For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரணமே இல்லாமல் அழுகை தோன்றுவதற்கான காரணங்கள் என்ன?

வாழ்க்கை என்பதே வெற்றி - தோல்வி, உயர்வு - தாழ்வு, கஷ்ட - நஷ்டம் நிறைந்தது தான். வாழ்க்கையில் தோல்வி, கஷ்டம், வலி போன்ற நிகழ்வுகள் - உணர்வுகள் ஏற்பட்டால், உணர்வின் வெளிப்பாடாக அழுகை ஏற்படும்; ஆனால், நம

|

வாழ்க்கை என்பதே வெற்றி - தோல்வி, உயர்வு - தாழ்வு, கஷ்ட - நஷ்டம் நிறைந்தது தான். வாழ்க்கையில் தோல்வி, கஷ்டம், வலி போன்ற நிகழ்வுகள் - உணர்வுகள் ஏற்பட்டால், உணர்வின் வெளிப்பாடாக அழுகை ஏற்படும்; ஆனால், நம்மில் பலருக்கு, ஏன் எல்லோரும் தன் வாழ்நாளில், சில சமயங்களில் காரணமே இன்றி கண்ணீர் சிந்தி இருப்போம். அது ஏன் என்று என்றாவது நாம் யோசித்ததுண்டா? அப்படி வெளிப்படும் கண்ணீர் சாதாரணமானதா அல்லது உடல் குறைபாடால் வெளிப்படுவதா? அவ்வாறு அழுவது நல்லதா? கெட்டதா? போன்ற சந்தேகங்களுக்கான சரியான விடைகளை இந்த பதிப்பில் படித்தறியலாம் வாருங்கள்!

Why Do I Cry For No Reason

இம்மாதிரி வெளிப்படும் அழுகைக்கு மனநலம் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது தான் முதன்மை காரணம்; இது பலர் உணர்வதில்லை; என்ன மாதிரியான உடல் நலம் மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன, என்ன காரணம் என்று மேற்படி பத்திகளில் விளக்கமாக படித்தறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தூக்கம்

1. தூக்கம்

ஒரு சாதாரண சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 7-9 மணி நேரங்கள் கட்டாயம் உறங்கிட வேண்டும்; சரியான தூக்கம் கொள்ளாமல் இருந்தால் மூளை மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராக இருக்காது. இந்த சீரற்ற தன்மை அடுத்தடுத்த நாட்களில் நாம் செய்யவேண்டிய செயல்களில் ஈடுபாட்டை குறைத்து, உள்ளத்தின் தன்னம்பிக்கையை, உற்சாகத்தை அடியோடு அழித்துவிடும்.

இதனால், சின்ன சின்ன விஷயங்களைக் கூட செய்வதற்கு பயமோ, அல்லது அவை பெரிய விஷயங்கள் போன்ற உணர்வு ஏற்பட்டு பின்னடைவோம்; அல்லது செயலை செய்ய முடியாத நிலை மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி சோகமாக உணர்வு ஏற்படும். இந்த சோகத்தின் வெளிப்பாடு கண்ணீர் வடிவில் வெளிப்படும்; இந்தக் கண்ணீரின் காரணம் செயலை செய்ய முடியாதது தான் என்று நம்பினால் அது முட்டாள்தனம்; அச்செயலை செய்ய முடியாத அளவிற்கு மாற்றிய ஆணி வேர்க்காரணம் எது என்று அதைக் களைய முயற்சிக்க வேண்டும்.

2. மனஅழுத்தம் மற்றும் வயிற்றெரிச்சல்

2. மனஅழுத்தம் மற்றும் வயிற்றெரிச்சல்

ஏதேனும் வேலை காரணமாக அல்லது தனிப்பட்ட விஷயத்தின் காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டால், அது மனதிலேயே தங்கி நாள்பட்டதாக மாறியிருந்தால் உங்களுக்கு அழுகை ஏற்படும். ஏனெனில் உங்கள் தொழிலில் அல்லது எந்தவொரு விஷயத்திலும் போட்டியாக இருக்கும் நபரின் வளர்ச்சி முதலில் உங்கள் வயிற்றெரிச்சலை கிளப்பி, கோபம், பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி, மெதுவாக உங்கள் மனதை ஆக்கிரமித்து மனஅழுத்தமாக மாறுகிறது.

இந்த அழுத்தம் உங்களை பலவீனமாக உணரச் செய்து அடிக்கடி உங்களி அழவும் வைக்கிறது; இது உடலில் கூட மலச்சிக்கல், செரிமான பிரச்சனை என்று பல குறைபாடுகளை ஏற்படுத்தும்; அக்குறைபாடுகளுக்கு ஆணிவேர் இந்த மனஅழுத்தம் தான் என்று மனித மனம் உணராமல் கண்ணீர் சிந்தி வாடுகிறது.

