Just In
- 16 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நீங்கள் கனவு காணும்போது உண்மையில் உங்களின் உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்..?
நம் ஒவ்வொருவருக்கும் வர கூடிய கனவு என்பது மிக இயல்பான ஒன்று. சிறு வயதிலிருந்தே நன் மனதில் பதிவாகின்ற சில முக்கிய செயல்கள் மட்டுமே கனவாக நமக்கு வர கூடும். கனவு மிக முக்கியமான ஒன்றாக பலரும் கருதுவர். சிலருக்கு தாங்கள் கண்ட கனவு உடனே பலித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஒரு சிலருக்கு கெட்ட கனவு வந்ததால் அவை பலித்து விட கூடாது என்கிற எண்ணம் இருக்கும். கனவை அதிக சக்தி கொண்டதாகவே பலரும் நம்புகின்றனர். கனவுகளை பற்றிய பலவித கட்டுக்கதைகள் இன்றும் நம்மை சுற்றியே வலம் வருகின்றது. ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒரு தன்மை உள்ளது. அதே போன்று நாம் காணும் கனவு ஒவ்வொன்றிற்கும் பல வித அர்த்தங்களும் உண்டு.
பொதுவாகவே நமக்கு சராசரியாக 4 முதல் 6 கனவுகள் ஒரு ஆழ்ந்த தூக்கத்தின் போது வர கூடும். ஆனால், அவற்றில் மிக சில மட்டுமே நம் மனதில் பதிந்து இருக்கும். மற்றவை நினைவுக்கு வருவதற்கு கடினமே. இப்படி கனவுகளை பற்றி பல ஆச்சரிய விஷயங்கள் உண்டு. இருப்பினும் நாம் கனவு காணும் போது நமது உடலில் சில வகையான மாற்றங்கள் ஏற்படும். அவை எப்படிப்பட்ட மாற்றங்கள் என்பதையும் கனவுகள் உண்மையில் பலிக்குமா என்பதையும் அறிவியல் பூர்வமாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
கனா..!
வாழ்நாள் முழுக்க நமக்கு இருக்க கூடிய கனவுகள் என்பது வேறு. நாம் அன்றாடம் காணுகின்ற கனவுகள் என்பது வேறு. இவை இரண்டிற்கும் எண்ணற்ற வித்தியாசங்கள் உள்ளன. இதில் தினசரி காணுகின்ற கனவுகள் தான் பல வகையாக இருக்க கூடும். இவை நமது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொருத்தும் மாறுபடும்.
பல நிலைகள்..!
நாம் கனவு உலகத்துக்குள் போவதற்கு முன் பல நிலைகளாக நமது உடல் தயாராகும். இவற்றில் ஒவ்வொரு நிலைக்கும் தனித்துவமான அர்த்தங்கள் உண்டு என கனவுகளை பற்றிய ஆய்வுகள் சொல்கின்றன. எல்லா நிலைகளிலும் நமது உடல் ஒருவித மாற்றங்களை அடைய கூடும்.
முதல் நிலை..!
என்னதான் நமக்கு பல நண்பர்கள் இருந்தாலும் நாம் கனவு காணும்போது தனிமையாகவே இருப்போம். கனவு உலகத்திற்குள் செல்ல போகும் முன், அதன் முதல் நிலையில் நாம் அரை தூக்கத்திலே இருப்போம். நமது கண்கள் பாதி தூங்கிய நிலையிலும் பாதி விழித்து கொண்டிருப்பது போன்ற நிலையிலும் இருக்கும்.
இரண்டாம் நிலை எப்படி..?
முதல் நிலை முடிந்த பின் இரண்டாம் நிலைக்குள் நீங்கள் செல்வீர்கள். நீங்கள் என்பது உங்களின் முழு உடலையும் தான் குறிக்கிறது. இந்த நிலையில் உங்களை சுற்றி இருப்பவைகளை உங்களால் உணர இயலாது. மேலும், உடலின் தட்பவெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். ஒருவித குழப்ப நிலையை இப்போது அடைவீர்கள்.
முக்கிய நிலை..!
