For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்

வாழைப்பழம் அனைவரும் விரும்பும் மற்றும் சாப்பிடும் ஒரு பழமாகும். ஆனால் மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்கள் உங்கள் உயிரையே பறிக்கக்கூடும்.

|

உலகின் முக்கனியாக கருதப்படுவது மா, பலா, வாழை. மற்ற இரண்டும் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கும், ஆனால் வாழைப்பழமோ வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. அதனாலேயே வாழைப்பழம் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது. உலகளவில் மக்கள் விரும்பி உண்ணும் பழமாக வாழைப்பழம் விளங்குகிறது. உலகளவில் வாழைப்பழ உற்பத்தியில் முன்னணியில் இருப்பது நமது நாடுதான். வாழைப்பழத்தின் விலையும், அதன் சத்துக்களுமே அதை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது.

Health

அனைத்து பழங்களுமே சத்துக்கள் நிறைந்ததுதான், ஆனால் எல்லாராலும் அனைத்து பழங்களையும் வாங்க இயலாது. வாழைப்பழத்தின் விலை மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு, அதுமட்டுமின்றி இது பசியினை கட்டுப்படுத்தக்கூடியது. இதனால்தான் உலகில் உள்ள பெரும்பகுதியான மக்கள் வாழைப்பழம் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். இதனை பயன்படுத்திதான் நம்மிடையே இந்த விஷத்தை வாங்க வைத்து நம்மை நோயில் விழவைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

முன்பே கூறியது போல வாழைப்பழம் குறைந்த விலையில் அதிகளவு சத்துக்களை கொடுக்கக்கூடிய பழமாகும். இதில் உள்ள பதினாறு வகை சத்துக்கள் நமக்கு பல நன்மைகளை தருகிறது. உலகம் முழுவதும் கிட்டதட்ட மூவாயிரம் வகை வாழைப்பழங்கள் உள்ளன. இந்தியாவில் வாழை உற்பத்தியில் தென்மாநிலங்களே முன்னணியில் இருக்கிறது. ஆனால் இன்றைய உலகில் கலப்படம் இல்லாத, செயற்கை முறையில் தயாரிக்கபடாத உணவுகள் கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு வாழைப்பழம் மட்டும் விதிவிலக்கா என்ன?. இந்த கலப்பட உணவுகள் நன்மையை வழங்காவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்காமல் இருந்தாலே போதும். ஆனால் இவை நம் உயிரை வாங்கும் அளவிற்கு ஆபத்தானவை.

மோரிஸ் பழம்

மோரிஸ் பழம்

தற்போது அனைத்து பழ கடைகளிலும் கிடைக்கும் ஒரு பழம் இந்த மோரிஸ் வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கும்போது இந்த பழம் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும். அளவில் பெரியதாகவும், சுவையும் நன்றாக இருக்கும் இதனை ஏன் விலை குறைவாக விற்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஏனென்றால் இது பழமல்ல நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் விஷம். " வாழையடி வாழையா" வாழணும்னு சொல்லுவாங்க ஆனால் இந்த பழம் சாப்பிடறவங்கள அப்படி வாழ்த்த முடியாது.

பயிரிடும் முறை

பயிரிடும் முறை

நம்ம நாட்டு வாழை மரம் பயிரிடும் முறைக்கும் இந்த மோரிஸ் பழம் பயிரிடும் முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இயற்கை முறையில் விளையும் நம்ம நாட்டு மரத்திற்க்கும் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுற இந்த மரத்திற்கும் உள்ள வேறுபாடு பாலுக்கும், கல்லுக்கும் இருக்கிற வேறுபாடு மாதிரி. இரண்டுமே வாழைப்பழம்தான் ஆன பலன்கள் வேற வேற. இந்த மரபணு மாற்றப்பட்ட பழத்தோட காப்புரிமை நம்ம நாட்டுகிட்ட இல்ல எனவே வெளிநாடு மூலம்தான் இந்த பழம் பயிரிடப்படுது.

