Just In
- 3 min ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- 20 min ago புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
Don't Miss
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Movies அந்த பயம் தான் காரணமா?.. அமரன் முதல் கங்குவா வரை.. ரிலீஸ் தேதியை முடிவு பண்ண முடியலையே!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
தேனுடன் பெருங்காயத் தூளை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது தெரியுமா? ஆம், பெருங்காயத் தூளை தேனில் கலந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்கள் அதிகம் உள்ளன. அதில் ஒன்று தான் பெருங்காயத் தூள். இந்த பெருங்காயத் தூள் சமைக்கும் உணவிற்கு நல்ல சுவையைக் கொடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். பொதுவாக பெருங்காயத் தூள் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளைப் போக்குகிறது.
நமது சமையலறையில் உள்ள மருத்துவ குணம் கொண்ட மற்றொரு பொருள் தான் தேன். இது சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருள். தேனில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், சோடியம், குளோரின், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அதோடு தேனில் பல வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நொதிகள் காணப்படுகின்றன. இவை உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இத்தகைய தேனுடன் பெருங்காயத் தூளை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்பது தெரியுமா? ஆம், பெருங்காயத் தூளை தேனில் கலந்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
எடை இழப்பிற்கு உதவும்
உடல் பருமனால் கஷ்டப்படுகிறீர்களா? உங்கள் எடையை வேகமாகவும், எளிதிலும் குறைக்க வேண்டுமா? அப்படியானால் தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுங்கள். இதனால் பெருங்காயத் தூள் உடலின் மெட்டபாலிசத்தை சரிசெய்யும், தேன் ஆக்ஸிஜனேற்ற கொழுப்பை எரிக்கும். இதற்கு தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வயிற்று உப்புசம் நீங்கும்
எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின்னர் பலரும் வயிற்று உப்புச பிரச்சனையால் அவதிப்படுவதுண்டு. இம்மாதிரியான சூழ்நிலையில், வயிற்று உப்புசத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுங்கள். இதனால் இவை இரண்டிலும் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இப்பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது.
அசிடிட்டி சரியாகும்
இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை அசிடிட்டி. இந்த அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பேனில் சிறிது பெருங்காயத் தூளை சேர்த்து சூடேற்றி இறக்கி தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி செய்வதனால், அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வயிற்று வலி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தக்கும் ஓர் பிரச்சனை தான் வயிற்று வலி. இந்த வயிற்று வலியை சந்திக்கும் போது, தேனில் பெருங்காயத் தூள் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு ஸ்பூன் தேனில் சிறிது பெருங்காயத் தூள் கலந்து சாப்பிட்டு, சிறிது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால், வயிற்று வலி குறைய ஆரம்பிக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருகிறீர்களா? அப்படியென்றால் காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயத் தூளை தேனில் கலந்து சாப்பிடுங்கள். இதனால் செரிமானம் சீராக்கப்பட்டு, உணவில் உள்ள சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்படும். அதோடு இது உடலின் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. முக்கியமாக இது வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்குகிறது.