Just In
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 7 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
4 சொட்டு நல்லெண்ணெய உங்க சிறுநீர்ல விடுங்க... என்ன நோய் இருக்குனு தெரிஞ்சிடும்...
சிறுநீரில் எண்ணெய் விட்டு பார்ப்பதின் மூலம் உடல் நோயை அறிந்து கொள்ளும் முறைகளைத் தான் உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறோம். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
பொதுவாக ஏதாவது பரிசோதனைக்குச் சென்றால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரத்தப் பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் தான். அதே பரிசோதனையை நம்முடைய முன்னோர்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து பார்த்திருக்கிறார்கள்.
சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெய் விட்டு பார்த்தாலே போதும் நமக்கு என்ன மாதிரியான நோய்கள் இருக்கின்றன என்பது தெரிந்து விடும். அதை எப்படி சரி செய்ய வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிறுநீர் பரிசோதனை
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையின் மூலமும் அதன் முடிவுகளை வைத்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் வைத்து நம்முடைய உடலின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த மருத்துவர்களின் துணையும் இல்லாமல் தங்களுடைய சிறுநீரை வைத்து தாங்களாகவே பரிசோதனை செய்து என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் பரிசோதனை அவ்வளவு கடினமானதெல்லாம் கிடையாது. மிக எளிமையாக செய்யக்கூடிய பரிந்துரை தான். அந்த முறையை நாமும் எளிமையாக செய்ய முடியும்.
MOST READ: வெங்காயம் இல்லாம சமைக்கவே முடியாதா? அதுக்கு பதில் இந்த சூப்பர் பொருள் இருக்கே?
மூன்று விஷயங்கள்
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று விஷயங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறதோ அதைத் தெரிந்து கொண்டாலே போதும் அதை எளிமையாக நாம் குணப்படுத்திவிட முடியாது.
அதைத் தான் சித்தர்கள் சிறுநீர் மூலம் எதில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள். அதை வைத்து நோயையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
எப்படி செய்யலாம்?
முன்னோர்கள் செய்ததை நாமும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். காலையில் நாம் தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் உங்களுடைய சிறுநீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெயை விடுங்கள். அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள்.
எப்படி கண்டுபிடிப்பது?
ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் சிறுநீரை எடுத்துப் பாருங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் போதுமானது. அந்த எண்ணெயில் வடிவம் எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து நம்முடைய உடலில் உள்ள பிரச்சினையை சரிசெய்து விடலாம்.
MOST
READ:
கற்றாழைய
கசக்காம
எப்படி
சாப்பிடறது?
யாரெல்லாம்
தெரியாம
கூட
சாப்பிட
கூடாது?
வாதம் அதிகம்
ஓரமாக வைக்கப்பட்ட சிறுநீரின் மேல் நீங்கள் விட்ட நல்லெண்ணெய் கயிறு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுடைய உடலில் வாதம் அதிக அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
பித்தம் அதிகம்
கயிறு போல இல்லாமல் இதுவே நீங்கள் சிறுநீரில் விட்ட எண்ணெய் வட்ட வடிவில் மோதிரம் போன்று இருந்தால் உங்களுடைய உடலில் பித்த நோய் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
கபம் அதிகம்
இவை இரண்டும் இல்லாமல் சிறுநீரின் மீது நீங்கள் விட்ட எண்ணெய் முத்துப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டிருந்தால் உங்களுடைய உடலில் கபம் அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தம்.
MOST
READ:
இன்று
தட்சிணாமூர்த்திக்கு
சுண்டல்
மாலை
போட
வேண்டிய
ராசிக்காரர்கள்
யார்?
எண்ணெய் பரவினால்
இந்த மூன்றுமே இல்லாமல் சிறுநீரில் நீங்கள் விடும் எண்ணெய் சிறுநீருக்குள் வேகமாகப் பரவிச் சென்று விட்டால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடும் தன்மை கொண்டிருக்கிறது என்று பொருள்.