Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து!
சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் பெற பலரும் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் விக்ஸ் வேப்பரப். ஆனால் விக்ஸ் போன்ற ஒரு மருந்தை வீட்டிலேயே ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கலாம்.
தற்போது பனிப் பொழிவு அதிகம் உள்ளதால், பலருக்கும் எளிதில் சளி, இருமல் போன்றவை பாடாய் படுத்துகிறது. ஒருவருக்கு சளி, இருமல் போன்ற பிரச்சனை எளிதில் தொற்றுகிறது என்றால், அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் பெற பலரும் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் விக்ஸ் வேப்பரப். கடைகளில் விற்கப்படும் இந்த பொருள் ஆரோக்கியமற்றது என்பதால் மருத்துவர்கள் அதிகம் இதைப் பரிந்துரைப்பதில்லை.
ஆனால் மூக்கடைப்பு மற்றும் சளிக்கு நிவாரணம் அளிக்கும் விக்ஸ் போன்ற ஒரு மருந்தை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களைக் கொண்டு நாம் எளிதில் தயாரிக்கலாம். உங்களுக்கு அதை எப்படி தயாரிப்பது, எந்த பொருட்களைப் பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
ஏன் விக்ஸைப் பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை?
கடைகளில் விற்கப்படும் பொரும்பாலான வேப்பரப்புகளில் பெட்ரோலியம், கற்பூரம் மற்றும் சில சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. எனவே தான் இந்த பொருட்களைப் பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை. முக்கியமாக குழந்தைகளுக்கு இம்மாதிரியான பொருட்களை அறவே பயன்படுத்தக்கூடாது.
இப்போது இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சளிக்கு நிவாரணம் அளிக்கும் வேப்பரப்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம். இந்த வேப்பரப் நெஞ்சு மற்றும் மூக்கில் உள்ள சளியை வெளியேற்றி, உடனடி நிவாரணம் அளிக்கும்.
அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள்
அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் உடல் ஆரோக்கியத்திற்கான ஒரு வரப்பிரசாதம். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவி புரியும். நறுமண எண்ணெய்கள் சரும பராமரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, சளி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. இப்போது இயற்கையான வேப்பரப்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* லாவெண்டர் எண்ணெய் - 10-15 துளிகள்
* யூகலிப்டஸ் எண்ணெய் - 10-15 துளிகள்
* டீ-ட்ரீ ஆயில் - 2-3 துளிகள்
* புதினா எண்ணெய் - 5-10 துளிகள்
* எலுமிச்சை எண்ணெய் - 10-12 துணிகள்
தயாரிக்கும் முறை:
* ஒரு சிறிய பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நறுமண எண்ணெய்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு இந்த கலவையை காற்றுப்புகாத ஜாடி அல்லது சிறிய பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த பாட்டிலை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். உங்களுக்கு உடனடியாக பயன்படுத்த வேண்டுமானால், அதை ஃப்ரிட்ஜில் வைத்திடுங்கள்.
* இந்த வேப்பரப்பை சூரிய ஒளி படாமல் வைத்தால், குறைந்தது 6 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு
* இந்த கலவையை குழந்தைகளிடம் இருந்து தொலைவில் வைத்திடுங்கள்.
* உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால், முதலில் சருமத்தின் சிறு பகுதியில் தடவிப் பார்த்து, எவ்வித பாதிப்பும் இல்லாவிட்டால் பின் பயன்படுத்துங்கள்.
நன்மைகள்:
வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வேப்பரப்பைப் பயன்படுத்துவதால் பெறும் நன்மைகளாவன:
* உடனடி நிவாரணம் எவ்வித பக்கவிளைவுமின்றி கிடைக்கும்
* சுவாச பிரச்சனைகள் சரியாகும்.
* மாசுபடுத்திகள் மற்றும் ஒவ்வாமைகளை விலக்கி வைக்கும்.
* அமைதியான இரவு தூக்கத்தை பெற உதவும்.
* வலி மற்றும் வீக்கத்தை எளிதாக்கும்.
* குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது.