்ளரில் ஊற்றி, அதில் எலுமிச்சையைப் பிழிய வேண்டும்.
* இந்த பானத்தை தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் குடிக்க வேண்டும்.
குறட்டையைத் தடுக்க இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்:
* பால் பொருட்கள்
* சாக்லேட்
* வறுத்த உணவுகள்
* பதப்படுத்தப்பட்ட உணவுகள்
* மாவு மற்றும் சர்க்கரை பொருட்கள்
* அதிகப்படியான ஆல்கஹால்
குறட்டையைத் தடுக்க வேறு என்ன செய்யலாம்?
* சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்தி தூங்க வேண்டும்.
* மல்லாக்க படுத்து தலையை நேராக வைத்து தூங்க வேண்டாம். வேண்டுமெனில் தலையை ஒரு பக்கமாக சாய்த்து தூங்கலாம்.
* முக்கியமாக இரவு தூங்கும் முன் வயிறு நிறைய உணவை உட்கொள்ளக்கூடாது.
* தைராய்டு பிரச்சனையை சோதித்து பார்க்கவும். ஒருவேளை தைராய்டு இருந்தால், அதற்கான மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
* உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
* முக்கியமாக கெட்ட பழக்கங்களான சிகரெட் மற்றும் ஆல்கஹால் பழக்கத்தைக் கைவிடுங்கள்.