இந்த நிலை உங்களின் கனவின் முக்கிய நிலையாக கருதப்படுகிறது. உங்களின் ஆற்றல் மீண்டும் உங்களுக்கு கிடைக்க கூடும். பலவித ஹார்மோன்கள் உடலில் வெளிப்பட தொடங்கும் நிலை தான் இந்த மூன்றாம் நிலை. கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செயல்திறன் குறைய கூடும். மேலும், ரத்த ஓட்டமும் அதிகரிக்க கூடும்.
கனவு உலகம்..!
இந்த நிலையில் தான் நீங்கள் கனவு உலகத்துக்குள் நுழைய ஆரம்பிப்பீர்கள். ஒருவித மாயாஜால உலகமாகவே இது இருக்கும். பலருக்கும் இது நல்ல அனுபவத்தையே தர கூடும். ஒரு சிலருக்கு மோசமான அனுபவமாகவும் இருக்க கூடும். மூன்றாம் நிலை அறிகுறிகள் தான் கனவு உலகத்தில் நீங்கள் நுழைந்ததற்கான அர்த்தமாகும்.
மூளை எப்படி..?
கனவு உலகத்துக்குள் சென்றவுடன் புதுவித மாற்றங்கள் ஏற்பட கூடும். அதாவது, மூளை அதிக ஆற்றலுடன் செயல்படும். மேலும், கனவு காணும்போது உங்களின் கண்கள் அசைவுடனே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்ற. அதுவும் மிக வேகமான செயல்பாடாக இருக்குமாம். இவை 90 முதல் 100 நிமிடங்கள் நீடிக்கும்.
உணர்ந்திருக்கிறீர்களா..?
பொதுவாக நாம் கனவு காணும்போது நமது உடல் மிகவும் தளர்ச்சி அடைந்த நிலைக்கு சென்று விடும். நமது உடலின் தசைகள் மிகவும் தளர்ந்த நிலையில் சென்று விடும். எனவே, நாம் கனவு காணும்போது நமது உடல் அசைவற்று இருப்பது போன்ற உணர்வு இதனால் தான் ஏற்படுகிறது.
மூளையும் கனவும்..!
பொதுவாக நாம் கனவு காணும்போது நமது மூளை தூங்கி விடுவதில்லை. மாறாக அது விழித்து கொண்டு அற்புதமாக வேலை செய்கிறதாம். நமது கலர் கலர் கனவுகளுக்கு முக்கிய காரணமே நமது மூளை தான் என்பதை மறந்து விடாதீர்கள். மேலும், பல நிலைகளை தாண்டியே இந்த கனவுகள் உருப்பெறுகின்றன.
இதய செயல்பாடு எப்படி..?
கனவின் போது எப்படி உங்களின் தசை தளர்ந்து விடுகிறதோ, அதே போன்று உங்கள் இதயத்தின் செயல்பாடும் அதிகரிக்க கூடும். மேலும், சுவாசம் மெல்லமாக நடைபெறும். இது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் மாறுதல் அடையும். நமது உடல், கனவு நிலைக்கு செல்லும்போது மிகவும் தளர்ச்சி அடைந்து விடுகிறது. இது எப்போதும் ஏற்படுகின்ற இயல்பான மாற்றமே.
பலிக்குமா..?
நாம் காணுகின்ற கணுவுகள் பலிக்குமா..?பலிக்காதா..? என்று கேட்டால் அதற்கு விடை "இல்லை" என்பதே. கனவு என்பது நமது எண்ண அலைகளே. இவை எந்த விதத்திலும் உயிர்பெற்று வராது. அப்படியே வந்தாலும் அது இயல்பாய் நடந்ததாகவே இருக்க கூடும். இதற்கும் கனவிற்கு சம்பந்தம் இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் நண்பர்களே.
இறுதியாக...
கனவு நிலையில் இருந்து நாம் நிகழ் நிலைக்கு வரும்போது தான் நமது உடலும் எப்போதும் இருப்பது போன்று உணர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நமது இதயத்தின் செயல்பாடும், தசைகளின் நிலையும், மூளையின் இயக்கமும் மீண்டும் பழைய படியே சாதாரண நிலைக்கு வந்து விடும். இப்படி தான் ஒவ்வொரு முறையும் கனவின் போது நமது உடல் மாற்றம் பெறுகிறது.