சைவம் பாதி, அசைவம் பாதி

சைவம் பாதி, அசைவம் பாதி

இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்கமால் இருக்க பலவித பூச்சிக்கொல்லிகள் பயன்டுத்தப்படுகிறது. அதற்கும் மேலாக இந்த மோரிஸ் பழத்தில் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்பட்டது. மோரிஸ் பழங்கள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இது உங்களுக்கு பல சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பழுக்க வைக்கும் முறை

பழுக்க வைக்கும் முறை

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு வகையில் பழுக்கவைக்கப்டுகிறது. உதாரணமாக மாம்பழங்கள் எப்படி கிராபைட் கற்கள் கொண்டு பழுக்கவைக்கப்டுகிறதோ, அதேபோல இந்த பழங்கள் இரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு இந்த பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது காய்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏனெனில் அப்போதுதான் காய்களுக்கு சேதம் எதுவும் ஏற்படாது. ஆச்சரியப்பட வைக்கும் உண்மை யாதெனில் இந்த பழத்தை பழுக்க வைக்க மூன்று மணி நேரம் போதும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான் காய்களாக வரும் இவற்றின் மீது ப்ரோபலின் என்னும் இரசாயனம் ஊற்றப்படுகிறது. இந்த இரசாயனம் ஊற்றப்பட்ட சில மணி நேரத்தில் காய்கள் பழுக்க தொடங்கிவிடும். மேலும் இவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்கள் ஏழு நாட்கள் வரை கெடாது. பழமும் புதியது போலவே இருப்பதால் நாமும் எளிதில் ஏமாந்துவிடுகிறோம்.

அலர்ஜிகள்

அலர்ஜிகள்

இவ்வாறு பலவித மரபணுக்கள், இரசாயனங்கள் கலந்த பழங்கள் எவ்வாறு நமக்கு நன்மையை தரும். இந்த பழங்கள் நமது சருமத்தில் தடிப்புகள் மற்றும் அரிப்புக்களை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களையும் ஏற்படுத்தும். குறிப்பாக அழகுக்கென இந்த பழத்தை முகத்திற்கு பயன்படுத்துபவர்களுக்கு பெருமளவில் ஆபத்துகள் காத்திருக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

இரசாயனங்கள் என்றாலே ஆபத்தனாவைதான், அதிலும் வயிற்றுக்குள் செல்லும் இந்த இரசாயனம் சும்மாவா இருக்கும் வயிற்றுப்புண், குடல்புண், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். பலர் இதனை ஆரோக்கியம் என நினைத்து தினமும் காலை உணவாக உண்கிறார்கள். அவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

கண்டறியும் முறை

கண்டறியும் முறை

மோரிஸ் வாழைப்பழங்களை யாராவது தாருடன் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இவை எப்போதும் சீப்புகளாகவே விற்கப்படும். இதன் காரணம் யாதெனில் இயற்கையாய் விளைந்த நாட்டு பழங்களின் தாருக்கும், இரசாயனம் ஊற்றி பழுக்க வைக்கப்படும் இந்த பழங்களின் தாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இரசாயனம் ஊற்றி பழுக்கவைக்கப்ட்ட பழங்களின் வாழைத்தார் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் இயற்கையாய் பழுத்த பழங்களின் வாழைத்தார் பச்சை நிறத்தில் இருக்கும். அதனாலேயே நீங்கள் மோரிஸ் பழத்தின் தாரை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

தீர்வு

தீர்வு

இதெற்கென்ன தீர்வு, நமது நாட்டு வாழைப்பழங்களை மட்டும் சாப்பிடுங்கள் அவ்வளவுதான். விலை குறைவென விஷத்தை வாங்கி தினமும் சாப்பிடுவதை விட விலை அதிகமானாலும் ஆரோக்கிய உணவை எப்போதாவது சாப்பிடுவது சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This banana is harmful to health

Almost all people in the world are having a banana in different ways. But the shocking truth is Morris banana leads to many allergies and cancer.
Story first published: Friday, July 20, 2018, 12:27 [IST]
Desktop Bottom Promotion