Just In
- 5 hrs ago மேஷ ராசியில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாத தொடக்கம் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago இதுல உங்க நெற்றி எந்த மாதிரி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு ரகசியத்தை சொல்றோம்...
- 8 hrs ago 1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
- 11 hrs ago இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கும்...
Don't Miss
- News வார் ரூம்.. காங்கிரஸ் மேலிட டீலிங்.. சசிகாந்த் செந்தில் சீட் வாங்கியது எப்படி? பரபர பின்னணி தகவல்!
- Sports என்னை வச்சி தானே விளம்பரம் பண்றீங்க.. அஜித் அகாருக்கு விராட் கோலி மறைமுக குட்டு
- Automobiles அகமதாபாத் வேற லெவலில் மாற போகுது!! புல்லட் இரயிலில் இருந்து எல்லாமே வருது... ஓப்பனாக பேசிய மத்திய அமைச்சர்!
- Movies Actress Nayanthara: நயன்தாராவை இயக்கும் சசிகுமார்.. லைன் கட்டும் அடுத்தடுத்த படங்கள்!
- Finance போயிங் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா.. கோளாறு நிறைந்த 737 MAX விமானம்..!!
- Technology அப்போ.. மும்பை ஃபைனல் வர்றது கன்ஃபார்ம்-ஆ.. அடுத்த 3 மாசத்துக்கு மஜா.. முழுசா 200GB.. Jio IPL பிளான்!
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
நுரையீரல் வலியை குணப்படுத்த சாப்பிட வேண்டியவை
நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சுவலியுடன் இருக்கும்போது மூச்சை உள்ளிழுப்பதும் சரி வெளிவிடுவதும் சரி மிக கடினமாய் இருக்க
உங்களின் நுரையீரலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் வீக்கம் உங்களுக்கு கடுமையான நெஞ்சுவலியை ஏற்படுத்தக்கூடும். அப்படி நெஞ்சுவலியுடன் இருக்கும்போது மூச்சை உள்ளிழுப்பதும் சரி வெளிவிடுவதும் சரி மிக கடினமாய் இருக்கும். பிளேரிசி என்பது உங்கள் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் ஏற்படும் வீக்கமாகும். சிலருக்கு இதயத்திற்கும், நுரையீரலுக்கும் இடையே உள்ள திரவத்தால் கூட ஏற்படும்.
நுரையீரல் தொடர்பான தொற்றுநோய்களான நிமோனியா போன்றவையும் இது ஏற்பட காரணமாக இருக்கலாம். இந்த பிளேரிசியை குணப்படுத்த தடுப்பு மருந்துகள், வலிநிவாரணிகள் பல வழிகள் உள்ளது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களின் மூலம் இந்த நுரையீரல் வீக்கத்தையும், வலியையும் குணப்படுத்தலாம். எந்த பொருட்கள் நுரையீரல் வலியை குணப்படுத்தும் என்பதை இங்கே பார்க்கலாம்.
வலிக்கும் புறமே படுத்தல்
இது கொஞ்சம் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் இது பலனளிக்க கூடிய ஒன்று. பிளேரிசியால் நுரையீரல் வலி ஏற்படும்போது எந்த பக்கம் வலிக்கிறதோ அந்த பக்கமே அதிக அழுத்தம் கொடுத்து படுப்பது வலியை குறைக்கும். அதிக அழுத்தம் கொடுத்து படுக்கும்போது அங்கே மார்பு செயல்பாடுகள் குறையும்.
பூண்டு
நெஞ்சு வலியின்போது பூண்டு சாப்பிடுவது நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைபிடிக்கபட்டுவரும் ஒன்றாகும். பூண்டில் இயற்கையாகவே உள்ள ஆர்கனோசல்பர் வீக்கத்தை கட்டுப்படுத்தும் குணமுடையது. அதுமட்டுமின்றி இது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தினமும் காலை வெறும்வயிற்றில் சில பூண்டுகளை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் நுரையீரல் வீக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
தேன்
இயற்கையாகவே தேன் ஒரு மருந்தாகும். பழங்கால மருத்துவ குறிப்புகளிலேயே தேனை நுரையீரல் நோய்க்களுக்கு பயபப்டுத்தியதாக குறிப்புகள் உள்ளது. இதிலுள்ள TNF அழற்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் வீக்கத்தை குறைக்கும். மருத்துவரீதியாகவும் தேனை எடுத்துக்கொள்வது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புரோஸ்டாலான்டின் E2 ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிளேரிசி தேநீர்
அசுகிபாஸ் திபெரோசா என்னும் இந்த இலை நுரையீரல் வீக்கமின்றி அனைத்து விதமான வீக்கத்தையும் குணப்படுத்தும் திறன்கொண்டது. மேலும் நுரையீரல் தொடர்பாக ஏற்படும் நிமோனியாவையும் இது குணப்படுத்தும். இதனை தேனீராகவோ அல்லது கஷாயமாகவோ காய்ச்சி குடிப்பது உங்கள் காய்ச்சல் மற்றும் வீக்கத்தை விரைவில் குணஓடுதும். ஒருநாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை குடிக்கக்கூடாது.
மஞ்சள் பால்
தன்னுடய அதிக நோயெதிர்ப்பு சக்திக்காகவே புகழ்பெற்ற ஒன்று மஞ்சள். மஞ்சள் பிளேரிசியால் ஏற்படக்கூடிய நெஞ்சுவலியை குணப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் ஏனெனில் இதிலும் தேனைப்போலவே புரோஸ்டாலான்டின் E2 அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி இது நுரையீரலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாலில் மஞ்சள் தூளை போட்டு நன்கு கொதிக்கவைத்து தூங்குவதற்கு முன் குடிக்கவும்.
இஞ்சி தேநீர்
உங்களின் நுரையீரல் வலியை குணப்படுத்தக்கூடிய மற்றொரு அற்புத பொருள் இஞ்சியாகும். இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளது, இது வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் வழங்கும். அதுமட்டுமின்றி இது எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் பெற்றது. இஞ்சியை நீரிலே அரைமணிநேரம் ஊறவைத்து, அதன்பின்னர் தேநீர் தயாரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.
சீரகம்
உணவில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படும் சீரகம் உண்மையில் ஒரு மருந்துப்பொருளாகும். இதிலுள்ள காரவன் என்னும் மூலப்பொருள் வீக்கங்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. இயற்கை வலி நிவாரணியான இதை அரை அல்லது கால் ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின்னர் குடித்தால் நெஞ்சு வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
துளசி
பல மருத்துவ குணங்களை கொண்ட துளசி நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதில் உள்ள காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பணியை சிறப்பாக செய்கிறது. மார்பு வலியை ஏற்படுத்தக்கூடிய பேத்தோஜனை இது குறைக்கிறது. துளசியை பச்சையாகவோ அல்லது காயவைத்து தேனீராகவோ தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.