Just In
- 14 min ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 1 hr ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 2 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- 3 hrs ago சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
9 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா - மருத்துவர்கள் போராடி நீக்கினர்!
பெங்களூருவில் இளம்பெண் ஒருவரின் நுரையீரலில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த பேனாவை, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
பெங்களூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நீண்ட காலமாக துர்நாற்றம் வீசும் வகையிலான சளித் தொல்லையாலும், இருமல் தொல்லையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணம் என்ன என்று பரிசோதனை செய்த போது தான். அப்பெண்னின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது...
ரேணுகா!
பெங்களூரை சேர்ந்த 19 வயதே ஆன இளம் பெண் ரேணுகா, இவருக்கு அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையில் சளித்தொல்லை ஏற்பட்டு வந்தது. இதை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்த போது தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் உண்மை தெரியவந்தது.
ராஜீவ் காந்தி சிகிச்சை மையம்!
பெங்களூருவில் இருக்கும் ராஜீவ்காந்தி மார்பக நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார் ரேணுகா. அப்போது ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள். ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனாவின் சில பாகங்கள் சிக்கியிருப்பதை அறிந்தனர்.
தொல்லை!
நுரையீரலில் சிக்கியிருந்த அந்த பேனா பாகங்களின் காரணத்தால் தான் அடிக்கடி துர்நாற்றம் வீசும் வகையிலான சளித்தொல்லை, இருமல் போன்ற தொல்லைகளால் ரேணுகா பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
உள்ளுறுப்புகள் சேதம்!
நீண்ட காலமாக ரேணுகாவின் நுரையீரலில் உடைந்த பேனா பாகங்கள் தங்கியிருந்ததால் உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டு சிதைந்து போகும் நிலைக்கு ஆளாகியிருந்தன.
குறிப்பாக இதன் காரணமாக தான் சளியில் துர்நாற்றம் வீசியிருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அறுவை சிகிச்சை!
இதையடுத்து, ரேணுகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நுரையீரலில் தங்கியிருந்த பேனா பாகங்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இந்த அறுவை சிகிச்சை தென்னிந்திய மருத்துவ வரலாற்றில் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.