Just In
- 40 min ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 2 hrs ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
Don't Miss
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மன உளைச்சலை குணப்படுத்தும் மார்ஜாரியாசனா !!
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. வேலை, குடும்பம், பொருளாதாரம் ஏன் குழந்தைகளுக்கும் அதிக படிக்க வேண்டிய சூழ் நிலையில் மன அழுத்தம் உண்டாகிறது.
மன உளைச்சல் பலவிதங்களில் இன்று மனிதர்களை தாக்குகிறது. போட்டி நிறைந்த சூழ் நிலையில் உங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிகளும் கடின உழைப்பும் தேவைதான்.
அதே சமயம் அதனால் உண்டாகும் மன அழுத்தத்தை கண்டு கொள்ளாமல் விட்டால் அது உங்களையே முடக்கிவிடும்.
மன அழுத்தத்தை எப்படி குணப்படுத்தலாம். சந்தேகமில்லை. யோகாவினால் முடியும். யோகா மன அமைதியையும் , தீர்க்கமான செயலாக்கத்தையும் தர உதவும்.அதனை பற்றி விரிவாக காணலாம்.
மார்ஜாரியாசனா :
மார்ஜாரியாசனா பூனையை போன்ற நிலையில் செய்யப்படுவதாகும். இது மன அழுத்தத்திற்கு சிறந்த யோகாவாக விளங்குகிறது. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.
செய்முறை :
முதலில் தரையில் முட்டி போட்டு அமருங்கள். நேராக நிமிர்ந்து அமர வேண்டும். மெதுவாக மூச்சைவிட்டபடி தொடருங்கள்.
செய்முறை :
பின்னர் முட்டி போட்ட நிலையிலேயே முன்னோக்கி வளைந்து கைகளை தரையில் பதிக்கவும். இரண்டு கால்களையும் சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
தலையை நன்றாக குனியுங்கள். தொங்க விடுவது போல் தலையை வைக்கவும். தோள்பட்டைகளை நேராக வைத்திருக்கவும்.
முதுகை நன்றாக வளைக்க வேண்டும். சில நொடிகள் இருந்துவிட்டு மீண்டும் இதே போல் 5 முறை செய்யவும்.
நன்மைகள் :
முதுகுத் தண்டிற்கு பலம் தரும். ஸ்பாண்டைலிடிஸ் பிரச்சனைக்கு தீர்வு தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
குறிப்பு :
தலையில் சமீபமாக அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது. அதோடு நல்ல பயிற்சியாளரின் உதவியுடன் இந்த ஆசனத்தை செய்வதால் நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்.