For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலைவனத்தில் கூட வளரும் இந்த அதிசய மரத்தின் மருத்துவ நன்மைகள்

பாலையிலும் வளரும் தன்மை கொண்ட எழிலைப் பாலை பற்றிய கட்டுரை

By Gnaana
|

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதியதை, தங்கள் நோட்டுக்களில், எழுதிக்கொள்வது, பெரும்பாலான மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கசப்பான இடும் கட்டளையாக, இருந்திருக்கும், இதுவே, சமயங்களில் கல்லூரிகள் வரை தொடரும்போது, மாணவர்கள், சலித்துக்கொள்வர். இன்னும் நம்மை ஆசிரியர்கள், எழுதச் சொல்கிறார்களே என்று.

ஆயினும், எழுத எழுதத் தான், பாடங்கள் புரியும். மேலும், ஒவ்வொரு வருடமும் வரும் புதிய மாணவர்களுக்காக, அந்த ஆசிரியர் இன்னும் கரும் பலகையில் எழுதிக்கொண்டிருக்கிறாரே, ஏன், அவர் எழுத வேண்டும்? புத்தகத்தைப் பார்த்து எழுதிக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிடலாமே!

அவர் எழுதுவதைப் பார்த்து, மாணவர்கள், தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொள்ளும்போதுதான், அது மனதில் விரைவாகப் பதிகிறது.

இங்கே, பாடம் நடத்துவது, நமது கட்டுரையின் நோக்கம் இல்லை, பாடம் நடத்த பேருதவி செய்யும் கரும்பலகையே, நமது பொருள். பள்ளி முதல் கல்லூரி வரை, எல்லா இடங்களிலும், ஆசிரியர் மாணவர் இடையே, அறிவுப் பாலமாக இருக்கும், கரும்பலகை எந்த மரத்தில் இருந்து செய்யப்படுகிறது, என்று நாம் அறிவோமா?
அந்த மரத்தை அறிமுகப்படுத்தத் தான், பள்ளிப்பருவ, பழைய நினைவு அலைகள்!.

அடர்ந்த பசுமை மாறாத காடுகளில், வாழும் தனிச்சிறப்புள்ள மரம், ஏகாளி மரம். இதற்கு ஏழிலைக்கள்ளி மற்றும் பேய் மரம் என்றும் பெயர் உண்டு. பொதுவாக, ஏழிலைப் பாலை என்று அழைக்கப்படும் இந்த மரமே, பள்ளி வகுப்புகளில், உள்ள கரும்பலகையை உருவாக்கி, அறிவாற்றல் மிக்க வருங்காலத் தலைமுறைகளை வெளிக் கொண்டு வருவதில், பெரும் பங்கு வகிக்கிறது.

ஒரே காம்பில் ஏழு இலைகளைக் கொண்டு காணப்படுவதால், ஏழிலைப் பாலை மரம் என்று அழைக்கப்படும் இந்த மரம், நடுத்தர உயரங்களில் வளரும். சற்றே பால் சுரக்கும் தண்டுகளையும், பசுமை கலந்த மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட இந்த மரம், தமிழகத்தில் உள்ள மலைத் தொடர்களில் அதிகம் காணப்படுகிறது. தற்காலம் நகரங்களில் அதிக இடங்களில் வளர்க்கப்படுகின்றன. சப்த பர்னா என்று வட மொழியில் அழைக்கப்படும் ஏழிலைப் பாலை மரம், பல ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்கது.

சங்க காலத்தில் நமது முன்னோர்கள் வசிக்கும் நிலப்பரப்பை ஐந்து வகையாகப் பிரித்து வாழ்ந்து வந்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை நிலம் என்று.

இந்த ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வகை வாழ்க்கை முறையும், நெறிகளும் மட்டுமல்ல, அந்த நிலத்திற்கென்று தனி மரம், செடிகள், உணவு, தானியங்கள் என்று அனைத்திலும், நிலப்பகுதிகள் வேறுபட்டு திகழும். அந்த வகையில், கடும் வறட்சியைத் தாங்கி, பாலை நிலத்தில் வளரும் ஒரு மரம் தான், பெயரிலேயே பாலை எனக் கொண்டிருக்கும், ஏழிலைப் பாலை மரம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Alstonia Scholaris

Health benefits of Alstonia Scholaris
Story first published: Friday, December 1, 2017, 13:12 [IST]
Desktop Bottom Promotion