3. மாதவிடாய்

3. மாதவிடாய்

பெரும்பாலான பெண்களில் மூடவுட் உணர்வு, அழுகை, பலவீனம், வலி போன்ற பலவிதமான உணர்வுகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்றன; அதிலும் குறிப்பாக மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் இந்த உணர்வுகள் அதிகமாக, மேலோங்கிக் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பெண்களில் மாதவிடாயை ஒட்டிய காலகட்டங்களில் தேவையின்றி கண்ணீர் வெளிப்படலாம்; இதற்கு உங்கள் உள்ளுறுப்புகளில் நிகழும் மாதவிடாய் மாற்றங்கள் என்று அனைத்தும் அறியத்துடிக்கும் பெண் மனமும் அறியத் தவறிவிடுகிறது.

4. மாதவிடாயின் மாற்றம்

4. மாதவிடாயின் மாற்றம்

முப்பதுகளின் இறுதி மற்றும் நாற்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் வயது முதிர்ந்த பெண்களில் காரணமின்றி ஏற்படும் கண்ணீர் அடிக்கடி வெளிப்படும்; இதற்கு அவர்களின் உடலில் மாதவிடாய் சுழற்சி நிற்க ஆயத்தமாவது தான் முக்கிய காரணம். இந்தக் காரணத்தை அறியாமல், வேறு ஏதோ பிரச்சனையால் தான் அழுகிறோம் என்று எண்ணிக்கொண்டு, தேவையற்ற பிரச்சனைகளை குறித்து எண்ணி மனதை மேலும் சோகத்தில் ஆழ்த்தி, ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் கண்ணீரின் அளவை அதிகரித்து அழுமூஞ்சியாக உலவி வருவார்கள், சிலர்,

5. கலவிக்கு பின்..

5. கலவிக்கு பின்..

பெரும்பாலான பெண்கள் தங்கள் துணையுடன் கலவி கொண்டபின், ஏற்பட்ட உடல் வலி, சோர்வு காரணமாக அடுத்தடுத்த நாட்களில் காரணமே இன்றி அதிகம் கண்ணீர் வடிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. நூறில் 46 சதவிகிதம் பெண்களில் இம்மாதிரியான உணர்வு ஏற்பட்டு, அவர்கள் கண்ணீர் சிந்துவதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த அழுகைக்கு அவர்தம் உடலில் நிகழும் சில ஹார்மோன் மாற்றங்கள் கூட காரணமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. வைட்டமின் பி12

6. வைட்டமின் பி12

உடலில் வைட்டமின் பி 12 அளவு போதுமானதாக இருக்க வேண்டும்; இந்த வைட்டமின் தான் இரத்த, மூளை, நரம்பு செல்கள் மற்றும் டிஎன்ஏ போன்றவற்றின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, இயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இந்த வைட்டமின் உடலில் குறைந்தால், உடல் எடை குறைதல், பலவீனம், நரம்பு தொடர்பான பிரச்சனைகள், சோர்வு, மலச்சிக்கல்,மறதி,குழப்பம்,வாய் மற்றும் நாக்கில் வலி போன்ற குறைபாடுகள் ஏற்படும். இதன் காரணமாக காரணமே இன்றி கண்களில் கண்ணீர் ஊற்றாக உருவாகி வெளிப்படும். இந்த வைட்டமினை உடலில் அதிகரிக்க மீன், முட்டை, இறைச்சி, பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

7. குறைந்த இரத்த சர்க்கரை

7. குறைந்த இரத்த சர்க்கரை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவான அளவை எட்டிவிட்டால், அதுவும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளில் ஏற்பட்டுவிட்டால், அவர்களுக்கு காரணம் இல்லாமல் கண்ணீர் ஏற்படலாம். இந்த நிலையை மனித உடல் அடைய தாமதமாக உண்ணுதல், குறைவான சத்துக்கள் உள்ள உணவை உண்ணுதல், குடிப்பழக்கம், அதிகமாக மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை காரணமாகலாம். இதன் விளைவாக உடல் மிகவும் பலவீனமாக, சோர்வாக, எரிச்சல் உணர்வை உணரும்; இதனால், அடிக்கடி கண்ணீர் வெளிப்படும், இந்த உண்மைக் காரணத்தை மனித மனம் அறிவதில்லை; ஏன் இப்படியான காரணங்கள் இருக்குமோ என்று யோசித்து கூட பார்ப்பது இல்லை.

8. தைராயிடு

8. தைராயிடு

உடலில் தைராயிடு பிரச்சனைகள் ஏற்படுவதால், உடலில் பல பக்க விளைவுகள் தோன்றலாம்; அதாவது பக்க விளைவுகள் என்று குறிப்பிடுவது, சோர்வு, மனஅழுத்தம், எரிச்சல் போன்ற உணர்வுகளையும், மலச்சிக்கல், உடல் எடையில் ஏற்படும் மாறுபாடு போன்ற விஷயங்களை தான். இந்த மாதிரியான மாற்றங்கள் ஹார்மோன் மாற்றத்தாலும், தைராயிடிற்கு உட்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகளாலும் உண்டாகலாம். இது அடிக்கடி காரணமற்ற கண்ணீர் தோன்ற மிக முக்கிய காரணமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Do I Cry For No Reason

Why Do I Cry For No Reason
Story first published: Monday, August 6, 2018, 11:17 [IST]
Desktop Bottom Promotion