Just In
- 51 min ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 3 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
Don't Miss
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நாய் கடிச்சிடுச்சா?... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...
நாய் கடித்துவிட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொற்றுக்கள் எப்பொழுதுமே மிகவும் ஆபத்தானவை. வீட்டில் அழகான செல்லப் பிராணிக்ள வளர்ப்பது யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, வீட்டுக்கும் பாதுகாப்பு. அப்படி ஆசை ஆசையாக வளர்க்கும் நாயுடன் நாமும் வீட்டி்ல உள்ள குழந்தைகளும் விளையாடுவது வழக்கம் தான். அப்படி விளையாடுகிற பொழுது, நாயைத் தடவிக் கொடுப்பது, முடியைக் கோதிவிடுவது, வாலை பிடித்து இழுப்பது, மிதிப்பது போன்றவற்றைச் செய்வோம். அது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் உங்கள் செல்லப் பிராணிக்கு?
அந்த சமயத்தில் நம்மை துன்புறுத்துகிறார்கள் என்று நினைத்து, தன்னுடைய கூர்மையான பற்களால் கீறவோ கடித்து விடவோ செய்யும். நம் வீட்டு நாய் மட்டுமல்ல, ரோட்டில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ரோட்டில் போகும் ஏதாவது ஒரு நாய் கடித்தோ, பற்களால் கீறவோ செய்துவிடும்.
நாய்க்கடி
அப்படி ஏதாவது நாய் கீறலோ அல்லது கடிக்கவோ செய்துவிட்டால், உடனே அதற்கு சரியான முதலுதவி செய்ய வேண்டும். அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடவோ, சாவகாசமாக மருத்துவமனைக்குச் செல்வதோ கூடாது. உடனடியாக சில விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியம்.
நாயினுடைய பற்கள் உங்களுடைய தோல் திசுக்களைக் கவ்வியிருக்கும். மிகச்சிறியதாக பல் பட்டிருந்தாலும் அது ஆபத்து தான். ஒருவேளை காயம் ஏதாவது உங்கள் கண்ணில் பட்டால், அந்த தொற்று பரவாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முதலில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் முன் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
MOST READ: இந்த பூ பார்த்திருக்கிங்களா? ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...
மெதுவாக அழுத்துங்கள்
நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள். பாக்டீரியாக்கள் உள்ள ரத்தம் (விஷ ரத்தம்) உள்ளே சென்றாலும் அதை நீங்கள் அழுத்தும்போது வெளியே வந்து விடும். மேலும் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும்.
கழுவுங்கள்
நாய் கடித்த இடத்தை மென்மையான சோப்பும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டோ கழுவுங்கள்.
சுத்தமான துணி
நாய் கடித்த இடத்திலிருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். சுத்தமான துணியைக் கொண்டு வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள்.
MOST READ: 5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...
ஆன்டி-பயாடிக் க்ரீம்
காயமுள்ள இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆன்டி- பயாடிக் க்ரீம் போட்டு விடுங்கள்.
கட்டு போடுங்கள்
ஆன்டி பயாடிக் க்ரீம் அப்ளை செய்தவுடன் அதன்மேல் சிறிது காட்டனை வைத்து, மேலே மெல்லியதாக ஒரு கட்டு போடுங்கள்.
திரும்ப திரும்ப மாற்றுங்கள்
குறைந்தது இரண்டு மணி நேரத்து ஒருமுறையாவது,அந்த கட்டை பிரித்து, மீண்டும் துடைத்துவிட்டு வேறு கட்டு போடுங்கள்.
MOST READ: அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி தரப்போற ராஜயோகம் எந்த ராசிக்குனு தெரியுமா?
தொற்றுகள்
நாய் கடித்த இடத்தில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். கடித்த இடத்தில் வீக்கம், சிவந்து இருப்பது, வலி, அதனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.