Just In
- 1 min ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 54 min ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...!
இரத்த விநியோகத்தில் எதிர்பாராத மற்றும் திடீர் குறுக்கீடு இருக்கும்போது பக்கவாதம் உருவாகிறது. இதய பிரச்சினைகள், கொழுப்பு காரணமாக அடைபட்ட தமனிகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவாக இ
நாடு முழுவதும் தன்னுடை கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் இதுவரை 37 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் மிகப் பெரிய எண்ணிக்கையை எட்டியுள்ள நிலையில், விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொற்று, கடுமையான நோய் மற்றும் இறப்பு வீதத்தில் யார் அதிக ஆபத்தில் உள்ளன என்பதை ஆராய்ந்து வருகின்றன. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவது பெரியவர்களும், குழந்தைகளும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.
இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் அதிக ஆபத்தில் இல்லை என நினைத்து வருகின்றனர். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில், விழிப்புணர்வு இல்லாததால் உலகெங்கிலும் உள்ள இளைஞர்கள் கவனக்குறைவாக நடவடிக்கை எடுத்தனர். அங்கு அவர்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் எச்சரிக்கைகளை நிராகரித்து பொது செயல்பாடுகளில் பங்கேற்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மிக சமீபத்திய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.
இரத்த நாளங்களை பாதிக்கும்
சார்ஸ்-கோவிட் -2 வைரஸ் நுரையீரலைத் தாக்கி கடுமையான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை இரத்த சிவப்பணுக்கள் வழியாக இரத்த ஓட்டத்திற்கு மாற்றும் திறனைக் குறைக்கிறது. நுரையீரல் தவிர, இந்த வைரஸ் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளையையும் தாக்குகிறது. இவை அனைத்திலும், கொரோனா வைரஸால் ஏற்படும் மிகக் கடுமையான சிக்கலானது ஆக்ஸிஜன் பற்றாக்குறை, இரண்டாம் நிலை அழற்சி மற்றும் இரத்த நாளங்களின் உறைதல் ஆகியவை இரத்தக் கட்டிகள் உருவாக வழிவகுக்கிறது, அல்லது சில சந்தர்ப்பங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
MOST
READ:
வீட்டில்
இருந்தபடியே
தேவையற்ற
இடங்களில்
இருக்கும்
முடியை
பாதுகாப்பாக
ஷேவ்
செய்வது
எப்படி
தெரியுமா?
மூளை பாதிப்பை ஏற்படுத்தும்
கொரோனா வைரஸ் குறிப்பாக பெருமூளை தமனி (எம்.சி.ஏ) அல்லது முன்புற பெருமூளை தமனி (ஏ.சி.ஏ) போன்ற பெரிய இரத்த நாளங்களைத் தாக்குகிறது. அவை இயக்கம், சிந்தனை மற்றும் சுவாசத்திற்கு காரணமாகின்றன. வைரஸ் இரத்த உறைவுக்கு காரணமாகி, பெரிய இரத்த நாளங்களைத் தடுக்கும் போது, அது நிரந்தர மூளை பாதிப்புக்கு வழிவகுக்கும்.
பக்கவாதம் ஏற்படுகிறது
ஆரம்பத்தில், பக்கவாதம் ஏற்படுவதில் கொரோனா வைரஸின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டது. ஏனெனில் இது தீவிரமாக நோய்வாய்ப்பட்ட மற்றும் வயதான நோயாளிகளுக்கு மட்டுமே ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சமீபத்திய அறிக்கைகள் வைரஸ் உண்மையில் மூளையுடன் இணைக்கப்பட்ட பெரிய இரத்த நாளங்களை பாதிக்கிறது, இதனால் பக்கவாதம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றன.
பக்கவாதம் என்றால் என்ன?
