Just In
- 2 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 5 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 5 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 7 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உடம்பு வலியா?... இனி மாத்திரை வேண்டாம்... உங்களுக்கு புடிச்சவங்க கைய இப்படி புடிங்க...
உங்கள் உடலில் வலி அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டாம். உங்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உடலில் வலி அதிகமாக இருந்தால், மருத்துவரிடம் செல்ல வேண்டாம் . உங்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளை பிடித்துக் கொள்ளுங்கள். கொலராடோ பல்கலைக்கழகத்தின் நடத்தப்பட்ட ஆராயச்சியின் முடிவில் இந்த அறிவுரை தற்போது வழங்கப்பட்டுள்ளது.
தனிமனித ஒத்திசைவு பற்றி வளர்ந்து வரும் ஆய்வை இந்த ஆய்வு ஆதரிக்கிறது. துணைவரின் குணாதிசயங்கள் மற்றும் உடற்கூறியல் செயல்பாடுகள் போன்றவற்றின் கோட்பாடுகளைப் பற்றி இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
"நவீன உலகில் தொடர்பு கொள்ள நிறைய வழிகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எங்களிடம் குறைவான உடல் தொடர்புகளும் உள்ளன," என்று பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் மற்றும் பாதிப்புள்ள நரம்பியல் ஆய்வகத்தின் பிந்தைய துடிப்பு வலி ஆராய்ச்சியாளர் பாவெல் கோல்ட்ஸ்டைன் கூறினார்."இந்த தாளானது மனித உறவுகளின் சக்தி மற்றும் முக்கியத்துவத்தை விளக்குகிறது."
மேலும் குறிப்பாக, கோல்ட்ஸ்டைனின் ஆய்வில் கைகளை கோர்ப்பதால் உங்கள் மூச்சு முறைகள், இதய துடிப்பு மற்றும் மூளை அலைகள் ஆகியவற்றை ஒத்திசைக்கும் என்று கண்டறிந்துள்ளது.
மூளையின் ஒத்திசைவைப் பற்றி அறியக்கூடிய முதல் ஆய்வு இது என்று அறியப்படுகிறது. மேலும், இந்த தொடுதல் மூலம் வலி எப்படி குறைக்கப்படுகிறது என்பதற்கான முதல் ஆய்வும் இதுவே.
பிரசவத்தில் அவருடைய மனைவியுடன் தங்கியிருந்த பிறகு கோல்ட்ஸ்டீன் இந்த பரிசோதனையை பற்றி யோசித்தார். பிரசவத்தின்போது இவருடைய மனைவி வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இவர் தன மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவருடைய மனைவிக்கு வலி குறைந்து மிகவும் எளிமையாக உணர்வதை உணர்ந்தார். இதில் உண்மை உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முனைந்தார். 22 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் மூளையின் செயலாற்றலைக் கணக்கிட EEG கப்ஸ் பொருத்தப்பட்டது.அந்த ஜோடிகள் தனி அறையில் இருக்கும் போதும், ஒரே அறையில் தொடாமல் இருக்கும்போதும், கை கோர்த்து இருக்கும்போதும் அவர்களின் மூளையின் செயலாற்றல் கணக்கிடப்பட்டது. பெண்களுக்கு ஒரு மிகவும் எளிய வலியை செலுத்தும்போது , பெண்கள் அனுபவிக்கும் வலி ஆண்களின் தொடுதலால் குறைகிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
கோல்ட்ச்டீன் மற்றும் இவர்களின் குழு, தொடுதல் உணர்வு, பகிரும் அனுபவத்தை தருவதாகவும், இதனால் வலியும் பகிரப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனை புரியும் படி கூற வேண்டுமானால், உங்கள் துணையின் தொடுதலை நீங்கள் உணர்வதால், வலி ஊக்கிகள் உங்கள் உடலில் குறைந்து, நீங்கள் தனியாக இல்லை என்ற உணர்வை உங்கள் உடல் அடைகிறது. உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையில் உள்ள தூரத்தை இந்த தொடுதல் உணர்வு குறைக்கிறது. என்று கோல்ட்ச்டீன் கூறுகிறார். நீங்கள் உங்கள் துணையின் வலியை உணர்வதை தொடுதல் என்ற உணர்வின்றி அவர்களுக்கு முழுவதுமாக புரிய வைக்க முடியாது. என்று அவர் கூறுகிறார்.