Just In
- 28 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Movies 2 திருமணம்.. 2 விவாகரத்து..ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தோல் நோய்களை குணமாக்கும் தாமரைக்கிழங்கு
அடங்கியுள்ள சத்துக்கள்
தாமரைக்கிழங்கில் வைட்டமின் சியும் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடென்டலும் உள்ளது. இதில் உள்ள பி - 6 வைட்டமின் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தேவையற்ற டென்சன் அதன்மூலம் ஏற்படும் தலைவலியை போக்குகிறது. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.
தாமரைக்கிழங்கில் காப்பர், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. தாமரைக்கிழங்கானது இனிப்பு மிக்கது. உடலில் சோடியம் , பொட்டாசியம் நிலையை 1:4 என்ற நிலையில் தக்க வைத்திருக்கும்.
இதயநோய் தீர்க்கும்
இருதயம் தொடர்புடைய நோய்களையும் போக்க வல்லது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இருதயத்திற்கு பலத்தை உண்டாக்கும். இந்த கிழங்கை நன்றாக உலர்த்தி, இடித்து சலித்து சூரணமாக்கி கொள்ள வேண்டும். கொஞ்சம் தூளை எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இதனால் ரத்த ஓட்டம் சீராகி இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். தேன் கிடைக்கவில்லை என்றால் தாமரைக்கிழங்கு சூரணத்துடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்தும் சாப்பிடலாம். காலை மாலை இருவேளை சாப்பிட நோய்கள் நீங்கும்.
பித்தநோய் கட்டுப்படும்
நெஞ்சில் கபம், காசநோய், போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிறிதளவு தாமரைக்கிழங்கு தூளுடன் இஞ்சிச்சாற்றைக் கலந்து உள்ளுக்குள் சாப்பிட கபம் கரையும், காசநோய் குறையும். இது எளிய வைத்தியமுறையாகும். இந்த தூளை காய்ச்சிய பசும்பாலில் கலந்தும் தாரளமாகச் சாப்பிடலாம். அதற்குரிய மருத்துவ குணத்தில் மாற்றம் இருக்காது. பித்தம் தொடர்புடைய தொல்லைகளும் நீங்கும். வயிற்றுவலி, பொறுமல் போன்றவையும் சமனப்படும்.
தோல் நோய்கள் குணமடையும்
தாமரைக்கிழங்கு தூளைக்கொண்டு கஷாயம் இறக்கலாம். இத்தூளில் கொஞ்சம் நீருடன், கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி உள்ளுக்குள் சாப்பிடலாம். இரத்தம் சுத்தமாகும். இத்துடன் தோல் தொடர்புடைய சொறி, சிரங்கு, தேமல் போன்றவையும் குணமடையும். இந்த கஷாயத்தோடு நல்லெண்ணெய்ச் சேர்த்து தைலப் பதத்தில் காய்ச்சி வடிகட்டி அதை தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். பித்தம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். தலைவலி போகும். கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்க வல்லது.