இரத்த விநியோகத்தில் எதிர்பாராத மற்றும் திடீர் குறுக்கீடு இருக்கும்போது பக்கவாதம் உருவாகிறது. இதய பிரச்சினைகள், கொழுப்பு காரணமாக அடைபட்ட தமனிகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றின் விளைவாக இது உருவாகலாம். பக்கவாதம் தீவிரத்தில் மாறுபடலாம், அங்கு மினி-பக்கவாதம் பெரும்பாலும் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தாது மற்றும் 24 மணி நேரத்திற்குள் அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால், கடுமையானவை மரணத்திற்கு வழிவகுக்கும்.
MOST READ: ஆஸ்துமா இருப்பவர்களும், வரக்கூடாதுனு நினைப்பவர்களும் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம் தெரியுமா?
இது கோவிட்-19 உடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் மிகப் பெரிய வகை பக்கவாதத்தை அனுபவித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸ் மூளையின் செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது.
மரணத்திற்கு முக்கிய காரணம்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த உறைவுகளின் நேரடி விளைவாக பக்கவாதம் உருவாகலாம். இது ஒரு முறை மூளையில் வளர்ந்தால் நுரையீரலுக்கு இடம்பெயரக்கூடும். இதனால் நுரையீரல் தக்கையடைப்பு எனப்படும் அடைப்பு ஏற்படுகிறது. இது கோவிட்-19 நோயாளிகளின் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
இரத்த உறைவு
மார்பு பகுதிக்கு மேலே ஒரு இரத்த உறைவு ஏற்படும்போது, அது பக்கவாதமாக ஏற்படலாம். இது சைட்டோகைன் புயல் எனப்படும் நோயெதிர்ப்பு மிகைப்படுத்தலின் விளைவாக இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சார்ஸ்-கோவட் -2 இன் தனித்துவமான வடிவம் காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இது இரத்த நாளங்களில் அடைக்கப்படுவதற்கும் அவற்றை சேதப்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது.
MOST READ: கோடைகாலத்தில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நோய்களில் இருந்து எப்படி ஈஸியா தப்பிக்கலாம் தெரியுமா?
ஆய்வு கூறுவது
சிறு அறிகுறிகளுடன் இளம் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பக்கவாதம் பற்றிய ஆரம்ப அறிக்கைகள் சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்தவை. அங்கு கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் 5 சதவீதம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதில், இளைய நோயாளிகள் 55 பேர் இருந்தனர்.
மற்றோரு ஆய்வு
வைரஸ் பாதிப்புக்குள்ளான உடலின் பல பாகங்கள் இருக்கும்போது, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் குறித்து ஒரு பெரிய அளவிலான கவனம் இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர். கோவிட்-19 நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் இரத்த உறைவு காரணமாக சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
MOST READ: இந்த நோய் உங்களுக்கு வராம தடுக்கணுமா? அப்ப இந்த மூலிகை மற்றும் மசலா பொருட்களை சாப்பிடுங்க...!
கோவிட் 19 மற்றும் பக்கவாதம்
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட பக்கவாத நோய் 50 வயதிற்குட்பட்ட அனைவரிடமும் பதிவாகியுள்ளது. அங்கு பெரும்பாலானவர்களுக்கு லேசான அல்லது அறிகுறிகள் முதலில் இல்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணம் பெருமூளை எம்போலி என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினார். மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் ஹைபர்கோகுலேபிள் மற்றும் இரத்த உறைவுகளை உருவாக்குவதற்கான இந்த கூடுதல் முனைப்பு இளைய நோயாளிகள் உட்பட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
இறுதி குறிப்பு
ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் சுவாச மண்டலத்தை மட்டுமே பாதிக்கும் என்று நம்பப்பட்டது. கொரோனா வைரஸ் உடலில் உள்ள ஒவ்வொரு முக்கிய உறுப்பு அமைப்பையும் பாதிக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. பலவீனம், பேசுவதில் சிரமம், தலைச்சுற்றல் அல்லது உணர்வின்மை உள்ளிட்ட அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியம். இது கொரோனா வைரஸால் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக பக்கவாதம் உருவாகுவதைக் குறிக்கும்.