Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க காது நம நமனு அரிக்குதா? ஏன் தெரியுமா? என்ன செஞ்சா அரிப்பு நிக்கும்?
காது மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி. ஏனெனில் இது ஏராளமான நரம்புகளால் ஆனது. காதுகளின் உள்ளே இருக்கும் இந்த சிறிய நார்கள் நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு அப்படியே காது தொற்றாக மாறி விடும். பல பேர்கள் இப்படி அரிக்கும் போது சும்மா இருப்பதில்லை.
சாவி, பென்சில், பேப்பர், பின் என்று எதையாவது கொண்டு காதை குடைய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் காதின் உள்ளே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வறண்ட காது சருமமும் அரிப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இப்படி கண்டதையும் வைத்து காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றலாம்.

கற்றாழை ஜெல்
காதுகளில் ஏற்படும் அரிப்பை போக்க கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. உங்கள் தலையை ஒரு பக்கமாக சரித்து கொண்டு 3-4 சொட்டுகள் கற்றாழை ஜெல் சாற்றை காதில் விடலாம். இது காதின் pH அளவை சமநிலைக்கு கொண்டு வருகிறது. இதனால் அரிப்புற, வறட்சி மற்றும் தொற்று குணமாகி விடும்.
MOST READ: கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க

இஞ்சி
இஞ்சியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. வெதுவெதுப்பான இஞ்சி ஜூஸை எண்ணெய்யுடன் சிறிது கலந்து காதின் ஓட்டை பகுதியில் தடவி விடுங்கள். காதுக்குள் நேரடியாக ஊற்ற வேண்டாம்.

எண்ணெய்
காதில் உள்ள அரிப்பை போக்க நிறைய எண்ணெய்கள் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் ஆயில், டீ ட்ரி ஆயில் போன்றவற்றை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக காதில் ஊற்ற வேண்டும். வெளியே வரும் எண்ணெய்யை ஒரு பஞ்சை கொண்டு துடைத்து விடுங்கள்.
MOST READ: தினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும்

பூண்டு
பூண்டில் ஆன்டி பயாடிக் மற்றும் புண்ஆற்றும் பண்பு உள்ளது. நசுக்கிய பூண்டு துண்டுகளை ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். எண்ணெய்யை வெதபவெதுப்பாக காதில் இட வேண்டும். இதுவும் அரிப்பு நீக்க உதவுகிறது.
மேற்கண்ட எளிய முறைகள் உங்கள் காது அரிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.