Just In
- 22 min ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 1 hr ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 4 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 10 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
Don't Miss
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Movies ’சிட்டிசன்’ அஜித்தால் கடுப்பான சீனியர் சிட்டிசன்.. ஓட்டுப் போடும் இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இத குடிச்சா செலவே இல்லாம பல நோயை குணப்படுத்தலாமாம்... இது என்னன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கா?...
ஆயுள் காக்கும் ஆயுர்வுத மருத்துவத்தில் பசுவின் சிறுநீர் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பரவலாக கோமியம் என்று அழைக்கப்படும் மாட்டு சிறுநீரானது, நோய்களை குணப்படுத்தவும், உடல் நிலையை சீராக்கவும் இந்திய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத முறையில், நோய்களுக்கான சிகிச்சையில் பசு மாட்டின் கோமியம் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுள் காக்கும் ஆயுர்வுத மருத்துவத்தில் பசுவின் சிறுநீர் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவ முறை
பாரம்பரிய மருத்துவ முறையில் பல்வேறு கடுமையான நோய்களுக்கும் இது நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. கோமியத்தை பால், தயிர் அல்லது வெண்ணெயுடன் கலந்து நோய்களை குணப்படுத்த பயன்படுத்துவர். எயிட்ஸ், புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களை குணப்படுத்த மற்ற மருந்துகளுடன் சேர்த்து கோமியமும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஆய்வறிக்கைகளின் படி கோமியமானது, நோய்களில் இருந்து மீண்டு வர மிகவும் உதவிகரமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் மாட்டின் கோமியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் சோப், சாம்ப், பற்பசை மற்றும் குளிர்பானம் போன்ற சில பொருட்களில் கோமியம் கலந்துள்ளது.
சத்துக்கள்
சிறுநீரில் டாக்சிக் பொருட்கள் இருக்கிறது என்பது பரவலான கருத்தாக இருந்தாலும், கோமியத்தில் யூரியா, தாதுசத்துக்கள், உப்புகள், ஹார்மோன்ஸ், என்சைம்ஸ் போன்றவற்றுடன் 95% தண்ணீரும் உள்ளது. என்னதான் கோமியத்தின் மூலம் பல்வேறு நோய்கள் குணபடுத்தப்பட்டாலும், அது இன்னமும் விவாதப்பொருளாகத்தான் உள்ளது.
கோமிய ஆராய்ச்சி
பல நூறாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் கோமியம் முக்கிய அங்கம் வகித்தாலும், அறிவியல் பூர்வமாக இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் திருப்புமுனையாக , 400 குஜராத்தின் கிர் இன மாடுகளின் சிறுநீரை ஆராய்ந்ததில் அதில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கிர் இன பசுக்களின் சிறுநீரில் உள்ள 5100 சேர்மங்களில், 388 சேர்மங்கள் மருத்துவ தன்மை வாய்ந்தது என்றும், அதன் மூலம் பல நோய்களை குணப்படுத்தலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நன்மைகள்
கோமியத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன்மூலம் நோய் பரப்பும் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது. ஆயிர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாதம், பித்தம் மற்றும் கபம் எனப்படும் உடலின் சமநிலையில்லா தன்மையை குணப்படுத்தவல்லது கோமியம்.
இது உடலில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. புற்றுநோய், நீரிழிவு, மூளை மற்றும் இதய பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தொழுநோய், வலிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு கோமியம் சிறந்த பலனளிக்ககூடய மருந்தாக உள்ளது.மேலும் காய்ச்சல், அனிமியா, நுரையிரல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.
விவாதங்கள்
கடந்த பல நூறு ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கோமியம் அறுமருந்தாக பயன்பட்டு வருகிறது. ஆனாலும் அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படாததால் இன்னும் இது விவாதப்பொருளாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் கோமியத்தின் மகத்துவத்தை உணரும் வகையில் ஆய்வு முடிவுகள் வரும் என நம்புவோமாக.
பொருளாதாரம்
எதுவாயினும், இந்த சிகிச்சை சுற்றுசூழலுக்கும், நம் பொருளாதாரத்திற்கும் மிகவும் உகந்தது. தற்போது நடந்து வரும் அறிவியல் ஆய்வுகளின் மூலம் இதுபோன்ற கோமியத்தின் பல சிறப்புகள் வெளிவரலாம்.