Just In
- 6 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 51 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
Don't Miss
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காலையில் எழுந்ததும் நீங்கள் குடிக்கும் இந்த பானம் மார்பக புற்று நோயை தடுக்கும் !!
காலையில் நமக்கு புத்துணர்வு தரும் வகையில் நாம் குடிக்க தேர்ந்தெடுப்பது காபி மற்றும் தே நீர்தான். அத்தகைய பாங்களின் நன்மைகளையும் , குடிப்பதால் உண்டாகும் நன்மைகளையும் பற்றிதான் இந்த கட்டுரை.
காலையில் எழுந்ததும் நீங்கள் என்ன குடிக்கிறீர்கள்? காஃபி? தேநீர்? அல்லது பால்?
இரவு முழுவதும் காலியாக்கப்பட்டு இருக்கும் வயிற்றில் காலையில் நீங்கள் அருந்தும் பானம் மிக முக்கியமானதாகிறது.
நீங்கள் குடிக்கும் மிக முக்கியமான காபி மற்றும் தேநீரில் எது நல்லது என ஆராய்ச்சி கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடந்தது. அதனைப் பற்றி காண்போம்.
காபி :
காபியிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும். செரடோனின் சுரப்பதை தூண்டும். இதனால் புத்துணர்வுடன் இருக்க முடியும்.
தேநீர் :
நீங்கள் தேநீர் அதுவும் குறிப்பாக க்ரீன் டீ குடிப்பவராக இருந்தால் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் அதனை வைத்து நடந்த ஆராய்ச்சியில் பல மகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்தன.
மார்பக புற்று நோயின் வீரியம்!!
மார்பக புற்று நோய் இருந்தவர்களுக்கு க்ரீன் டீ தினமும் காலையில் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வந்ததைப் பார்த்து ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் வந்தது.
ஆராய்ச்சி :
சுமார் மாற்றபக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 6 மாதங்களாக க்ரீன் டீ கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்களின் ரத்தம் மற்றும் சிறு நீர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
முடிவு :
இதில் புற்று நோய் செல்வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் hepatocyte growth factor என்ற பொருள் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் புற்று நோய் பெருகாமல் தடுக்கப்பட்டது.
ப்ரோஸ்டேட் புற்று நோயின் வீரியம் :
அதுபோல் புரோஸ்டேட் புற்று நோய் இருப்பவர்களும் க்ரீன் டீ குடிப்பதால் புற்று நோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது என கலிஃபோனியா பல்கலைக் கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயை தடுக்கலாம் :
தினமும் காலையில் க்ரீன் டீயை குடித்தால் புற்று நோய் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.