Just In
- 7 min ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 46 min ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 1 hr ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
Don't Miss
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஓயாத இருமலை நிரந்தரமாக விரட்ட நினைக்கிறீர்களா? இந்த பாட்டி வைத்தியம் கை கொடுக்கும் !!
இருமல் தொற்று மற்றும் அலர்ஜியினால் வருவது. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இருமலை குணப்படுத்த இந்த இயற்கை வைத்தியம் பலனளிக்கும்
நுரையீரலில் கிருமிகளின் தொற்று , மாசுபட்ட காற்று, தூசு ஆகியவை தாக்கும்போது, எதிர்ப்பை காட்டும் விதமாக நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அலர்ஜியை உண்டாக்குவதே இருமல்.
காய்ச்சல், நுரையீரல் அலர்ஜி, நிமோனியா, காச நோய் ஆஸ்துமா ஆகியவற்றால் இருமல் உண்டாகும். குழந்தைகளுக்கு எளிதில் நுரையீரல் தொற்று உண்டாகும்.
இருமலுக்கு காரணம்
மூக்கின் வழியாக கிருமிகளின் தாக்கம் உருவாகும்போது அவை தொண்டைக்கும் பரவும். அங்கே மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருமலை உண்டாக்குகிறது.
இந்த இருமல் இருவகையில் வரும். கிருமிகள் தாக்கத்தில் தொண்டையில் சளி உருவாகி அதனால் உண்டாகும். அதனை சரியாக கவனிக்காத போது நுரையீரலுக்கும் பரவி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இன்னொரு வகை அலர்ஜியினால் உண்டாவது. தூசு, ரசாயனம் மற்றும் பல வித காரணங்களால் அலர்ஜி ஓயாத வறட்டு இருமலை தரும்.
இயற்கை வைத்தியம்.
இருமல் உடனடியாக நிற்க மாய மந்திரம் என்று எதுவுமில்லை. உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்பட்டு கிருமிகளை அழிக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் உடனடியாக நிற்க வேண்டுமென ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொள்ள வேண்டியது வரும். இதனால் பக்க விளைவுகள் உண்டாகலாம்.
இருமலை நிரந்தரமாக குணப்படுத்த நமது இந்திய பாரம்பரியத்தில் பலவகை வைத்தியங்கள் செய்யபப்டுகிறது. அதில் ஒன்றுதான் இந்த சிகிச்சை செய்து பாருங்கள். பலனளிக்கும்.
தேவையானவை :
பால்- 1 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை மஞ்சள் கரு - 1
செய்முறை :
பாலை சூடுபடுத்துங்கள். நன்றாக பொங்கும்போது முட்டையின் மஞ்சள் கருவை போடவும். சில நிமிடங்களுக்கு கலக்கவும். பின்னர் அடுப்பை அணைத்திடுங்கள்.
பருகும் முறை :
பால் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதில் தேன் கலந்து பருகுங்கள். தினமும் இரவு உணவு முடிந்ததும் இந்த பாலை குடிக்க வேண்டும்..
உங்களுக்கு விரைவில் பலனளிக்கும். முயன்று பாருங்கள்.