Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 5 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இதை பற்றி நினைத்தால் சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறுவீர்கள் என்பது தெரியுமா?
திர்மறை எண்ணங்களும் முதிர்ந்த தோற்றத்திற்கு ஒரு காரணம் தான் என்பது பற்றி தெரியுமா
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது முற்றிலும் உண்மை தான். சிந்தனைக்கு ஏற்ப தான் வாழ்க்கையும் அமையும். மனதில் நல்ல சிந்தனைகள் தோன்றினால் முகத்தில் கட்டாயமாக ஒரு பிரகாசமான ஒளி தோன்றும். அதுவே மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் உங்களது முகம் வயதானது போன்ற தோற்றத்தை அடையும்.
நாற்பதிலும் இளமை
ஒரு சிலர் தங்களது நாற்பது வயதிலும் கூட 20 வயது உள்ளவர்களை விடவும் இளமையாக இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களது உடற்பயிற்சி, உணவுமுறை, மற்றும் மனதில் தோன்றும் ஆரோக்கியமான சிந்தனைகளே ஆகும். ஆய்வுகள் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களும் வயது முதிர்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்கிறது.
சந்தேகம்
எப்போது பார்த்தாலும் தன்னுடன் பழகுபவர்களை சந்தேகத்துக்கொண்டே இருப்பது, நட்புடன் பழகாமல் இருப்பது, சுயநலமாக இருப்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் இருக்க கூடாது. முதலில் நம் உடன் இருப்பவர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது நம்பிக்கைக்கு உரியவருடன் பழக வேண்டும்.
நிறைந்த மனது :
எதையும் நிறைந்த மனதுடன் திருப்தியாக செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு பார்வையுடன் பார்த்தல் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிடுதல் கூடாது.
இறந்த காலம்
இறந்த காலத்தை மீட்டெடுத்து அதில் மாற்றங்கள் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்ற போதிலும் கூட, எப்போதும் சிலர் இறந்த காலத்தை நினைத்து கவலைப்பட்டு கொண்டே வாழ்வார்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். அதீத கவலையானது உங்களது அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பறித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம்.
கனவில் வாழுதல் :
சில இறந்த காலத்தை நினைத்து கவலை கொண்டு வாழ்வார்கள் என்றால், சிலரோ எதிர்காலத்தில் நடக்க கூடிய விஷயங்களை நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஆனால் அவர்கள் நிகழ்காலத்தில் உள்ள நிஜங்களை தொலைத்துவிட்டு, கனவு உலகில் வாழ்ந்து என்ன பயன்? தூய்மையான, நேர்மறையான சிந்தனைகளை கொண்டவர்களுடைய முகம் எப்போதுமே அழகாக தான் இருக்கும்.