Just In
- 4 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 8 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"கண்மணி நீ வர காத்திருந்தேன்"- எந்த பாட்டு எந்த நோயை குணப்படுத்தும் ?
சோகங்களையும் நோய்களையும் போக்கும் சினிமா பாடல்கள் எவையென இந்த கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிலர், மன அழுத்தம் ஏற்பட்டு மனச்சோர்வடையும் நேரங்களில், தங்களுக்கு பிடித்த இசையை ஒலிக்கவிட்டு தியானம் செய்வது போல, அமைதியாக அமர்ந்து விடுவர், இதயத்தை வருடி அவர்களை மன அமைதிப்படுத்தும் அந்த இசையைக் கேட்டபின்னர், மன அழுத்தம் நீங்கி, இயல்பு நிலைக்குத் திரும்புவர். நல்ல இசை எப்போதும், நம்மை இளமையாக வைத்திருக்கும், நல்ல இசை என்பது, காதுகளில் இல்லை, நம் மனங்களில் இருக்கிறது!
நாம் அறிந்திருப்போம், கர்நாடக சங்கீத பாடகரோ, திரை இசைப் பாடகரோ குரல்வளம் உள்ளவரை, அவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். டி.எம்.எஸ் அவர்கள் வயது முதிர்ந்த நிலையிலும் கணீர் குரலில் பாடி, முதிர்வு என் உடலுக்குத்தான், குரலுக்கு இல்லை என்று நிரூபித்தவராயிற்றே.
ஜானகி அம்மா அவர்களும் எண்பதைக் கடந்த அகவையிலும், பாடி, தற்போதுதான், அவராகவே, அதுவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க நான் விலகுகிறேன் என்று கச்சேரிகளில் பாடுவதில் இருந்து விலகிக்கொண்டார்கள்.
பாடகர்கள் தான் என்றில்லை, இசையமைப்பாளர்கள், வாத்தியங்கள் வாசிப்போர் யாவரும் தம் வாழ்நாள் வரை, இசையோடே வாழ்கிறார்கள், வாழ்வதோடு மட்டுமல்ல, மனதில் என்றும் இளமையுடனேயே இருக்கிறார்கள், அதனால்தானே, முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் பாடிய பாடல்கள், அமைத்த இசையை இன்றும் ஞாபக மறதி இன்றி, பிசிறு தட்டாமல் பாடவும், இசைக்கவும் முடிகிறது என்றால், அதுதான் இசையின் சிறப்பு!
நமக்கு பிடித்த இசையை, நாம் இரசிக்க, நல்ல கேட்கும் திறனுடன், நினைவு ஆற்றல் மிகுந்து, வயோதிக நிலையிலும், உடல் தளர்வின்றி, உற்சாகமாக இயங்க முடிகிறதென்றால், அதற்கு காரணம் இசையே, என்பதை விரிவாகக் காண்போம்.