Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...
வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.
வாழைப்பழம் ஆரோக்கியம் மிகுந்தது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் வீட்டில் வாழைக்காய் பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடுவோம். வாழைக்காய் பஜ்ஜிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் ஒரு சிலர் வாயுத் தொல்லை ஏற்படும் என்று ஒதுக்கிவிடுவார்கள். இதையெல்லாம் தாண்டி, வாழைத்தண்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்தும் கூட அதை வாங்கி, நாறெடுத்து விட்டு சமைக்கவோ, சாறு பிழிந்து குடிக்கவோ சோம்பேறித்தனம்.
பாட்டி வைத்தியம்
தீராத பல நோய்களையும் தீர்த்து வைக்கும் அற்புதமாக இந்த வாழைத்தண்டு, நம்முடைய பாரம்பரிய மருத்துவமான பாட்டி வைத்திய முறையில் பயன்படுத்தப்படுகிறது. அப்படி என்னென்ன நோய்களைத் தீர்க்க வாழைத்தண்டை எப்படியெல்லாம் சாப்பிட வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
நார்ச்சத்து
வாழைத் தண்டில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், நம்முடைய குடலுக்குள் தேங்கியிருக்கும் மணல், கற்களை வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.
சிறுநீர் கடுப்பு
சரியாக சிறுநீர் வராமல், அல்லது சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறவர்கள் அடிக்கடி உணவில் வாழைத்தண்டை சேர்த்து வந்தால் சிறுநீர் பிரிவது எளிதாகும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.
ஏராளமான பயன்கள்
நரம்புத்
தளர்ச்சியை
சரிசெய்யும்
ஆற்றலும்
வாழைத்தண்டுக்கு
உண்டு.
தினந்தோறும்
வாழை
தண்டுச்
சாற்றை
இரண்டு
அல்லது
மூன்று
ஸ்பூன்
அளவுக்கு
குடித்து
வந்தீர்கள்
என்றால்,
அடிக்கடி
வரும்
வறட்டு
இருமல்
குணமாகும்.
அடிக்கடி தாகம் எடுப்பவர்கள் வாழைத்தண்டை இடித்து சாறெடுத்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
காது சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த சுத்திகரிப்பு போன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சூப் குடித்து வாருங்கள்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை இருப்பவர்கள் வாழைத்தண்டை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை தீரும்.
விஷ கடிகள்
பாம்பு கடித்தாலோ அல்லது விஷப் பூச்சகள் ஏதாவது தீண்டிவிட்டாலோ உடனே அந்த இடத்தை விஷம் ஏறாமல் இருகு்க கீறி விடுவார்கள். அதன்பின், அந்த இடத்தில் வாழைத்தண்டு சாறை தடவி விட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு குடிக்கக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் எப்பேர்ப்பட்ட விஷமும் முறிந்துவிடும்.
தீக்காயங்கள்
தீக்காயங்கள் வெகு நாட்களாக ஆறாமல் இருந்தால், வாழைத்தண்டை எடுத்து நெருப்பில் சுட்டு, அந்த சாம்பலை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து குழைத்துத் தடவுங்கள். எப்படிப்பட்ட தீக்காயமும் ஆறிவிடும்.
கடுக்காயும் வாழைச்சாறும்
வாழைச்சாறுடன் கொஞ்சம் கடுக்காயை சேர்த்து கலந்து சாப்பிட ஆசனவாய் எரிச்சல், மூலநோய் ஆகிய பிரச்னைகள் தீரும்.
வாழைப்பூ சாறு
கை, கால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும். வாழைப்பூச்சாற்றுடன் கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்தும் பருகலாம்.
வாழைச்சாறு கடும் துவர்ப்புச் சுவையுடையது தான். அப்படியே குடித்தால் முழு பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கொடுப்பதானால் வெல்லமோ அல்லது பனை வெல்லமோ கலந்து கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது நல்லது.