Just In
- 2 min ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 1 hr ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 4 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 9 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Don't Miss
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Movies ஹன்சிகாவுக்காக பல கோடி செலவு செய்த சிம்பு.. தப்பா பேசவே இல்ல.. சினிமா பிரபலம் சொன்ன அந்த விஷயம்!
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்கள் காதலி (அ) மனைவி இந்த மூடநம்பிக்கைகளை செய்வதால் மரணம் கூட நேரலாம்..!
இந்தியா- பலவித கலாசாரத்திற்கு பேர்போன நாடு. இங்குள்ள ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாடியும் ஒருவித அரசியலும், பலவித ஆளுமைகளும் இருக்கத்தான் செய்யும். இது இன்று நேற்று வந்த பழக்கங்கள் அல்ல. பல ஆயிரம் வருடமாக இதே பழக்க வழக்கங்கள் தான் இங்குள்ளவர்களின் ரத்தத்தில் ஊறி போய்யுள்ளது.
குறிப்பாக பெண்கள் மீது செல்லத்தப்படும் பலவித மூட நம்பிக்கைகள் எத்தகைய விளைவை, அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் என்பதை கண்டு கொள்ளாத உயிர்களாக இருந்து வருகின்றோம். உள்ளாடை பற்றிய மூட நம்பிக்கை முதல் மாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கை வரை இதே தான் தொடர்கிறது. இது போன்ற சடங்கு என்கிற பெயரில் செய்கின்ற சில பல செயல்கள் பெண்களின் மரணத்திற்கே காரணமாக உள்ளதாம். வாங்க, அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பின்னி பிணைக்கப்பட்டுள்ளதா..?
ஆசியா, ஐரோப்பியா போன்ற கண்டங்களில் பலவித மூட நம்பிக்கைகளும், சடங்குகளும் பெண்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. இவை பல நுற்றாண்டுகளாக தொடர்கின்ற ஒரு கலாச்சாரமாகவே மாறியுள்ளது.
பெண்களே இவை ஆபத்து என்பதை அறியாமல் அவர்களும் செய்து வருகின்றனர். இங்கு, பெண்களும் சடங்குகளும் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
பிறப்புறுப்பில் சோப்பா..?
பெண்கள் மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவானது தான் இந்த தினசரி பழக்கம். பெண்களின் பிறப்புறுப்பு சுத்தமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் அங்கு சோப்பை பயன்படுத்துவார்கள்.
இந்த பழக்கம் வஜைனல் பகுதியில் வறட்சி தன்மையை ஏற்படுத்தி நோய் தொற்றுக்களை உண்டாக்கும். இதனால் பிறப்புறுப்பு பெரிதும் பாதிப்படையும்.
உடலுறவு கொள்ள கூடாது..!
பல ஆண்டுகளாக இந்த மூட நம்பிக்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது மாதவிடாய் காலத்தின் போது பெண் உடலுறவை பற்றி யோசிக்கவே கூடாது என்பது.
உண்மையென்னவெனில், மாதவிடாயின் போது அந்த பெண் விருப்பப்பட்டால் அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபடலாம் என்பதே.
உள்ளாடை பிரச்சினை..!
பல பெண்களின் வீடுகளில் இந்த பிரச்சினை உள்ளது. தூங்கும் போது உள்ளாடை அணிந்து கொண்டு தூங்க வேண்டும் என பலரும் வற்புறுத்துகிறார்கள்.
ஆனால், தூங்கும் போது, உள்ளாடை இல்லாமல் தான் தூங்க வேண்டும். உள்ளடையுடன் தூங்கினால் மார்பக திசுக்கள் பாதிக்கப்பட்டு உங்கள் மனைவி அல்லது காதலிக்கு பலவித பிரச்சினைகள் வர கூடும்.
MOST READ: ஆண்கள் எத்தனை வாரத்திற்கு ஒரு முறை முடி வெட்ட வேண்டும்..! அப்படி வெட்டுவதால் பலன் என்ன..?
மாதவிடாயின் போது குளியலா..?
பெண்கள் மாதவிடாய் காலங்களில் தலைக்கு குளிக்க சொல்லும் மூட பழக்கம் சரியானது அல்ல. இதனால் தீட்டு கழியும் என மிக தவறான புரிதலை மக்கள் மனதில் கொண்டுள்ளனர்.
மாதவிடாயின் போது தலைக்கு குளிக்க வேண்டியதில்லை. மாறாக வெது வெதுப்பான சூடு நீர் குளியலை விருப்பப்பட்டால் உடலுக்கு மட்டும் எடுத்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு ஒன்று மட்டுமா..?
முன்பெல்லாம் 1 நாளைக்கு 1 பேட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற மூட பழக்கம் இருந்தது.
ஆனால், இது பெண்களின் பிறப்புறுப்பை முற்றிலுமாக பாதிக்க கூடிய செயலாகும். எனவே, 5 மணி நேரத்திற்கு 1 பேட் மாற்றும் பழக்கமே சிறந்தது.
கருப்பு உள்ளாடையா..?
பொதுவாகவே உள்ளாடை வாங்கும் போது, அடர்ந்த நிறங்களில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை சூரிய வெப்பத்தை உங்களின் மார்பக பகுதியில் அதிகமாக வாங்கி கொள்ளும். குறிப்பாக வெயில் காலங்களில் கருப்பு நிற உள்ளாடைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இது வேண்டாமே..!
பெண்கள் நேரடியாக தங்களது உடலில் இந்த டியோடரண்ட்களை பயன்படுத்துகிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும்.
இவற்றில் உள்ள அலுமினியம் வியர்வை வருவதை தடை செய்து நச்சுக்களை உள்ளையே தங்க வைத்து விடும். நாளடைவில் இது மார்பக புற்றுநோயை கூட ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
MOST READ: பச்சை முட்டை Vs அவிச்ச முட்டை..! இது இரண்டுத்துல எது அபாயகரமானது..?!
இப்படியுமா..!
பல பெண்கள் தங்களது உள்ளாடைகளை வாரத்திற்கு ஒரு முறை தான் துவைக்கிறார்கள். இது தவறான செயலாகும்.
2 அல்லது 3 முறை பயன்படுத்திய உடன் துவைப்பது நல்லது. இல்லையெனில் நோய் கிருமிகளின் தொற்றுகள் உங்களை பாதித்து விடும்.
உங்கள் வாழ்க்கை.. உங்கள் கையில்..!
என்னதான் பலவகையான மூட நம்பிக்கைகள் நம்மை சுற்றி வளைத்திருந்தாலும், அவற்றை பின்பற்றுவதும் கூடாததும் தனி நபரின் விருப்பம். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத எதையுமே கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், மேற்சொன்ன தவறான மூட பழக்கங்களை பற்றி விழிப்புணர்வை உங்கள் அம்மாவுக்கோ, தோழிக்கோ, காதலிக்கோ, மனைவிக்கோ எடுத்து சொல்வது நல்லது.