Just In
- 21 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விஷத்தை முறித்து சக்தியை தரும் ஒரு அற்புத கீரை எது தெரியுமா? சீமை அகத்தி!!
சீமை அகத்திக் கீரையின் நன்மைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
ஆற்றல்மிக்க ஒரு கீரை வகைச் செடியான அகத்தியின் தாவர குடும்பத்தில் உள்ள மற்றொரு பயன்மிக்க ஒரு செடியினம் தான் காட்டுச் சென்னா எனப்படும் சீமை அகத்தி.
இந்த செடியின் அழகிய மலர்கள், ஏற்றி வைத்த மெழுகுவர்த்திகள் போலக் காணப்படுவதால், இந்தச் செடியை தங்க மெழுகுவர்த்தி செடி என்றும் புதர் மெழுகு வர்த்தி செடி என்றும் அழைக்கின்றனர்.
சாதாரண மண்ணிலும், ஈரமான ஆற்று மணற்படுகைகளில், ஆற்றங்கரை ஓரங்களில் வளரும் தன்மை மிக்கது, சீமை அகத்தி. தமிழகத்தின் மலைகள் நிரம்பிய தென் மாவட்டங்களில் அதிகமாக வளர்கிறது, சீமை அகத்திச் செடி.
பனிரெண்டு அடி உயரம் வரை புதர் போல மண்டி வளரும் தன்மை கொண்ட சிறு மரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலைகள் நீண்ட அமைப்பைக் கொண்டிருக்கும், இதன் அழகிய பூக்கள் உதிர்ந்தபின், காய்கள் அடுக்காக காய்க்கும் தன்மைகொண்டவை.
பொதுவாக விதைகள் மூலம் வளர்க்கப்படும் சீமை அகத்தி, நமது நாட்டில் அழகுக்காக, சாலையோரங்களில், வீடுகளில், தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.
சிறந்த மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது, சீமை அகத்தி. இதன் இலை, மலர்கள், காய் மற்றும் மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.