Just In
- 13 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 49 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக திருமணமான ஆண்கள் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது.
நாம் அனைவருமே உலர் திராட்சையின் நன்மைகளைப் பற்றி படித்திருப்போம். திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை கருப்பு மற்றும் ப்ரௌன் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே ஒரே மாதிரியான நன்மைகளை வழங்கக்கூடியவை தான். இதில் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் நிறைந்திருப்பதோடு, நார்ச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளதால், அன்றாட உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.
உலர் திராட்சையை நாம் வெறுமனே சாப்பிடலாம் அல்லது நீர்/பாலில் கூட ஊற வைத்து சாப்பிடலாம். ஆனால் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். குறிப்பாக திருமணமான ஆண்கள் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது ஆண்களின் கருவளத்தை மேம்படுத்தும். இப்போது ஒருவர் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதை விரிவாக காண்போம்.
MOST READ: ஆண்களே! உங்க செக்ஸ் ஹார்மோனை அதிகரிக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
செரிமானம் சீராக இருக்கும்
உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இதை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை சீராக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும். நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.
குடல் ஆரோக்கியம் மேம்படும்
குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு ஆரோக்கியமான குடல் தேவை. உலர் திராட்சையில் ப்ரீபயாடிக்குகள் மற்றும் டார்டாரிக் அமிலம் உள்ளது. ஆய்வு ஒன்றில், பாலுடன் உலர் திராட்சையை எடுக்கும் போது, அதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்து குடல் மைக்ரோபயோட்டாவை மாற்றுவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதாக தெரிய வந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கும் உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொடுக்கலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக்கும்
தினமும் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இவற்றில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்களான டானின்கள் மற்றும் பீனால்கள் உள்ளன. ஆகவே இதய பிரச்சனைகள் வரக்கூடாது என்றால், பாலுடன் உலர்திராட்சையை சாப்பிடுங்கள்.
வாய் ஆரோக்கியம் மேம்படும்
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உலர் திராட்சை மற்றும் பால் பெரிதும் உதவுகிறது. எப்படியெனில் உலர் திராட்சையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், பல் சொத்தைக்கு எதிராக பாதுகாக்க உதவும். மேலும் உலர் திராட்சையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாவர ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவி புரிகிறது. அதோடு பாலில் உள்ள கால்சியம் மற்றும் ஒலினோலிக் அமிலம் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆகவே உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கும்
ஆண்களிடையே உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்களின் வாழ்க்கைத் தரமும் மோசமாக உள்ளது. ஆய்வாளர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உலர் திராட்சையை சேர்த்து உட்கொள்வது, இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும்.
எலும்புகளை வலுவாக்கும்
பால் மற்றும் உலர் திராட்சையை ஒன்றாக உட்கொள்வது எலும்புகளை வலுவாக்க உதவும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் உலர் திராட்சையிலும் கால்சியம் உள்ளது. எனவே கால்சியம் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுக்கும் போது, எலும்புகள் வலிமையாகும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. எனவே நீங்கள் உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால் பாலில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள்.
விந்தணு இயக்கம் சிறப்பாக இருக்கும்
பொதுவாக ஆண்களில் காதல் வாழ்க்கையைப் பராமரிக்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உலர் திராட்சையைப் பற்றி கூற வேண்டுமானால், அது இன்னும் சிறப்பான பலனைத் தரும். ஆய்வின் படி, உலர் திராட்சை ஆண் கருவுறுதலை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், விந்தணு இயக்கத்தை அதிகரிக்கும் செயல்பாடும் அதில் தீவிரமாக காணப்படுகிறது. இருப்பினும், திருமணமான ஆண்கள் மட்டும் உலர் திராட்சையை பாலுடன் சாப்பிட வேண்டும் என்பதில்லை. இளைஞர்களும் தங்களின் வலிமையை அதிகரிக்க சாப்பிடலாம்.
பாலுடன் உலர் திராட்சையை எப்படி மற்றும் எப்போது சாப்பிடலாம்?
* 6-8 உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டவும். அதன் பின் உலர் திராட்சையை சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து பாலை குடிக்கலாம்.
* ஒருவேளை உங்களுக்கு உலர் திராட்சையை தனியாக சாப்பிட பிடிக்காவிட்டால், பாலில் சேர்த்து மசித்து குடிக்கலாம்.
* உலர் திராட்சை பாலை இரவு நேரத்தில் அல்லது காலை வேளையில் குடிப்பது நல்லது. ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண வேண்டுமானால், தொடர்ந்து 5-7 நாட்கள் குடிக்க வேண்டும்.
குறிப்பு
உலர் திராட்சையில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், அது வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும். எனவே ஒரு நாளைக்கு பத்து உலர் திராட்சைக்கு மேல் சாப்பிட கொடுக்காதீர்கள்.